Monday, December 31, 2018

கௌசல்யா -சக்தி இதற்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?




இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...

கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...

முன்னதாக வந்த செய்தி..

தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கை

சக்தி- கவுசல்யா தொடர்பாக…

1)   சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த
குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,
எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச்
சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று,
ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத்
தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது
குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா
திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்.

முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ’அந்தப்
பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.

2)   அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப் போய்க்
கௌசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்றுசேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒரு முறைக்கு மேல்
நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் உள்ள
வகையிலும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும் குற்றம் என்று கருதுகிறோம்.

3)சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக
நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம்
கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.

4) நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து
மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு
திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்.
சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டது.

5)எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதி உசாவலுக்குரிய பொறிமுறையோ
முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்க் குமுகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்துத்
தரப்பினரும் கொண்ட நம்பிக்கையையும்  துணைக்கொண்டு இயன்ற வரை எமது
கடமையைச் செய்து முடித்துள்ளோம். தொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றியமளிக்க வேண்டிய சிலரிடம் தொலைப்பேசி வழியாகவும் உண்மையறிய முயன்றோம். முடிவுகளை அடைவதிலும் தீர்ப்பை வரைவதிலும் மனிதி செல்வி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தோழர் வளர்மதி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத் தோழர் பார்த்திபன் ஆகியோரும்
எங்களுக்கு உதவினர். முடிவுகளைப் பொது அவையில் அறிவிக்குமுன் ’அந்தப்
பெண்’ணிடமும் கருத்தறிந்தோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம்.

முடிவுகள்:

1) அந்தப் பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி, அந்தப் பெண்ணும் சரி, சக்தி-கௌசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடு ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி
ஒப்புக்கொண்டார். கௌசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்.

2)சக்தி தன் மீதான மற்றப் பொதுவான குற்றச்சாற்றுகளை மறுத்து
விளக்கமளித்தார். எதிர்த்தரப்பினரும் குற்றச்சாற்றுகளை வலியுறுத்தி
விளக்கமளித்தனர். நீண்ட காலக்கழிவு, வதந்திகளின் ஊர்வலம், தனிமனித
விருப்புவெறுப்புகள் ஆகிய காரணிகளின் மூட்டத்தில் எந்த ஒன்றையும் மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ அறுதியான இறுதிச் சான்று இல்லாத நிலையில்
நாங்கள் இவ்வாறு முடிவெடுக்கிறோம்: தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க
முடிகிறது.

பொதுவாழ்வில் பாலின பேதமற்று செயல்படும் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு இவ்வகைப் போக்கு பெரும் தடையாகும் என்பதும் -  பொதுவாழ்வில் இயங்கும்
பெண்கள் மீதான பொதுப்புத்தியில் உள்ள அவநம்பிக்கையை அது மேலும்
அதிகப்படுத்தும் என்பதும் – பல்வகைத்  தடைகளைத் தாண்டி சமூகப் பணியாற்ற
வரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மேலும் மேலும்
இறுகும் என்பதுமே மெய்ந்நிலையாகும்.

தீர்ப்பு:

1) சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கௌசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.*

(*இது அப்போதே நடந்து முடிந்தது.)

2)சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும்.

3)இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும்
பறையிசைக்கக் கூடாது.

4)தண்டம் (இழப்பீடு) என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று
இலட்சம் உருவாய் செலுத்த வேண்டும்.

5)இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய
விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் அவ்வாறு செய்யலாம்.

தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைப்பது அறத்தின் கட்டளை. முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற செயல்களில்
ஈடுபடுவது --- தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் வைப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது --– போன்ற செயல்பாடுகள் முடிவை
மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக
அறிவிக்க விரும்புகிறோம்.

                                   தோழமையுடன்,

                     தியாகு /கொளத்தூர் மணி

                                             சென்னை
                                              29/12/18

Saturday, December 29, 2018

உலா வரும் தேனீக்கள்




தேனீக்கள் உலாவும் இடத்தில்
பூக்களின் நாடித் துடிப்புளை தொட்டு பார்க்கும் மழைச்சாரல்

இலைகளின் அசைவுகளில் இனம்புரியாத ஒரு
பாடல் ...
யாரை கேட்டு இசைக்கிறது இந்த காற்று...
யாரை கேட்க வேண்டும் நான் இசைக்க மறு பேச்சு....

சில்லிட்டு... துள்ளல் கொண்டு... துடித்து... ஆர்ப்பரிக்கும்
பருவ மோகனத்தில்
இன்னும் இன்னும்
தேனை தந்துவிட்டு தாய் மண்ணை முத்தமிடுகிறது அதே  பூஞ்செடியின் வேர்கள்...

Friday, December 28, 2018

மழைக் குருவி




மானுடத்தை கொஞ்சும்
ஒரு மழைக்குருவியின்
கண்களில் கசியும் மௌனம் காணாது

திடீரென முளைத்திடும்
மின்னலொளி பிசுபிசுப்பில்
கீச்சிடும்
குரல்களினூடே
வெளியேறும் பதற்றத்தை போலொரு காதல்
உனக்கும் எனக்கும்....

