Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்





இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!

விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!
அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!

ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன் சொத்தை அபகறிக்கும் திருட்டு கூட்டங்களிக்கிடையேதான் தலித் சமூகம் இன்றும் வாழ்ந்து கொன்டிருக்கிறது. சிறுவனை கொலை செய்தல் , பெண் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தலில்தான் உங்களின் சாதிவெறி இருக்கிறதெனில்.. அச்சாதியாதிக்கத்தை ஆணவப்படுகொலைகளை தடுத்து சம உரிமைக்காக தலித் ஆதிக்கம் எழுந்து நிற்குமேயானால் அந்த தலித் ஆதிக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது... இங்கே முழுக்க முழுக்க சாதியத்தாலே கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் என்றுமே மனிதன் கொடூர மிருகமாகத்தான் இருக்க முடியும்.. சாதியத்தை அதன் வேரான ஹிந்துத்துவ பார்ப்பனியத்தை... அதனை வளர்த்தெடுக்கும் இடைசாதி ஆதிக்க வெறியினை அம்பேத்கரை விடவும் , பெரியாரின் கைத்ஊடி விடவும், மாவோவின் எதிர்வினையை பயன்படுத்துகையில் அடித்து விரட்ட இயலும் என்றே தோன்றுகிறது... ஆம்
" நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்" என்பதே அது.....

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...