Saturday, February 27, 2016

அம்பேத்கர் பார்வையில் இந்திய மார்க்சியம்

புரட்சியாளர் அம்பேத்கர் மார்க்சியம் குறித்த தன் சிந்தனையில் சமூக
நலன்களை எதிர்பார்த்து உரசிவிடத் தயங்கியதில்லை,கம்யூன­ிஸ
சித்தாந்தத்தில் சாதிய பாகுபாடுகளும்,தீண்டா­மைகளும் இல்லையென்றாலும்
சாதியத்தை வேரறுப்பதற்கான சிந்தனைகள் இந்தியத்திலும்,இந்தி­ய
மார்க்சியத்திலும் முற்றுப்பெறாததாக இருக்கிறது என்கிறார் அம்பேத்கர்.
தீண்டாமை ஒழிப்பை மிக முக்கியானதாக அம்பேத்கர் திட்டவட்டமாக கருதினார்.
லெனின் இந்துஸ்தானில் பிறந்திருந்தால் முதலில் சாதிய வேறுபாடுகளை ஒடுக்க
பாடுபட்டிருப்பார், தீண்டாமை முற்றிலும் அவரால்
ஒழிக்கப்பட்டிருக்கும­்-(1926) என்கிறார் அம்பேத்கர். இவை இரண்டையும்
செயல் வடிவில் கொண்டுவராத மார்க்சியம் ஓர் மகத்தான புரட்சியை
முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் அம்பேத்கர் கருதினார். மேலும்
திலகர் ஒரு தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தால்
"சுதந்திரம் எனது பிறப்புரிமை" என முழக்கமிடாமல் தீண்டாமையை ஒழிப்பதுதான்
முதல் கடமையென திட்டவட்டமாக கூறியிருப்பார். லெனின்-திலகர் இவர்களை பற்றி
கூறும் போது அம்பேத்கர் சாதி ஒழிப்பினைதான் முதன்மையான புரட்சியெனவும்
அதற்கான முக்கியத்துவத்தையும்­ தெளிவுபடுத்துகிறார்.­ புரட்சி,சுதந்திரம்
என்பதை விட சாதி ஒழிப்பும், சமத்துவத்தை விரும்புவதும் மட்டுமே மக்கள்
விடுதலையென முழக்கமிடுகிறார் அம்பேத்கர். புரட்சியும் , சுதந்திரமும்
அரசியலை அடிப்படையாக கொண்ட மார்க்சிய சிந்தனைகளின் இயக்கப் பணிகள். ஆனால்
இந்தியத்தில் அரசியல் புரட்சியை விட சமூகப்பணியும், சமத்துவப் பணியும்
முக்கியமானது அதுவே பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை
பெற்றுத்தரும் என்று அம்பேத்கர் விடாப்பிடியாக இருந்தார். இந்தியாவில்
இந்து சமூக அமைப்பு முறையானது நால்வர்ண சாதிகளாலும் பல்வேறு
உட்சாதிகளாலுப் கடைசியாக தீண்டப்படாத ஒடுக்கப்பட்ட மக்களை பஞ்சமர்கள்
சாதியாலும் (Mr.காந்தி எங்களை ஹரிசன் என இழிபடுத்துகிறார்) பிரித்து
வைக்கப்பட்டிருக்கிறத­ு. இந்தப் பிரிவினைகள் என்றும் வேற்றுமைகளாக
மட்டுமல்லாது அடுக்கு முறையிலான ஏற்றத்தாழ்வுகளை கொண்டது சாதிகள்
ஒவ்வொன்றும் பிற சாதிகளை மிகக் கீழாக நடத்துகின்றன. சந்தேகப்பார்வையை
அவைகள் விதைக்கின்றன. இந்திய சாதிய அமைப்பு முறை ஒழிக்கப்பட்டால் சிலர்
அதிகாரம் இழப்பார்கள்,சிலர் அங்கீகாரம் பெறுவார்கள் . அதனால்தான் இந்து
சமூக அமைப்பில் பாட்டாளி வர்க்கத் தொழிலாளார் ஒற்றுமை உணர்வை
காணமுடிவதில்லை. இந்திய மார்க்சியம் அவ்வாறு பாட்டாளிகளின் ஒற்றுமையை
உண்மையாக விரும்பியிருந்தால் வர்க்க முரண்பாடுகளுக்கு உண்மையில் தீண்டாமை
என பெயரிட்டிருக்கும். சாதிய அமைப்பு முறை என்பது வேலைப்பகிர்வு
