Monday, June 06, 2016

"அந்த" கவிதை

என் பேனாவின்
கூர்முனை
தேய்கின்றவரையில்
அனுபவித்து அனுபவித்து
கிறுக்கினேன்
கவிதை எனும்
பேரில்

நீயதை
வாசித்து
அலட்சியமாய்
விட்டெறிந்தாய்

அதிலொன்று
காமம் பேசியது
அனுபவமின்றி

உடனே விமர்சனம்
வருகிறது உன்னிடம்
அதற்கு மட்டும்

புரிந்தது எனக்கு
உனது பெருங்கோபமும்
ஆழ்மனதில் தோன்றிய
பெயரில்லா
உருவத்துனது
கற்பனையும்
புரிந்தது எனக்கு

பதற்றம் வேண்டாம்
பரிதவிப்பும் வேண்டாம்
பெருங் கோபமும்
வேண்டாம்
பொறுமையாய் கேள்

நீ
அலட்சியமாய்
தூக்கியெறிந்த
மற்ற கவிதைகளிடம்
காமம் கொண்டேன்

உனது கண்ணுக்குத்
தெரியும்
"அந்த"
கவிதையில் மட்டும்
காதல் கொண்டேன்

இருட்டு கனலகத்தில்
உனது எண்ணங்கள்
காற்றில் கரைந்து
எங்கோ சிதறி
ஓடுவதையும்
தற்போது நான்
காண்கிறேன்,,,

1 comment:

  1. அழகிய வரிகள் நன்று

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...