Thursday, June 02, 2016

தொடரும் சாதி ஆணவக்கொலைகள் - கொலையாகின்றன காதல் திருமணங்கள்

தமிழ்ச் சமூகத்தில் ஆகப்பெரிய நவ நாகரீக தன்மையில் புத்துயிர் பெற்றுக்
கொண்டிருக்கிறது ஆணவக் கொலைகள் என்றால் அது மிகையாகாது, இளவரசன் கொலை
இல்லாநிலையானதும் கோகுல் ராஜை கொன்ற யுவராஜ்களுக்கு ஜாமீன் கிடைப்பதும்,
விஷ்ணுபிரியாக்களின் மரணங்களில் இந்துத்துவ சாதிவெறி வாழ்வதும், உடுமலை
சங்கரை கொலை செய்தோர்கள் பேரும் புகழோடும் ஆண்டை பெருமை பேசுவதும், காதல்
திருமணம் நடத்தி வைத்தமைக்காக நிறைமாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட
போது கருவில் இருந்த சிசுவிடமே தன்சாதிப் பெருமையை திணித்தும் தங்கள்
இந்துத்துவ சாதிவெறியாட்டத்தை சுதந்திரமாக அதுவும் அரசின் பேராதரவோடு
இங்கே நிகழ்த்தப்படுகின்றபோ­­து உண்மையில் வாழ்வதற்கு தகுந்த இடமா இந்த
தமிழ்மண் என எண்ணத் தோன்றுகிறது. இந்துத்துவ பார்ப்பானியத்தின் அதிதீவிர
வளர்ச்சியின் சிறுதுளிகள்தான் ஆவணக்கொலைகள் என்பதை பெரியார் மண்ணென்று
மூடி மறைக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை, எந்த பெரியாரிமும் அதி
நுணுக்கமாக தமிழ்ச் சமூகத்தை அணுகவில்லை என்பதையே மேலுமொரு சாதி
ஆணவக்கொலை உணர்த்துகிறது. அண்ணல் அம்பேத்கரை பின்பற்றுவதாகச் சொல்லும்
தலித் இயக்கங்களும்,திராவிட­­ இயக்கங்களும், முரண்பட்டு நின்றாலும்
முழுவதாய் ஏற்காமல் பாதிகிணற்றில் தொங்கும் மார்க்ஸிய இயக்கங்களும்
"தமிழ்மண் பகுத்தறிவு புகுத்தப்பட்ட மண்" என்பதிலிருந்து வெற்றிடமாக
இருக்கும் அந்த "பகுத்தறிவு" என்பது மேலும் மேலும் "புகுத்தப்பட வேண்டிய"
மண் என்பதற்கு தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையினை
உணர வேண்டிய தருணம். நீதித்துறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தலித்
நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவேயில்லை­­" என்கிறபோது
தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் சாதியாதிக்க ஆணவக் கொலைகளில் எப்படி
நீதியை நிலைநாட்ட முடியும்,ஆணவக் கொலைகளை செய்வது ஒரு நாகரீக
நடவடிக்கையாகவும் அது சமுதாயத்தில் ஒரு அந்தஸ்த்தை,மரியாதையை­­,கவுரவத்தை
கொடுக்கும் எனும் ஆதிக்கச் சாதி வெறியர்களின் புரிதலை, பொதுபுத்தியை
நீதிபதிகள் நியமனத்திலிருந்தே அறிந்துகொள்வீர்களானா­­ல் இங்கே எப்போதோ
புரட்சிக்கான விதைகள் போடப்பட்டிருக்கும். தாலி காத்த சிறுதெய்வ குலதெய்வ
குத்துவிளக்கு அம்மன்களும், காளிகளும், இன்னும் என்னென்னவோ குத்துக்
கல்களும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் சாதி மறுத்து காதல் திருமணம் புரிந்த
பெண்களின் தாலிக்கு பாதுகாப்பை கொடுக்க முடியவில்லை, எனும்போது இன்னமும்
குலதெய்வமென குத்திக்கொண்டு கும்மிடுவது அம்மணமாக அலைவதற்கு சமமானதென
தலித்துகள் உணர்வார்களா? கண்ணுக்குத் தெரிந்து தினந்தினம்
செத்துக்கொண்டிருக்கு­­ம் சாதிமறுத்த காதலர்களுக்குத் தேவையான
பாதுகாப்பையும் சாதியாதிக்கத்திற்கு எதிராகவும் இந்துத்துவ
பார்ப்பானியத்திற்கு எதிராகவும் கலகக்குரல்கள் எழாதவரையில்