இந்துமத சாதிகள் அதிர்வுகள்




இந்தியாவில் நிலவும் சாதிய அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் விஷம் பரவியிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கு  ஹிந்து மதம்  மனுசாஸ்த்திர வர்ணாசிரம அடிப்படையில் நால்வர்ணம் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்திய சாதிய அமைப்பு முறைகளில் எந்தவிதமான மாறுதலுமின்றி மூவாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு மேலாக   மக்களை அடிமைபடுத்துவதில் இன்று வரையில் தொடர்ந்துகொண்டே செல்கிறதெனில், அது ஒரேயொரு அழுத்தமான மதக்கொள்கையில் மட்டுமே... அது... "தனக்கு கீழாக ஒரு அடிமை மக்கள் எப்பொழுதுமே இருத்தல் வேண்டும்" என்பதுதான்... ஹிந்துமத மனுதர்ம வர்ணாசிரமத்தின் படி பார்ப்பனர்கள் , வைசியர்கள், ஷத்ரியர்கள், சூத்திரர்கள் என்கிற நால்வர்ணம் படிப்படியாக ஒருத்தரை ஒருத்தர் தங்களுக்கு தேவையான அடிமை மக்களை ஏறி மிதிப்பதுதான் ஹிந்து மதம், இதில் கவனிக்கப்பட வேண்டியது பஞ்சமர்கள் (தாழ்த்தப்பட்டோர்) பட்டியலில் இல்லை ஆனால் ஹிந்துமத  சாதிய அடிமை படுத்துதலில் அவர்கள்  உண்டு... காரணம் பார்ப்பானியத்தை பொறுத்தவரை சூத்திரன் (தேவடியாள் மகன்) பட்டியலிலேயே அவர்களை ஹிந்துமதம் வைத்திருக்கிறது... பெரியார் இதனை எதிர்த்து "பறையர் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது என்கிறார்"
(சமதர்ம அறிக்கை- முன்னுரை ... குடியரசு 1931)
அதைவிட மேலாக அம்பேத்கர் அவர்கள் திரு காந்தியை சாடி (ஹரிஜன்) எங்களை இந்து மதம் அடிமைபடுத்துவதைத்தான் திரு காந்தி விரும்புகிறாரா?  தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் (ராமனின் பிள்ளை) என்று திரு காந்தி அழைப்பதையும் அதன் பெயரில் பத்திரிகை வருவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்கிறார் ( சாதி ஒழிப்பு நூல் ) ஆக அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து சனாதன சாதிய வன்மத்தை போட்டு உடைக்கிறார்கள்... காந்தியின் கூற்றுப்படி ஹரிஜன் என்பது ராமனின் பிள்ளை எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமைதானே என நினைக்கத் தோன்றும் ஆனால்
அம்பேத்கரும்,  பெரியாரும்  மிகத் தெளிவாக ராம ராஜியத்தை உடைத்தெறிகிறார்கள், ராமாயணத்தில் உள்ள சம்பூகன் வதத்தை  இருவருமே மிக நேர்த்தியாக கையாண்டார்கள் ... ராமனின் ஆட்சியில் ஒரு பார்ப்பனின் கோரிக்கைக்காக எவ்வித விசாரணையுமின்றி கொலையும் செய்யத் துணியும் கேடுகெட்டதுதான் ஹிந்து  சனாதன ராம ராஜ்ஜியம் என அறிவுறுத்துகின்றனர்... இங்கு  ராமாயணத்தில் ஒரு பார்ப்பனன் ராம ராஜ்ஜியத்தை குறை கூறுகிறான் அதற்கு நாரதர் என்பவர் குறையை தீர்க்க வழி சொல்கிறார், என்னவென்றால் கடைகோடியில் எங்கோ பார்ப்பனர் அல்லாத ஒருவன் தவம் இருப்பதாகவும் (பார்ப்பனர் அல்லாதோர் தவம் இருப்பது குற்றமா?) அவன் உயிரை பறித்து விட்டால் தீர்வு வரும் என்கிறார்... ராமனும் அவனை தேடி அலைகிறார் சம்பூகன் அவன் என அடையாளம் காண்கிறார் ... எந்த சாதி என மட்டும் வினவுகிறார் ( வேறு எதுவும் அவனிடத்தில் கேட்கப்படவில்லை) அவன் "சூத்திரன்" என்றதும் தலையை துண்டிக்கிறார்... இதுதான் ராம ராஜ்ஜியம் எனில் எங்களை எப்படி ராமனின் பிள்ளை என அழைப்பீர்கள் என அம்பேத்கரும் பெரியாரும் சாடுகிறார்கள்...ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)ஹிந்து மதம் எந்த விதத்திலும் , எக்காலத்திலும் சாதியத்தை வைத்தே பிழைப்பு நடத்துவதைத்தான் நோக்கமாககொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை.... இடைநிலை சாதிகளான ஏனைய அனைத்து "சுமார் 3000 க்கும் மேலான சாதிகள்) சாதிகளுமே பார்ப்பனனை பொறுத்தவரையில் "சூத்திரன் (தேவடியாள் மகன்) மட்டுமே.... ஆனால் இந்திய சாதிய அமைப்புகள் தங்களை சூத்திரன் என்றழைக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தங்களுக்கு கீழான  அடிமை சாதிகளை உறுவாக்கி அவர்களை ஒடுக்குதலையே முதன்மையாக கொண்டிருக்கிறார்கள்.... இவர்களுக்கு தேவை எதிர்ப்பு அல்ல ஏனைய அடிமைகள் அவ்வளவே....
தங்களை ஆண்ட சாதி , படியளந்த சாதி, அரசாண்ட ஷத்ரியர்கள் என பெருமை பிதற்றிக்கொடண்டாலும் ஹிந்துமத பார்பனனை கேட்டுப்பாருங்கள் "அவாள்ளாம் சூத்திரா" என்பார்கள்... இதுதான் ஹிந்துமதம்...
இந்த இடைநிலை சாதிகளானாலும் , அதன் கீழான தாழ்த்தப்பட்டவர்களானாலும் ஹிந்து மதத்தின் மிக நுணுக்கமான அடிமை படுத்துதலையே கடைபிடிக்கிறார்கள்... தங்களை வைசியர்களாக , ஷத்ரியர்களாக , அடையாளப்படுத்தும் சாதிகள் சூத்திரர்களை ஒடுக்குவது, சூத்திரர்கள் தங்களை ஒடுக்கும் இடைநிலை சாதிகளை எதிர்க்காமல்  தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவது , தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையே ஒடுக்குவது... அதன் வழி ஹிந்து மதத்தை விடாப்பிடியாக இறுக்கமாக கட்டமைப்பது என்பதைத்தான் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது...ஒரு சாதிகள் சூழ்ந்து இன்னொரு சாதிகளை அனுசரிக்கும் வழக்கம் ஹிந்து மதத்திற்கோ, அதன் பார்ப்பனியத்திற்கோ  அறவே இருக்காது.... ஏனென்னால் அப்பொழுது ஹிந்துமதம் அழிந்து போகும்... இதன் காரணமாகவே பெருந்தலைவர்களையெல்லாம் ஹிந்துமதம் சாதிய வட்டத்திற்குள் அடக்கி வைக்கும் , அம்பேத்கரை  தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமான தலைவராக ஹிந்து மதம்  வைத்தது இதன் மூலமேயாகம், நடைமுறையில் காமராஜரை கூட சாதித்தலைவராக மாற்றியதும் குறிப்பிடப்பட வேண்டும், மக்களின் உணர்வுகளில் , அவர்களின் பலவீனங்களில் ஒவ்வொன்றிலும் ஹிந்து மதத்தின் அனுகூலங்களை புகுத்தி அவர்களின் சாதிய உணர்வுகளை எப்பொழுதுமே ஹிந்து மதம் கிளரிக்கொண்டே இருக்கும்...
என்ன சாதித்தது ஹிந்து மத சாதிகள் , தாழ்த்தப்பவர்கள் கல்வி யை செவி வழியில் கேட்டால்கூட பொசுக்கி விடு என்றதும்(கீதை) , பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும்) கல்வி அறவேக்கூடாது அவர்கள் ஆண்களுக்கு அடிமையாளர்கள் என்றும்தான் ஹிந்துமத பார்ப்பனிய சாதனையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்கிறீர்களா?   "நான் உன்னை கல்யாணம் பன்னிட்டேன்டி இனிமேல் எனக்கு நீ அடிமை" என எத்தனை உதடுகள் சொல்லியிருக்கும் என்று மனதை திறந்து வைத்து உங்களை நீங்களே உணருங்கள், சாதியின் பெயரால் ஆணவக்கொலைகளை நிகழ்த்துவதில் , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதில்  ஹிந்து மத சனாதனம் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம் என்றால் அது மிகையாகாது.

