Wednesday, February 24, 2016

கொத்தடிமைகளின் அழுகை செவியை மூடிக்கொண்ட இந்தியம்

சுதந்திர இந்தியாவில் தலித்திய பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல்
பழங்குடியினர்க்காக (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 இல்
இயற்றப்பட்டது. அதே சுதந்திர இந்தியாவில் 1976ல் கொத்தடிமை முறை ஒழிப்பு
சட்டம் இயற்றப்பட்டது . இவ்விரண்டு சட்டங்களையும் இங்கே குறிப்பிட
வேண்டிய அவசியமிருக்கிறது. பெரும்பாலும் இந்திய சமூகத்தில்
பொருளாதாரமற்று, ஏழை உழைப்பாளர் வர்க்கங்களாக தினக்கூலி தொழிலாளர்களாக
தங்கள் உடலுழைப்பை முதலாளியர்களுக்கு கொடுத்துவிட்டு முதலாளியர்களால்
பிரயோகிக்கப்படும் எல்லாவித கொடுமைகளையும் அனுபவிக்கும்
பெரும்பான்மையானோர் தலித் மற்றும் பழங்குடியின மக்களாக இருக்கிறார்கள் .
அதாவது பட்டியலின மக்கள். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக
உறுவாக்கப்பட்ட இவ்விறு சட்டங்களும் மத்திய,மாநில மற்றும் நீதித்துறையால்
முறையாக நிறைவேற்றப்படுகிறதா?­ என்றால் முற்றிலுமாக சட்ட புறக்கணிப்புகளே
இங்கே நடைமுறையில் இருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது. இதற்கிடையே
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்கொடுமையில்
ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் புதிய சட்டம்
ஜனவரி.26 .2016 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. வன்கொடுமையால்
பாதிக்கப்பட்ட தலித்தின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக­்கான வழக்குகளை
விரைவுபடுத்துவதற்காக­ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், பிரத்யேக அரசு
வழக்குரைஞர்களை நியமிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சி. / எஸ்.டி. மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்
திருத்த மசோதா (2015) நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு.
அந்தச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2015
டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து மத்திய அரசிதழில் கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு வெளியான
நிலையில் இன்னமும் முழுமையாக நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதே
மிகப்பெரும் அநீதியாக இருக்கின்றது. வன்கொடுமை சட்டம் அலைகழிக்கப்படுவது
போலவே இந்தியத்தில் கொத்தடிமை சட்டமும் மிக மோசமான நிலையில் மந்தமாகவும்
அல்லது செயல்படாமலும் இருக்கிறது என்பதற்கான சாட்சியாக மும்பை சம்பவம்
நமக்கு உணர்த்துகிறது. தலித் அருந்ததியர் சமுகத்தை சேர்ந்த மாரிமுத்து
என்கிற 15 வயது சிறுவனை மும்பை பகுதியில் கடந்த 7 மாதமாக மிட்டாய்
கம்பெனியில் கொத்தடிமையாக வேலைக்கு அமர்த்தி அச்சிறுவனை அடிமையாக
வைத்திருந்தது மட்டுமல்லாது , அந்த சிறுவனை மிட்டாய் கம்பெனி உரிமையாளர்
ரஞ்சித் தேவர் என்பவர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்து உடலில்
கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றி உள்ளார்.தற்போது இந்த சிறுவன்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறான். என்கிற
சம்பவம் உண்மையில் சக மனிதர்களுக்கு வலிக்க வில்லையா? அல்லது வலியானது
பழகிப்போனாதால் அப்படியே கடந்துபோக பழகிக்கொண்டார்களா? எனும் கேள்வி
நம்மிடையே எழுகிறது.
மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி வன்கொடுமை தடுப்புச்
சட்டத்திலும், கொத்தடிமைகள் தடுப்புச் சட்டத்திலும் கைது
செய்யப்படவேண்டியவர் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும் .
இம்மாதிரியான பல்வேறு சம்பவங்கள் இந்திய நாட்டில் நிகழ்ந்துக்கொண்டுதான­்
இருக்கிறது. இதனால் பாதுகாப்பற்ற நீதித்துறைமீது நம்பிக்கையற்ற
கொத்தடிமைகளின் நிலமை மிகமோசமாக இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு
ஆஸ்திரேலியா அமைப்பான வாக்ப்ரீடீ பவுண்டேஷன் நவீன அடிமை முறை குறித்து
162 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 3
கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர். எனவும் அவர்களில் 76 சதவீதம் ஆசியாவை
சேர்ந்தவர்கள். 3.78 சதவீதம் அமெரிக்கர்கள் எனவும் மிகமோசமான நவீன அடிமை
முறை பட்டியலில் "இந்தியா" 4வது இடத்தில் உள்ளது எனவும் இந்தியாவில்
மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைப்பதற்காக
கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும்
இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. இது உலக கொத்தடிமைகளில் 50
சதவீதம் ஆகும். எனவும் அதிர்ச்சி ஆய்வறிக்கையினை வெளியிட்டிருந்தது.
ஒருபுறம் சாதிய ரீதியான அடிமையையும், இன்னொருபுறம் பொருளாதார ரீதியிலான
அடிமையையும் அனுபவிக்கும் சாமானியர்களான கொத்தடிமைகளின் நிலைமை போகப்போக
மிகமோசமான சூழலுக்கு இட்டுச் செல்லும் என அச்சப்பட வைக்கிறது இன்றைய
கொத்தடிமைகளின் வாழ்வு நடவடிக்கைகள்.
ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகிற கருத்துக்கள்
ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் .
அதாவது முதலாளித்துவத்தின் கருத்துக்களே இங்கே ஏற்கப்படுகிறது அது
சாமானியனுக்கு எதிராக,,, இந்திய அரசு இதற்கான தீர்வழிகளை கொண்டுவந்து
சட்டங்களை கடுமையாக்குவது மட்டுமில்லாது அச்சட்டங்களை உடனடியாக
செயல்படுத்தவும் முனைந்திட வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...