,வேலைப்பிரிவு என்பது மட்டுமல்ல அது தொழிலாளர்களையே பிரிக்கிறது
என்கிறார் அம்பேத்கர். சாதி என்பது வேலையை மட்டும் பிரிக்காமல் வேலை
செய்பவர்களையும் பிரிக்கிறது. இந்தப் பிரிவினையானது மதச்சட்ட
அடிப்படையிலும் மனுதர்ம சாதிய அடிப்படையிலும் உயர்வு,தாழ்வு என்கிற
கற்பனை அடிப்படையிலும் வகுக்கப்பட்டுள்ளது. எனவே சுரண்டப்பட்ட ஒரு ஏழை
சாதி இந்துவின் மீதுள்ள சாதி வெறியரின் சமூக அந்தஸ்து சமமாக இருக்க
முடியாது . பார்ப்பன வேலையாட்களுக்கும் தலித் தொழிலாளிகளுக்கும் இடையே
உள்ள சமூக ஏற்றத்தாழ்வையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் . இந்த
ஏற்றத்தாழ்வை கொஞ்சமும் கவனிக்காமல் புறக்கணித்த பொதுவுடமை இந்திய
மார்க்சியம் இவற்றுக்கெதிரான சாட்டையை எடுக்காததையும், லெனினியப்
பார்வையில் இருந்து இந்திய பொதுவுடமை விலகியதையும் அம்பேத்கர்
கண்டிக்கிறார். "தொழிற்சங்கவாதிகள் முதலாளித்துவத்திற்கு­ எதிராக அழகாகப்
பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் ஆனால் பார்ப்பானிய சாதி இந்துக்களுக்கு
எதிராக எந்த தொழிற்சங்க வாதியும் பேசியதை நான் கேட்டதில்லை (1938) என
அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அவரை பொருத்தவரை முதலாளித்துவம்
எந்தளவிற்கு சுரண்டல் சக்தியாக இருக்கின்றதோ அந்த அளவிற்கும் அதற்கும்
மேலாகவும் பார்ப்பானியமும் ஒரு சுரண்டல் சக்திதான்
என்கிறார்.ஏற்றத்தாழ்­வான இந்து சமூக அமைப்பானது தலித்துகளை அடிமைபடுத்தி
அவர்களை சுரண்டி எடுக்கிறது. பார்ப்பானியத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள
அடுக்குமுறை சூழலை எதிர்த்து பேசாதவரை இந்திய மார்க்சியம் காலத்திற்கு
நிற்காது அது படிப்படியாக தன் கோட்பாடுகளை இழந்து அழிந்துபோகும். இந்திய
மார்க்சியம் அவ்வாறான அழிவை விரும்பாது எனவும் நான் கருதுகிறேன்
என்கிறார் அம்பேத்கர். மேலும் இந்திய மார்க்சிய பொதுவுடமை சித்தாந்த
வாதிகள் மட்டும் மதத்தை பற்றியும்,கடவுளை பற்றியும் வெளியே உண்மையை பேச
ஆரம்பித்து விட்டார்கள் என்றால் இன்றைய சூழலில் (அதாவது 1929) ஒரு
தொழிலாளிகூட அவர்கள் பின்னால் செல்லமாட்டார்கள்-அம்­பேத்கர். இங்கே
காலச்சூழலுக்கு ஏற்ப மார்க்சியம் அது தன்நிலையிலிருந்து மாற்றிக்கொண்டு
தற்போதைய முதன்மை எதிர்ப்பு தீண்டாமை என்பதாக முன்னெடுத்துச் செல்லும்
பல்வேறு செயல்வடிவங்களையும், புரட்சி போராட்டங்களையும் முன்னெடுத்துச்
செல்லும் ஒரு முதன்மையான சமூக சிந்தனையை பெற்றிருக்கும் சக்தியாக
உறுவாக்கப்பட்டுவிட்ட­து என்பதையும் இந்தியத்தில் எல்லா பகுதிகளிலும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்கிற அமைப்பை உறுவாக்கிவைத்துள்ளது­
என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியமாக இருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...