Thursday, December 06, 2018

அம்பேத்கர் நினைவு தினம்






யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்...

அமைதி மதமென
அஹிம்சை  கொண்டவனை
அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்....

ஆண்டாண்டு கால அடிமை சமூகத்தை
நீ அடிமையென அவர்களுக்கே உணரச் செய்தவன்‌...

முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி எனும் புனைவுகளுக்கு
மத்தியில்,
அரசமைப்புச் சட்டமெனும் பெருந் தேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாய் தன்னையே தேராக்கியவன்....

விடவில்லை , வீழ்ந்துவிடவுமில்லை
மதவாதமோ, சாதியவாதமோ...
என் தேரை இழுத்து தெருவில் விடுமானால்
அதை தீயிலிட தயங்க மாட்டேன் என்றான்...

எரிந்து கொண்டிருக்கிறது திரும்ப திரும்ப
அழியாத சாதியால்
நுழையாத தேரினை
தலித் தொட்டால் தீட்டென்று கோவில் தேர்களை...
இன்னமும்... இன்னமும்...

பசி, தாகம், பட்டினி , வறுமையென அனைத்தும் ஒற்றை ராந்தல் விளக்கில் அமிழ்த்து இந்திய தேசத்தில் ஒளியாய்
நின்றவன்....

வருத்தங்கள் வந்து போகாதா மனமே...
சேரிக்கு மட்டுமா
சிலை அவனுக்கு?
ஊருக்கு எப்போது போகுமோ ஏக்கத்தில்
வெடிக்கிறது நெஞ்சம்...

ஒரு பேனாவின் கூர்முனை கிழித்து
தைக்கும் பல்லாயிரம்
பதிலடிகளுக்கு சொந்தக்காரனவன்...

கேட்டாயோ காவிகளின் அதிகார திமிரை...
அவனின் நினைவு தினத்தை அடியோடு ஒழித்திடவே...
அழித்து தரைமட்டமாக்கினார்கள் பாபர் மசூதியை...

அவன்... அதிகாரத்தை அனைவருக்குமாய் பகிர்ந்து கொடுத்தான்...

அவன்... உன்னையும் என்னையும் சமமாக்கினான்...

அவன்... பெண்ணடிமையை
தகர்த்திட துடித்தவன்...

அவன்.... கல்வியை பொதுவில் வைத்தான்...

அவன்... முழக்கமிடுகிறான்

கற்பி!!!!
ஒன்று சேர்!!!
புரட்சி செய்!!!

அவன்.... சத்தமின்றி
யுத்தமின்றி...
புரட்சி செய்கிறான்...
சமத்துவம், சகோதரத்துவம், வார்த்தைகளோடு....

ஆமாம் இன்னமும்...
அவன்... பட்டினியோடுதான் இருக்கிறான்...
எப்போது மடியும் இந்த அடிமைத்தனமென்று...

ஜெய்பீம்!!!!
நீலம் வெல்லும் !!!
புத்தம் சரணம் கச்சாமி!!!
பாபா சாகேப் அம்பேத்கர் என்பவன் அவனே!!!!

Saturday, November 10, 2018

அதீத கனவுகள்




ராட்சஷி கனவுகள் என்றதை
அழைப்பதுண்டு...
எனக்குள் எப்பொழுதும் கனவுகள்
எழுந்துகொண்டேயிருக்கும்...
அதில் தேடும் வண்ண மயில்
நீயென சிறுபொறி தட்டும்
நாழிகையில் என் நுனி நாவினை
கடித்து சட்டென தோற்றுவிப்பேன்
சின்னஞ்சிறு வெட்கத்தை...
வெள்ளை நிறத்தால் அதை பூட்டி
கறுப்பின் சாயம் கொண்டு
எனக்குள் அமிழ்த்தி
இதயச் சத்தங்களாய்
மீண்டும் வெளியிடுவேன்...
ஆமாம்...
கறுப்புதான் வெள்ளையை அடையாளங் கொள்ளும்
விழித்திருக்கும் போதெல்லாம்
தொலைத்துவிடாமல் தவறாது
நீயாக நின்ற வண்ண மயிலுக்காய்
காணுகின்றேன் எப்பொழுதும் என்
அதீத கனவுகளை...

Tuesday, October 16, 2018

பிழை



காட்சிகள் சிந்தும்
நின் உடல் மொழியில்
பெருங்கனவுகள் ஒளிந்திருக்க
இயல்பாய் இமைக்கும்
கண்ணசைவுகளில்
யாதொரு மந்திரமும்
புலப்படவில்லை
எது பிழையென
நானறியேன்
கீழ்வானம் சிவப்பதற்குள்ளாக
என் சிறைவாசம் விடுவித்தலாகாதோ....

Friday, October 12, 2018

திவாலிந்தியா



இது ஏதோ பழைய திவான்களின் நாடு என புருவங்களை உயர்த்த வேண்டாம்... அதைப் போலவே புதிய திவான்களின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது என்பதையும் மறக்க வேண்டாம்... மோடி ஆட்சியில் இந்தியா ஏகபோக வளர்ச்சியடையும் என மோடிக்கே 56 இன்ச் என அளந்துவிட்ட அத்துணை வாய்களும் இன்று கமுக்கமாய் வேறொரு விஷயங்கள் , சம்பவங்கள் என நம்மை மடைமாற்றிக்கொண்டே இருக்கிறது... ஆனால் ஹிந்துத்துவ பார்ப்பனிய பாஜக மோடியின் பின்னடைவுகளை பற்றி நாம் எடுத்துக்கூறினால் உடனே அவர்களுக்கு வால் முளைத்துவிடுகிறது... அந்த புதிய திவான்கள் யார்?
அதானிகளும் , அம்பானிகளும் , வால்மார்டுகளும் தான் மோடி ஆட்சியில் முளைத்த புதிய திவான்கள்... ஏதோ வளர்ச்சி , வளர்ச்சி என்று கதைத்துவிட்டு இந்த இந்திய நாட்டை சுரண்ட என்னென்ன வழிகளெல்லாம் இருக்கின்றதோ அந்தந்த வழிகளையெல்லாம் யுக்தியாக பயன்படுத்தி சனநாயக இந்தியாவில் சாதிமத வெறியை குறிப்பாக ஹிந்துத்துவ மதவெறியை கிளறி விட்டு சமத்துவத்தை , சகோதரத்துவத்தை குறிப்பாக இந்திய பொருளாதாரத்தை மொத்தமாய் சீர்குலைத்து இன்று "திவாலாகும்" நிலையில் கொண்டு வந்திருப்பதுதான் மோடியும் மோடிக்களை கைப்பாவையாக்கி வைத்திருக்கும் இந்த கார்ப்பரேட்டுகளின் முக்கிய பணிகளாக இருக்கிறது... எங்கும் சுரண்டல் , எதிலும் சுரண்டல் என்பதே மோடியின் ஆட்சியில் பிரதான மந்திரமாய் இருக்கிறது, இவர்களை நாட்டை சுரண்டுவது மட்டுமில்லாமல் நாட்டின் குடிமக்களையும் சேர்த்தே வதைத்தெடுக்கிறார்கள்‌..
அதென்ன "திவாலிந்தியா" ?





