Tuesday, May 24, 2016

இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள், இந்தியாவுக்கு சவால் விடுகின்றன!




29/11/2015 அன்று இந்தியாவின் பயங்கரவாத இயக்கம் முதலிடத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ். RSS இந்த பதிவை எழுதினேன், இந்தியாவில் இந்துத்துவ பார்ப்பன
ஆதிக்கத்தின்
செயல்வடிவ வன்முறைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை தலித்
மக்களும் இரண்டாவதாக இசுலாமிய சிறுபான்மையின மக்களும்
பெரும்பாதிப்புக்குள்­ளாகும் சமூகங்களாக இருக்கிறார்கள். இதில் இசுலாமிய
சிறுபான்மையின மக்களை "தீவிரவாதிகள்" என சித்தரிக்கவும் இசுலாமியர்கள்
என்றாலே பயங்கரவாதிகளென அனேக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில்
பார்ப்பன இந்துத்துவ சாதியாதிக்க RSS மற்றும் அதன் வளர்ப்பு பிள்ளையான
BJP க்கு ஏகபோகமாய் பணியாற்றும் ஊடகங்கள் ஏனோ இதே இந்தியத்தில் உண்மையான
சனநாயகத்திற்கு விரோதமாக வெளிப்படையாகவே தீவிரவாத பயிற்சிகளில் ஈடுபடும்
ஆர்எஸ்எஸ் போன்ற பஜ்ரங்தள் அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரிக்க
மறுக்கின்றன. ஒருவேளை அந்த தீவிரவாத பயிற்சிகளின் மூலம் ஏதேனும்
இலாபநோக்கங்களை எதிர்பார்க்கின்றனவோ என்னவோ இந்த ஊடகங்கள்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பஜ்ரங்தள் அமைப்பினர் தீவிரவாத
பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வெளி அமைப்பான பஜ்ரங்தள்
அமைப்பினர் தற்காப்பு கலைப்பயிற்சி என்ற பெயரில் தீவிர வாத பயிற்சிகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
ஹஇதற்காக நடத்தப்பட்ட முகாமில் ஏராளமான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு , எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவது,
தாக்குதலை எதிர்கொள்வது போன்ற ஒத்திகைகளை நடத்தி பயிற்சியில் ஈடுபட்டனர்.
துப்பாக்கிகளை ஏந்தி கூடி நின்று முழக்கங்களை எழுப்புதல் உள்ளிட்ட
தீவிரவாத பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
துப்பாக்கி, வாள், லத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த தங்களது
உ‌றுப்பினர்களுக்கு இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்படுவதாக,
உத்தரப்பிரதேச மாநில பஜ்ரங்தள் அமைப்பாளர் பால்ராஜ் கூறியுள்ளார்.
இந்துமதத்தை அதன் எதிரிகளிடமிருந்து காப்பதற்கு இதுபோன்ற பயிற்சிகள்
தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பயிற்சிகளை
பஜ்ரங்தள் நடத்துவது வழக்கமான ஒன்று என்று அந்த அமைப்பினர்
தெரிவித்துள்ளனர். இந்திய சனநாயகத்தில் சமத்துவம் , சகோதரத்துவம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை
ஒரேயடியாக கொன்று இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ்
பங்ரஜ்தள் ஆகிய சாதியாதிக்க இந்துக்களின் இயக்கங்கள் படிப்படியாக
வெற்றியடைந்துக் கொண்டிருக்கிறது என்றால் இந்தியா தன் சனநாயக மரபையும்,
வாழத் தகுதியான இடமென்கிற தகுதியையும் இழந்துக் கொண்டிருக்கிறது என்றே
சொல்லலாம்.
 பஜ்ரங்தள், ஆர்எஸ்எஸின் இந்த தீவிரவாத பயிற்சி முகாம்கள் ஏதோ அயோத்தியில் மட்டுமே
நடத்தப்படுகிறது என்றெல்லாம் நம்பினால் அது மடத்தனம் . ஆர்எஸ்எஸின்
இம்மாதிரியான தீவிரவாத பயிற்சி முகாம்கள் இந்தியா முழுமைக்கும் அதுவும்
பிரதமர் எனும் போர்வையில் திரியும் ஆர்எஸ்எஸ் மோடியின் பேராதவோடு
சுதந்திரமாக எங்கும் நடத்தப்படுகிறது என்பதே உண்மையாக இருக்கிறது.
அதற்கேற்றார்போல் சென்ற ஆண்டு கேரளத்தில் மிகப்பயங்கர ஆயுதங்களை
ஆர்எஸ்எஸ் பஜ்ரங்தள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்டது
குறிப்பிடத்தக்கது. ஏதோ தாங்கள்தான் இந்நாட்டின் சீர்திருத்தச் செம்மல்கள் எங்களால்தான்
இந்நாட்டில் அமைதி நிலவுகிறது என்றெல்லாம் கங்கனம் கட்டித் திரியும்
ஆர்எஸ்எஸ் பஜ்ரங்தள்,­சிவசேனா, இந்து ராஷ்ட்டியா போன்றவைகள்தான்
உண்மையில் இந்நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும்
கொடூரத்தன்மையானதென இந்த தீவிரவாத பயிற்சி முகாம்களின் மூலம் நாம்
தெரிந்து கொள்ளலாம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது ஆடுகளை
பலியிடுவதற்கே அன்றி ஆட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு அல்ல என்பதை
பாஜகவும் இதற்கு துணைநின்று தங்கள் முதலாளித்துவ இந்துத்துவத்தை வெகு
சீக்கிரத்தில் இந்தியாவில் வளர்த்தெடுத்தும் வருகிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...