Sunday, March 13, 2016

சாதிவெறித் தமிழகம் தொடரும் ஆணவக் கொலைகள்

இன்று காலையில்தான் ஒரு ஆட்டோவில் அந்த வாசகத்தை படித்தேன் அவ்வளவு
நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தது "நீ சாதிக்கு பிறந்தவனில்லை சாதிக்க
பிறந்தவன்" என்று,,, உள்ளுக்குள் ஏற்பட்ட ஒரு ஆத்ம திருப்தியை
அனுபவத்துக் கொண்டிருந்த அடுத்த வினாடிகளில் தொலைத்துவிட்டேன் அந்த ஆட்டோ
திரும்புகையில்,,, அதிர்ச்சி அலைகள் என்னை ஆட்கொண்டுவிட்டிருந்த­து, அதே
ஆட்டோவின் பின்னால் வாளுடன் இருக்கும் கலசத்தை வரைந்து கீழே "ஷத்ரியன்டா"
என எழுதியிருந்ததை எப்படியும் ஜீரணிக்க முடியவில்லை என்னால்,,, ஆக இங்கே
சாதி இந்துக்கள் மட்டுமே சாதிக்க பிறந்தவர்கள் என்கிற புரிதலோடு இதனை
அனுகிப்பார்க்கிறேன்.­ சாதி இந்துக்களுக்கு இங்கே தன் சாதிக்காரன்
மட்டுமே சாதிக்க பிறந்தவன் என்கிற மனநிலையிலை ஆதிக்கம் எனும் தொனியில்
எடுத்துக்கொள்ளலாம், போலவே அவ்வாறு சாதிக்கப் பிறந்தவனான ஆதிக்கச் சாதி
இந்துக்கள் தன் சாதிப் பெண்களோ ஆண்களோ சாதி மறுப்பு திருமணம் செய்தால்
கொலைகூடச் செய்வார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்த அவலச்
சம்பவமும் இதுபோன்ற தொடர் சம்பவங்களும், தாங்கள் மட்டுமே சாதிக்கப்
பிறந்தவர்கள் எனும் கண்ணோட்டத்தில் மட்டுமே இங்கே இளவரசன்களும்,
கோகுல்ராஜ்களும் கொலைசெய்யப்படுகிறார்­கள், காதலித்து சாதி மறுப்பு
திருமணம் செய்தால் கொலை செய்யும் சாதி இந்துக்களின் உண்மையான சாதனைப்
பட்டியலில் சேர்ந்திருப்பது எண்ணிலங்கா கொலைகளே! இனியும் இந்த தமிழ்
மண்ணில் "யார் சார் இப்பல்லாம் சாதி பார்க்கிறாங்க" என்று கேட்டால்
அவர்களிடத்தில் சாதி இந்துக்களால் நிகழ்த்தப்பட்ட "தொடர் கொலைகள்"
பட்டியலை நீட்டி "இதுவெல்லாம் சாதி இந்துக்கள் புரிந்த சாதனைகளென"
முகத்தில் சாணியறையலாம், கேடுகெட்ட தமிழ்ச் சமூகத்தில் நீதிகள்
வாழ்கிறதென்றும், பகுத்தறிவு வளர்கிறதென்றும்,சாதி­கள் அழிந்து
விட்டதென்றும்,கூறினா­ல் அவர்களை தயவு செய்து மனநல காப்பகத்தில்
சேர்த்துவிடுங்கள். சம்பவம் இங்கே சவுக்கடிகளாக அவர்கள் மீது பாயட்டும்
இதோ இன்னொரு கோரச் சம்பவமும் கொலை களமான தமிழகமும்,,,
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மகேசுவரியும் சங்கரும் கடந்த 8
மாதங்களுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து
வந்துள்ளனர். இந்நிலையில் மகேசுவரியின் உறவினர்கள் பொள்ளாச்சி உடுமலைப்
பகுதியில் பட்டப்பகலில் இணையர் இருவர் மீது கத்தி அரிவாள் கொண்டு
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகேசுவரி காயங்களுடன் மிக
மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது
தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்காமல் சாதி ஆதிக்கத்தை ஆதரிப்பது
இந்நிகழ்வுகள் பெருக ஊக்குவிக்கின்றது.
நீ சாதிக்கு பிறந்தவனில்லை
சாதிக்க பிறந்தவனென
எழுதி வைத்துவிட்டு அடுத்த வரிகளிலே
ஷத்திரியன்டா,தேவன்டா, என போட்டுக்கொள்ளும் கேடுகெட்ட சமூகத்தில் கொலைகள் வெறும்
கடந்துபோதலாகவேதான் இருக்க முடியும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...