ஆமாம் இந்தியா திவாலாகும் சூழலுக்குத்தான் தற்போது தள்ளப்பட்டுள்ளது, முக்கியமாக இவர்கள் நாட்டை திவாலாக்கும் வேலையை விட ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதாரத்தை திவாலாக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள் , பாஜக மோடி பிரதமராக பதவியேற்றில் பெட்ரொல் விலை ரூ 30 க்கு கிடைக்கும் என அன்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ 100 ஐத் தொடப்போகிறது.. அதேபோல டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை மோடி ஆட்சிக்கு வந்தால் அபரிவிதமாக ஏற்றம் காணும் என்று பரப்புரை செய்தார்கள் , ஆனால் என்ன நடக்கிறது? டாலரின் மதிப்புதான் ஏற்றமடைந்து ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் அதள பாதாளத்தை நோக்கி செல்கிறது அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.47 என உயர்ந்து நிக்கிறது, இந்த தலைகீழ் விகிதங்களைத்தான் ஹிந்துத்துவ மோடியின் வளர்ச்சியென்று வரிந்துகட்டப் போகிறார்களா? எதை உயர்த்த வேண்டுமோ அது உயர்த்தப்படவில்லை, எதை குறைக்க வேண்டுமோ அதையும் குறைத்தபாடில்லை , ஆனால் இன்னமும் இவர்கள் இல்லாத அந்த 56 இன்ச்சை? (எதை?) பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். புதிய திவான்களை வளர்த்துவிட்டு பாமரர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த புதிய இந்தியா "திவாலிந்தியா" என இவர்கள்தான் பிரசவித்தார்கள் என பெருமையோடு வேண்டுமானால் மோடி பக்தர்கள் பூரிப்படைந்து கொள்ளலாம்...


இன்னமும் தேடிப் பார்க்கிறேன்...

"நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன் என்றால்? " என ஹிந்துத்துவ பார்ப்பன பாஜகவின் காலை நக்கிக்கொண்டிருந்த ஜோ டி குரூஸ்கள் , ஜெமோக்கள் , சாருக்கள் , இப்போது புதிதாய் முளைத்த அரசியல் புள்ளியல் நிபுணர்? மாரிதாஸ்கள் எந்த எலி பொந்துக்குள் ஒளிந்துகொண்டு தங்கள் பேனாக்களை அவர்களே செரித்துக்கொண்டிருக்கிறார்களென்று...
எதுவானாலும் சுரண்டல்களுக்கு எப்பொதுமே பெருச்சாலிகளின் துணைவேண்டுமல்லவா.....

Sunday, October 07, 2018

கனவுகள் வருவதில்லை




யாதொரு கனவுகளும் எனக்குள்
வருவதில்லை
பிறைதேடி பகலிரவு முழுவதும்
உறக்கத்தை தேடி
நித்தம் அலையுமென்
ஆத்மார்த்தமான மனதிற்குள்
எதையோ அழியாச் சுடராய்
கட்டிவைத்துள்ளேன்
பேரன்பு எனக்குள் படர்ந்து
ஆராதிக்கும் பிசாசுகள் ஆனாலும்
ஏற்றுக்கொள்வேன்
அப்போதாவது சிறு கனவேனும்
வருமல்லவா....

Wednesday, September 26, 2018

பேரன்பும் , காதலும் !




எத்தனையோ பகலிரவுகளில்
உன் நினைவோடு வாழ்ந்திருக்கிறேன்
வாழ்கிறேன் வாழ்வேன்..
எந்த விடியலிலும்
உன் பார்வை என் மீது
பட்டு பிரகாசிக்கும் போது
புற்களில் மின்னும் பனித்துளிகள் போலாகிறது...

உன் இதழ்கள்
ஒற்றை வார்த்தை உதிர்க்காதா
என்று !
ஏங்கும் என் மனதிற்குள் எப்பொழுதும்...

அது கோபமா ! பாசமா !
என பிரித்தறிய தோன்றிடவில்லை...
என் காதலும் உன் காதலும்
நம் காதலாகி...
யாதொரு பிழையின்றி
தோன்றிய இருதயத்தில்
நம் நினைவுகளை ஊற்றி
என்றும் தனிந்து விடாது
நேசக்கற்று வீசிக்கொண்டேயிருக்கும்....
உறங்காத நம் இரவுகள் ஒவ்வொரு நாளும் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது !
உன்னில் நானும் என்னில் நீயும்
எந்த ஒரு பரிச்சயமும் இன்றி !
நமக்குள் பேரன்பு
வருவதற்கான வழியை
காதலால் கண்டெடுத்தோம்
ராட்சஷியே....

Tuesday, September 25, 2018

திலீபனை நினைவு கூறுவோம்






உரிமை மீட்பும்
நிலமீட்பும்
பெருங்கடலின் பசியும்
உறைந்து போகாது ஒருபொழுதும்...
உனது இருதயம் நின்றுவிட்ட
நொடிகளிலிருந்து
இன்னமும் அழுதுக் கொண்டிருக்கிறது தமிழினம்...

நீ...
சிந்திய செங்குருதிக்கு
விடை சொல்லும்
தனி ஈழமே விரைவில்...
அத்துணை வலிகளும் வழிகாட்டும்
ஈழ விடுதலைக்காக ...

நீ... உணவை மறுத்தாய்...
நாம் பேசிக்கொண்டிருந்தோம்...
நீ... உணர்விழந்தாய்
நாம் உயிர்துடித்தோம்...
என்றேனும் ஒருநாள்
மலரும் தனி ஈழம்...
அன்றேனும் தீரும்
சுதந்திர தாகம்...

பார்த்திபன் இன்னமும்
பசியோடுதான்
இருக்கிறான் என்
தமிழினமே...


(1987 September 26) திலீபனை காந்தியம் கொன்ற நாள்

Monday, September 24, 2018

கருணாஸ் கைதுக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வேறுபாடு ?