இளையராஜாக்களும் செத்துக் கொண்டேதான் இருப்பார்கள். சாதியம்
வளர்ந்துக்கொண்டேதான்­­ இருக்கும், நீதிதேவதையின் கழுத்தும்
துண்டிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும். மேலும் ஒரு ஆணவக் கொலை
தமிழச்சமூக மண்ணில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
காதல் திருமணம் செய்த வாலிபர் துடிக்கத் துடிக்க அடித்துக்கொலை
செய்யப்பட்டிருக்கிறார் . அவரது உடலை வாங்க மறுத்திருக்கிறார்கள்
உறவினர்கள், வேறென்ன ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு நீதியின்
கடைசி சண்மானம் அதுதானே,,,திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம்
புரூன்ஸ்நகர் கல்லகத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இளையராஜா. இவர்
சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் லாரி டிரைவராக பணியாற்றினார். இளையராஜாவும்
அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தியும் (17) காதலித்து வந்தனர். கடந்த வாரம்
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையறிந்த ஆனந்தியின் அண்ணன் அருண், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு
திரும்பி வந்தார். இளையராஜாவை சந்தித்த அவர், '' நான் முறைப்படி திருமணம்
செய்து வைக்கிறேன்' என்று கூறினார். இதையடுத்து ஆனந்தியை அவருடன்
வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இளையராஜா, நண்பர் பாலாஜி,அருண் ஆகியோர்
கல்லகத்திலிருந்து புறப்பட்டு கல்லக்குடிக்கு சென்று மது அருந்தினர்.
அப்போது, அருணுடன் சிலர் சேர்ந்து, இளையராஜாவையும், பாலாஜியையும்
சரமாரியாக தாக்கினர். தப்பியோடிய பாலாஜி கல்லக்குடி போலீசில் தகவல்
தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது
தலை நசுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இளையராஜா கொலை
செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் 22 மாநிலங்களில் சாதி ஆணவக் கொலைகள்
நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் அவ்வப்போது ஏதோ நீதியை தக்க
வைப்பதாக தலித்துகளை ஏமாற்றும் வகையில் உச்சநீதிமன்றமும் ஆணவக் கொலைகள்
குறித்து தனது வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது.
2013-லிருந்து இதுவரை தமிழகத்தில் தோராயமாக 83 ஆணவக் கொலைகள்
நடந்துள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்ற
சூழலில் சாதியாதிக்க பார்ப்பானிய இந்துத்துவத்திற்கு எதிராக குறிப்பாக
இடைநிலை சாதி வெறியர்களுக்கு எதிராக போராட்டங்கள், கூர்வாளினைபோல
முன்னெடுக்க தமிழ்ச்சமூக முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
முக்கியமாக சாதியத்திற்கு எதிராக எல்லாவிதமான ஆயுதங்களையும் இதன்மூலம்
பிரயோகப்படுத்துதல் அவசியமாக இருக்கிறது. இங்கே மாவோயிஸம்
மாற்றியெழுதப்பட்டால் மட்டுமே சாதிவெறிகள் ஒழியும். எதிரிகள் ஆயுதங்களை
தீர்மானித்தெடுக்கும் முன்னரே நமது கைகளில் ஆயூதங்களை ஏந்தி வர்ணாசிரம
மனு தர்மத்தை? அழித்தொழித்தலே முதல்வேளையாக நமக்கிருக்கும் கடமையாக
இருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...