Sunday, March 27, 2016

பேசும் இதயம் 6

உயிரெழுதும்
கவிதையில்
உறக்கம்
தொலைத்து
நிற்கிறேன்
யாரிடமோ
எனது
புன்னகை,,,
___________

உணவு , உறக்கம்
அமைதி,
ஆத்மார்த்தமென
அனைத்தையும்
துறந்து
ஒற்றைத் தாமரையில்
என் நிழலாடுகிறது
கேட்டு விடு
தாராளமாய் தருகிறேன்
நானென்பதை தவிர,,,
என்கது வேண்டும்
நம் காதல்
நினைவுகளை
சுமக்க,,,
___________

நீண்ட நேரமாய்
அழுது அழுது
வற்றிய என்
உப்பற்ற கண்ணீரை
கேட்கிறது
நதியிலாடும் நாணல்
நீ
வருவாயென
நாணலுக்கு
சொல்லியிருந்தேன்,, ___________

என் வலது
தோளில்
சாய்கிறாய் நீ
இடது தோளில்
நம் காதல்
இளைப்பாருகிறது,,,
___________

நான்!
ஏற்றுக்கொள்ளாத
வரையில்
உன் காத்திருப்புகள்
இருக்குமாயின்
நீயென்றோ
தொலைத்திருக்க கூடும்
என்னை,,,
தெரியுமா உனக்கு?
நிராகரிப்பு என்பதில்
இருந்து என்றோ
உனக்கு மட்டும்
விடுதலை
அளித்திருக்கிறேன்
நிராகரிப்பின்
வலி உணர்ந்தவள்
நானென்பதால்
___________

விழுதுகள்
முத்தமிடுகையில்
வேர்களுக்கும்
வியர்க்கத்தான்
செய்கிறது
ஆலமரம் இப்போது
ஆனந்தமாய்
பூத்து விடுகிறது,,,
___________

அதிக பட்சமாக
உன்னை வதைக்கும்
வார்த்தைகளை
வேண்டாமென்றே
தள்ளி வைத்து
விடுகிறேன் நீயழுதால்
நானும் அழக்கூடும்
என்பதாலோ என்னவோ!
___________

உன்னுடனான
எந்த சமாதான
உடன்படிக்கையும்
என்னிடமில்லை
சிலதுளிகள்
நீ மௌனமாய்
இருந்தாலும்
என் கோபம்
பொசுக்கி விடும்
உன்னை
அறிந்தும் அதுதான்
வேண்டுமென்கிறாய்
ஓரக்கண்ணால்
என் கோபத்தை
ரசிக்க பிடிக்கிறதோ
உனக்கு
___________

அச்சு பிசகாமல்
என்னை வார்த்தெடுத்த
உனது உயிரணுவிற்கு
ஒருபோதும் நான்
வலியை தந்துவிட
மாட்டேன் இருவுயிரில்
என்
இருதய துடிப்புகளை
பகிர்ந்தளிப்பதே
கடமையென
கருதுகிறேன்
தந்தையாகிய வரம்
வார்ப்புகளின்
வண்ணங்கள் தானே
என்னவளே!
___________

இதுவரை
வாழ்ந்தேன்
எனும்
இறந்த காலங்களில்
என்றுமே
முதியோரில்லங்கள்,,,
___________

யாருக்கும் புரியாத
உன் கயல்விழிக்
கண்ணசைவு
அர்த்தங்களை
அழகாய் மனதிலேற்றும்
நானே உனக்கானவன்
மட்டும்,,,
___________

உயிர்க் காற்றாய்
எனை
சுற்றி வந்து
உணர்வுகளை
பிடுங்கி வார்த்தைகளில்
பேசும் என் கவிதையே
நீயற்ற பொழுதுகளில்
என் மனம்
இறந்து விடுகிறது
உன்னோடு நானிருந்த
பொழுதுகளை
உயிரோடு
ஏந்திக் கொள்கிறேன்
புது வசந்தங்களை
தேடிப் பிடித்துவிட
___________

உன்னை பார்க்கும்
போதெல்லாம்
என் கவிதை
மலர்களால்
அலங்கரிக்கப்படுகிறது­,,,
___________

நீ சுமக்கும்
சிலுவையில்
எனது பெயரும்
எழுதியிருக்கிறது
ஏசய்யா,,,
லாவகமாக நானும்
மன்னிப்பு கேட்கிறேன்
திரும்ப திரும்ப
பாவங்களை
செய்துக் கொண்டு,,,
___________

தோழனாய் இருந்து
என் ஆத்மாவின்
அசைவுகளை உணர்ந்து
அதற்கேற்றது போல்
ஆறுதல் சொல்கிறாய்
சேவகனல்லாடா
நீயெனக்கு
செங்காந்தள் மலரடா
சீக்கிரம் வா!
நாம் காதல் செய்வோம்,,,

___________***__________

2 comments:

  1. "யாருக்கும் புரியாத
    உன் கயல்விழிக்
    கண்ணசைவு
    அர்த்தங்களை
    அழகாய் மனதிலேற்றும்
    நானே உனக்கானவன்
    மட்டும்,,, " என
    அழகாய் புனைந்த
    அருமையான வரிகள்!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...