கருணாஸ் கைது செய்யப்படுகிறார் ஆனால் எஸ்வீ சேகர் , எச் ராஜாக்கள் காவல் துறை உதவியோடு வலம் வருகிறார்கள்... என்று ஒப்பிட்டு ஆதங்கப்படும் சமூக பேச்சுகளை காணலாம்... எதார்த்தத்தில் இந்த புலம்பலும் , ஆதங்கமும் முற்போக்குத் தன்மை உடையதோ, ஹிந்துத்துவ பார்ப்பன எதிர்ப்புத் தன்மையுடையதோ இருக்க முடியாது.. இன்னமும் கைது செய்யப்படாமல் அல்லது நீதிமன்றம் அவரை கைது செய்ய அவசியமில்லை என கருத்து கூறும் அளவுக்கு ஹிந்துத்துவ பார்பானியம் தன் பூணூல் பலத்தை எவ்வாறு பிரயோகப்படுத்துகிறதோ ... அதே அளவுக்கு இங்கு இடைநிலை சாதியாதிக்கத்தின் அதிகார பலமும் மேலோங்கியே கிடங்கிறது... கருணாஸ் பேசியதும் எச் ராஜாவின் ஆவேச வாக்குவாதமும் ,அதன் பிறகும் கூட இந்து அறநிலையத்துறை அதிகாரிளை வேசி என பேசியதும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும்... தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்ல மொத்த இந்திய சமூகத்திலும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மேலோட்டமாக கொண்ட ஒரு சார் பார்ப்பன எதிர்ப்பு, மிகத் தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு என்று இரண்டு வகையில் இருக்கிறது... அதாவது சாதி , மதத்தினை மிகத்தீவிரமாக எதிர்க்கும்போது அது இயல்பாகவே பார்ப்பனிய எதிர்ப்பாகிவிடுகிறது, அதே வேளையில் தங்களுக்கு சாதி முக்கியம் , மத வழிபாடு வேண்டும் ஆனாலும் பார்ப்பனனை எதிர்ப்போம் என மேலோட்டமாக எதிர்ப்பு தெரிவிப்பது என இந்திய சமூகம் முழுமைக்கும் இந்த நடைமுறைதான் இருக்கிறது. ஆழ்ந்து கவனித்தால் பார்பனியத்தைவிட இவர்கள் ஆபத்தானவர்கள் என்றுணரலாம்... ஏனெனில் பார்ப்பனியம் என்றுமே தனக்கான அடிமைகளை நேரடியாக உறுவாக்குவதில்லை , இடைநிலை சாதியாதிக்கர்களை வைத்தேதான் அது காய்நகர்த்தும்... இதில் வேடிக்கை என்னவென்றால்... நீங்கள் எந்த ஆண்டை சாதியாகவோ இருந்துக்கொள் ஆனால் எங்களுக்கு நீ "சூத்திரன்" மட்டுமே என்கிறது பார்ப்பனியம்... இதையும் எச் ராஜா " மரு . ராமதாஸ் கோவில் கருவறைக்குள் நுழைந்தால் கருவறுப்போம்" என பேசியதிலும் வெளிப்படையாக புரிந்து கொள்ளலாம்... கருனாஸ்கள் , என்றுமே கைது செய்யப்படக்கூடிய சமூக விரோதிகள்தான் , ஆனால் பார்ப்பன பாணியில் பூணூல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் "அதே சூத்திரர்கள்" தான் ... எப்பொழுதும் தலித்தியத்தின் பார்ப்பன எதிர்ப்புக்கும் , சாதியாதிக்க ஆண்டைகளின் பார்ப்பன எதிர்ப்புக்குமான இடைவெளி மிப்பெரிய அளவில் தொடர்ந்தே இருக்கும்...சரி... இதனை கருணாஸ் ,எச் ராஜா ஒப்பீடு கூடாது எனில் வேறு எப்படி ஒப்பிடுவது?
நிறைய இருக்கிறது... கருத்துரிமைக்கு எதிராக எத்தனையோ போராளிகளை இந்த அரசு நசுக்கி ஒடுக்குகிறது... எத்தனோயோ இடதுசாரிய முற்போக்கு இயக்கங்களின் குரல்களை நசுக்கி உடனே கைது செய்து தங்கள் அதிகார பலத்தை பிரயோகிக்கும் அரசு பார்ப்பனியத்திடம் பம்முவது ஏன்? திருமுருகன் காந்தி , சோபியா, திவ்யா பாரதி , நந்தினி, என நீளும் பட்டியல்கள் இருக்க... பெண்களை, ஒடுக்கப்பட்ட சமூக மக்களை , இந்து அறநிலையத்துறை எனும் ஒரு துறையை, தந்தை பெரியாரை, இழிவாக மிகவும் கீழ்த்தரமாக பேசும் எவ்வீ சேகர்களை எச் ராஜாக்களை சுதந்திரமாக அதையும் தாண்டி அரசின் பாதுகாப்போடு வெளியே திரிய விடுகிறார்கள் எனில் இது பூணூல்களின் அடிமை அரசுதானே... ஹிந்துத்துவ பார்ப்பனியத்தின் கூடவே இடைநிலை சாதியாதிக்க வெறியர்களையும் இங்கு அடையாளங் காணப்பட வேண்டும்...

Sunday, September 23, 2018

ரபேல் ஊழல் முழு அறிக்கை





ரஃபேல்ஊழல் : அருண்ஷோரி,யஷ்வந்த்சின்கா,
பிரசாந்த்பூஷன்
வெளியிட்ட முழு அறிக்கை !

ரஃபேல் விமானங்களை ஏன் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டால் அது தேசத்தின் பாதுகாப்பு இரகசியம் என்கிறது பாசிச பாஜக மோடி அரசு. பிரச்சினை தேசப்பற்றா, ஊழலா என்பதை

"அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை"

மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக செலவிட்ட பணம் தொடர்பான தகவல்களை வெளியிட தொடர்ந்து மறுத்து வருகிறது. அப்படி வெளியிடுவது பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்கிறது. இது ஒரு வடிகட்டிய பொய் என்கின்றனர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன்.

கடந்த ஆகஸ்ட் 8, 2018 அன்று அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட முழு அறிக்கையின் சற்று சுருக்கப்பட்ட மொழியாக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமான பேர ஊழல்
பத்திரிகையாளர் சந்திப்பில், பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா
மோடி அரசின் கீழ் ரபேல் போர் விமானங்கள் வாங்கும் நடைமுறை திடீரென மாற்றப்பட்டது; இந்திய அரசு கடைபிடிக்கும் வழக்கமான அடிப்படை நடைமுறைகள் அனைத்தும் தூக்கியெறியப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் குழப்பமான மற்றும் உண்மைக்குப் புறம்பான பேச்சுக்கள் தொடர்ந்தன. ஊடகங்கள் மொத்தமாக மழுங்கடிக்கப்பட்டன. விமானத் தளவாடங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் வாய்ந்த உள்நாட்டு அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)-ஐ இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைத்து, ஒரு பெயர்ப் பலகை நிறுவனத்தை ஒத்த, விமானத் தளவாடங்கள் உற்பத்தி குறித்து குறைந்தபட்ச அனுபவம்கூட இல்லாத, தொடர்ந்து பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வருகின்ற, கடனில் மூழ்கிய ஒரு தனியார் நிறுவனம் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டது.

நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிலான முறைகேடுகளனைத்தும் ஒட்டுமொத்தமாக அரங்கேற்றப்பட்ட இந்த ரபேல் ஒப்பந்த ஊழல்தான் பாதுகாப்புத்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாகும். இந்த ஊழலானது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமன்றி இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

நாங்கள் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இங்கு முன்வைக்கிறோம்.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய அரசு உடனே வெளியிட வேண்டும். குறிப்பாக எவ்வளவு பணம் இந்திய அரசால் செலுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று மத்திய அரசை இவ்விவகாரத்தில் எதிர்க்க வேண்டும்; ஏனென்றால் மோடி தலைமையிலான இந்த அரசு, ஊழல் புரிந்ததோடு மட்டுமன்றி, அரசு நிறுவனத்தை ஒதுக்கிவைத்து தனியார் நிறுவனத்தை உள்நுழைத்து ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த அரசு மூடி மறைக்கும் அத்தனை உண்மைகளையும் வெளிக்கொண்டு வர அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும்.
ரபேல் விமான பேர ஊழல்சில உண்மைகளும் கேள்விகளும்

1. கடந்த 2007-ம் ஆண்டு இந்திய விமானப் படை வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 126 மத்திய ரக பல்நோக்கு போர் விமானங்களை (Medium Multi-Role Combat Aircrafts (MMRCA)) வாங்குவதற்கென வரைவுத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி முதன்முதலில் போர் விமானங்களை வாங்குதல், தொழில்நுட்பங்கள் பகிரப்படுதல், பிறகு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் உரிமம் போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். கூடுதல் சேர்க்கைகள் இருப்பதால்தான் ’தஸ்ஸால்ட்’ நிறுவனத்திற்கு கூடுதலாகப் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது என மத்திய அரசு கூறுவதைப் பொய் என நிருவுகிறது மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம்.

2. தஸ்ஸால்ட் ஏவியேஷன், லாக்கீட் மார்ட்டீன், போயிங், சாப், யூரோ ஃபைட்டர், ரஷ்யன் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்கள் போர் விமானங்களுக்கான ஏலத்தில் பங்குபெற்றன. பரிசோதனை ஓட்டம், தொழில்நுட்ப மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய விமானப்படை 2011-ம் ஆண்டு தஸ்ஸால்ட் நிறுவனம் மற்றும் யூரோ ஃபைட்டர் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக உள்ளன என அறிவித்தது. 2012-ம் ஆண்டு ஏல மதிப்பீட்டின் அடிப்படையில் தஸ்ஸால்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

3. தொடர்ந்து நடைபெற்ற பேரங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட இறுதிநிலையை அடைந்தனர். கடந்த 25.03.2015 அன்று பிரான்சில், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியர் ”எச்.ஏ.எல் தலைவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது விரைவில் நடந்தேறும்” என்று அறிவித்தார்.

4. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தது.

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி எரிக் ட்ரேப்பியர்
முதலாவதாக தஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு சில போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், ஏனென்றால் மிக்-21 மற்றும் மிக்-27 வகை போர் விமானங்களின் வாழ்நாள் சேவை நிறைவுற்று இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்று விட்டன. இந்திய வான்வெளி உற்பத்தித்துறை சீர்செய்யப்படுவது மிகவும் அவசியம்; இதற்காக நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் கருவிகளை இந்தியா விரைவில் பெற்றாக வேண்டும்.

பல பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற இந்திய அரசின் விமான உற்பத்தித் துறை நிறுவனமான எச்.ஏ.எல்-ஐ அபிவிருத்தி செய்வதன் மூலம் இந்தியாவால் வாங்கப்படும் ரபேல் விமானங்களை உள்நாட்டிலேயே மராமத்துப் பணிகளைச் செய்துகொள்ளலாம். ஏனென்றால் இவை 30 முதல் 40 வருடங்கள் வரை பயன்பாட்டில் இருக்கும். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் நாமே போர் விமானங்களை உற்பத்தி செய்துகொண்டு தன்னிறைவு பெறலாம்.

5. இதனடிப்படையில் மொத்தம் 18 விமானங்களை முழுவதுமாக இறக்குமதி செய்துகொண்டு, மீதமுள்ள 106 விமானங்களையும் எச்.ஏ.எல் நிறுவனம் மூலமாகவே உற்பத்தி செய்துகொள்ளலாம். 2007-ம் ஆண்டு போடப்பட்ட வரைவுத் திட்டத்தில், மொத்தமுள்ள 126 ரபேல் போர் விமானங்களுக்கு ரூ.42,000/- கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இறுதி மதிப்பீடு பொதுவில் வெளியிடப்படவில்லை. 13.04.2015 அன்று மோடியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு, தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேட்டியளித்த அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ’126 போர் விமானங்களுக்கான மொத்த விலை ரூ.90,000/- கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; ஏனென்றால் ரபேல் விமானங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை மற்றும் தொழில்நுட்பத்தில் மற்றவற்றை விட மிகவும் முன்னேறியவை; எனவே 126 போர் விமானங்களுக்கு ரூ.90,000/- கோடி என்பது தவிர்க்கவியலாதது’ என்றார். இந்தக் கூற்றின்படி ஒரு போர் விமானத்திற்கு ரூ.714 கோடி செலவாகும் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பாரிக்கர் கூறிய முக்கியமான விடயம் 90,000 கோடி என்பது ஒப்பந்தத்தில் போடப்பட்ட அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியது என்பதாகும்

6. ஏற்கனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தின்படி 18 போர் விமானங்களை (முழுமையான பயன்பாட்டில் உள்ள) வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், புதிதாகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மோடி அரசின் மாயாஜால வித்தை வெளியில் தெரிந்துவிடும்.

7. பழைய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போன்று 108 விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு ஆகப்போகின்ற செலவும், 18 விமானங்களை தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக இறக்குமதி செய்வதற்கும் பாரிய அளவிலான வித்தியாசமிருக்கும். ஏனென்றால் நேரடியாக வாங்குவது என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி செய்வதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால் ஒரு போர் விமானத்திற்கான உற்பத்தி செலவு, ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல்-ல் உற்பத்தியைத் தொடங்கும் போதுதான் கட்டமைப்பு வசதி, தொழில்நுட்பத் தகவல் பரிமாற்றம், இன்னபிற செலவுகள் உட்பட ஒட்டுமொத்த செலவும் (ஒரு போர் விமானத்திற்கு) ரூ.714 கோடியை எட்டும் என்பது மோடி அரசு போட்ட கணக்கீட்டின்படியே செல்லும். எனவே 36 ரபேல் போர் விமானங்களை நேரடியாக தஸ்ஸால்ட் நிறுவனத்திடம் வாங்கும் போது ஒரு விமானத்திற்கான விலை என்பது ரூ.714 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்க வேண்டுமென்பது மிகத்தெளிவான செய்தி

8. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்து கூறுகையில் ”ரபேல் விவகாரத்தைப் பொறுத்தவரையில், தஸ்ஸால்ட் நிறுவனம், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையுடன் பிரதமர் மோடியின் பிரான்சு பயணத்தைத் தொடர்புபடுத்த முடியாது. ஏனென்றால் அவர்கள் மேல்மட்ட பேச்சுவார்த்தைகளோ அல்லது பாதுகாப்பு குறித்த மற்ற அம்சங்கள் குறித்தோ பேசுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது”.

பிரதமர் மோடியின் ரபேல் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக திரு.ஜெய்சங்கரின் மேற்சொன்ன கூற்றிலிருந்து 4 விடயங்கள் நமக்குத் தெளிவாகப் புரிகின்றன.

பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதன்முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
எச்.ஏ.எல் நிறுவனம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் பங்குபெறுகிறது.
இந்தியப் பிரதமரும், பிரான்சு அதிபரும் வேறு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவிருக்கின்றனர்.
ரபேல் விமான பேர ஊழல்
எஸ். ஜெய்சங்கர்
இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து (10.04.2015) மோடி தன்னிச்சையாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிரான்சு நாட்டு நிறுவனத்துடன் செய்துகொண்ட புத்தம் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரான்சு அரசுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் ’இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின்படி, தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்க்கும் பணி திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்திய விமானப்படை போர் விமானங்களின் தரம் குறித்து உறுதி அளிக்கும் பட்சத்தில் மற்ற போர்க்கருவிகளையும் அனுப்பி வைக்கவிருப்பதாகவும் மேலும் போர் விமானங்களைப் பராமரிக்கும் பணி பிரான்சு நிறுவனத்தின் பொறுப்பிலேயே இருக்கப்போவதாகவும் தெரிவித்தது.

இந்த அறிக்கை இரண்டு முக்கியமான விடயங்களை தெளிவாக்குகிறது.

36 ரபேல் போர் விமானங்களுக்கான மொத்த விலை ஏற்கனவே திட்டமிடப்பட்ட 18 விமானங்களின் விலையை விட மிகவும் குறைவானதாகவே இருக்க வேண்டும்
முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட மத்திய ரக பல்நோக்கு போர் விமானம் தொடர்பான அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் 36 போர் விமானங்களுக்கென நிர்ணயம் செய்யப்பட்ட பணமதிப்பு மிக மிக அதிகம் என ஒரு தகவல் உலா வந்தது.

மோடியின் ஊழல்
மனோகர் பாரிக்கர்
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கேட்கப்பட்டபோது அவர் தன்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஒரே போடாக போட்டுடைத்துவிட்டார். மேலும் இது தொடர்பாக என்.டி.டிவி செய்தி நிறுவனத்திற்கு 13.04.2015 அன்று அளித்த பேட்டியில் ”இது பிரதமர் மோடியின் முடிவு; எனவே எனக்கு இதில் வேறெந்த வேலையுமில்லை; மேலும் இது இரு நாட்டு தலைவர்கள் கலந்தாலோசித்து எடுத்த முடிவு. எனவே கருத்து எதுவும் சொல்ல முடியாது” என்று நழுவிக்கொண்டார்.

இந்தப் புதிய ஒப்பந்தத்தில் ஆச்சர்யமூட்டும் வேறு சில செய்திகளும் உள்ளன.

36 போர் விமானங்கள் வாங்க வேண்டுமென்பது எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பது விளக்கப்படவில்லை
இந்தியாவில் உற்பத்தித் திட்டம் இருக்கிறதா என்பது குறித்தும் எந்தத் தகவலுமில்லை
தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றங்கள் குறித்து எந்த விளக்கமுமில்லை.
இந்திய விமானப்படை 126 போர் விமானங்கள் வேண்டுமென்று கோரிக்கை விடுத்த பட்சத்தில், எந்த அடிப்படையில் அவை 36 ஆகக் குறைக்கப்பட்டன என்ற விவரமும் இல்லை.
மேற்கண்ட எல்லா கேள்விகளுக்கும் இந்திய அரசு தெரிவித்த ஒரே பதில் இந்திய விமானப்படையின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் 36 விமானங்களும் இன்னும் இரண்டு வருடத்திற்குள் நம் கைக்கு வந்துவிடும் என்று மட்டும் கூறி நிறுத்திக்கொண்டது.

இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆண்டுகளாகியும், ரபேல் போர் விமானம் இந்திய விமானப்படை வசம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. செப்டம்பர் 2019-க்குள் போர் விமானங்கள் வந்துவிடும் என்று நம்பப்படுகிறதாம். மேலும் குறிப்பிடப்பட்ட 36 போர் விமானங்களும் 2022-ம் ஆண்டு மத்தியில்தான் நம் கைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம்.

ரபேல் விமான பேர ஊழல்
ரஃபேல் விமானம் வாங்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் நிர்மலா சீதாராமன்
2007-ல் போடப்பட்ட ஒப்பந்த வரைவின்படி இந்நேரம் 18 போர் விமானங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் நம் கைகளில் வந்திருப்பதோடன்றி, தஸ்ஸால்ட் நிறுவனமும் எச்.ஏ.எல் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி 2022-க்குள் 108 விமானங்களையும் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்து முடிக்கும் திறனையும் எட்டியிருக்கும். இந்திய விமானப்படையின் அவசரத் தேவை என்பதைப் பயன்படுத்தி 36 விமானங்களை 2022 மத்தியில் வாங்கி முடிப்பதற்கும், 108 விமானங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கும் வித்தியாசம் என்பது இந்த நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்பதைத் தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும்?

மேலும் சில கேள்விகள் இப்போது எழுகின்றன

கடந்த 2007-ல் போடப்பட்ட 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை அவசர நிலை கருதி ரத்து செய்து 36 விமானங்களை உடனே வழங்குமாறு இந்திய விமானப்படை மத்திய அரசிடம் எப்போது கோரிக்கை வைத்தது?
அப்படி வைத்ததென்றால் 126 விமானங்கள் பாதுகாப்புக்கு வேண்டுமென்ற கோரிக்கை எந்த அடிப்படையில் இந்திய விமானப் படையால் கோரப்பட்டது?
இந்திய – பிரான்சு நாடுகளின் கூட்டறிவிப்புக்கு முன் (ஏப்ரல் 2015-க்கு முன்), மத்திய அரசு நாடாளுமன்ற அமைச்சரவையில் 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதலைப் பெற்றதா?
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில், ஏன் புதிய டெண்டர்கள் (ஏலமுறை) கோரப்படவில்லை? குறிப்பாக யூரோஃபைட்டர் நிறுவனம் 04.07.2014 அன்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய ஏலத்தொகையிலிருந்து 20% சதவீதம் வரை கழிவுகள் தர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
புத்தம் புதிய ஒப்பந்தமும், எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்படுதலும்

9. கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தஸ்ஸால்ட் மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 108 போர் விமானங்களை எச்.ஏ.எல் நிறுவனமே உற்பத்தி செய்யும் பட்சத்தில், அதற்குத் தேவையான மற்றும் இன்னபிற வசதிகளை தஸ்ஸால்ட் நிறுவனம் செய்து தருவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டு மோடியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், இரண்டு புதிய தனியார் நிறுவனங்களின் பெயர் அடிபட்டது. அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜீஸ் லிட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிட் ஆகிய இரு நிறுவனங்கள்தான் அவை.

மோடியின் ஊழல்
மோடியின் அன்பர்கள் அனில் அம்பானி, அதானி
10. அதானி, ரிலையன்ஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்ட சில நாட்கள் கழித்து 10.04.2015 அன்று மோடி வெளியிட்ட அறிவிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கவிருப்பதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு நான்கு அதிர்ச்சி தரும் விவரங்களை உள்ளடக்கியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட ஒப்பந்தத்தின் கதி என்னவாயிற்று என்பதும், அந்த ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும், தரவுகளும் என்னவாயின என்பதும் தெரியவில்லை
இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டது; அதோடு கூடவே ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் குப்பையில் போடப்பட்டது.
’மேக் இன் இந்தியா’ குப்பையில் போடப்பட்டது மட்டுமன்றி, போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் குறித்த பேச்சும் புறந்தள்ளப்பட்டது.
குறுகிய காலத்திற்குள்ளாகவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் உள்நுழைக்கப்பட்டு பில்லியன் டாலர் வருமானம் தரக்கூடிய ரபேல் நிறுவன ஒப்பந்தத்தின் முழு பலன்கள் அனைத்தும் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டது.
11. புதிய ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்திடப்பட்ட பிறகு தஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனங்களுக்கிடையிலான புரிதலின் அடிப்படையில் கூட்டு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு அனில் அம்பானி தலைமை செயல் அதிகாரியாகச் செயல்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 51% பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் 49% பங்குகள் தஸ்ஸால்ட் நிறுவனத்திடமும் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்திற்கு 70% இலாபம் கிடைக்கும், அதாவது மொத்த பொறுப்பீட்டுத் தொகையான ரூ.30,000 கோடியில், ரூ.21,000 கோடி இந்தப் புதிய நிறுவனத்திற்கு இலாபத் தொகையாகக் கிடைக்கும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது.

12. இதே மத்திய அரசால் 01.04.2016 அன்று அமல்படுத்தப்பட்ட புதிய இராணுவ ஒப்பந்த வழிகாட்டுதல் பிரிவு 8.6-ன் படி ”எந்த ஒரு புதிய அந்நிய முதலீட்டுத் திட்டமும் அது எத்தனை சிறிய பணமதிப்பைக் கொண்டதாக இருந்தாலும் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறது. ஆனால் மத்திய அரசோ தங்கள் கையில் எதுவுமில்லை என்று கைகழுவுகிறது. அதோடன்றி தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் யாருடன் கூட்டு சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அந்த நிறுவனத்திற்கே தரப்பட்டுள்ளது. மேலும் எந்த அடிப்படையில் எச்.ஏ.எல் நிறுவனம் விலக்கி வைக்கப்பட்டது என்ற விளக்கமும் இதுவரை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பிலோ அல்லது மத்திய அரசு தரப்பிலோ தரப்படவில்லை.

இராணுவப் போர் விமானங்கள் உற்பத்தியில் நீண்ட அனுபவம் பெற்ற தஸ்ஸால்ட் நிறுவனம் எப்படி ஒரே ஒரு வருட அனுபவம் மட்டுமே பெற்ற ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் கூட்டுசேர முடிந்தது? அதுவும் மத்திய அரசின் ஒப்புதலே இல்லாமல்? இன்னொருபுறம் பார்க்கும்போது ரிலையன்ஸ் ட்ஃபென்ஸ் நிறுவனம் ரூ.8000 கோடி கடனில் மூழ்கியுள்ளது மேலும் ரூ.1300/- கோடி வியாபார நட்டம் ஏற்பட்டதோடன்றி, ஒட்டுமொத்த அனில் அம்பானி குழுமங்களுமே கடனைக் கட்டாமல் நட்டத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெருநிறுவனமாகும்.

13. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கோ அல்லது அது கூட்டு சேர்ந்திருக்கும் எந்த ஒரு நிறுவனத்திற்குமோ இராணுவ போர் விமானங்கள் தயாரிக்கும் அனுபவம் கொஞ்சம்கூட இல்லை. குஜராத்தில் உள்ள பிப்பாவாவ் கடற்படை கட்டுமான தளத்தில் ரோந்துக் கப்பல்கள் தயாரிப்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்களைச் சந்தித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் அந்த ஒப்பந்தத்தையே நிறைவேற்ற வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முரணாக இந்திய அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம், விமானங்கள் தயாரிப்பில் 60 ஆண்டுகள் அனுபவம் பெற்ற முன்னோடியாக இருக்கிறது. தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எரிக் டிரேப்பியரே இதை உறுதிபடுத்தியிருக்கிறார்.

ரபேல் விமான பேர ஊழல்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா
புதிய விமானங்களுக்கான விலையை வெளியிடாமல் இரகசியம் காக்கும் இந்த அரசு

14. பிரான்சு நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசிய நடவடிக்கைகளைக் கருதி போர் விமானங்கள் வாங்கப்படும் விலையை வெளியிட முடியாது என்று சாதிக்கிறது மத்திய அரசு. இது ஒரு அப்பட்டமான பொய்.

15. கடந்த 18.11.2016-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ” 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கென 23.09.2016-ம் தேதியன்று பிரான்சுடன் இணைந்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விமானம், உதிரிபாகங்கள், மராமத்து பணிகள், ஆயுதங்கள் என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு விமானத்திற்கு ரூ.670 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 2022-க்குள் அனைத்து போர் விமானங்களும் இந்தியாவிற்குள் வந்துவிடும்” என்று பதிலளித்தார்.

மேற்சொன்ன கூற்றிலிருந்து தெரியவரும் உண்மைகள்

அரசாங்கம் ஒரு போர் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்லியிருக்கிறது.
ஒரு விமானத்திற்கு ஆகும் செலவு ரூ.670 கோடி என்றும் தெரியவருகிறது.
விமானம் மட்டுமன்றி ஆயுதங்கள், பராமரிப்புச் செலவுகள் உட்பட அனைத்தும் இந்த விலைக்குள் உள்ளடங்கியிருக்கிறது என்றும் தெரியவருகிறது.
16. போர் விமானத்திற்கான விலையைச் சொல்லும் வெளிப்படைத்தன்மை ஏதோ 2016-ம் ஆண்டில் மட்டும் தற்செயலாகச் சொல்லப்பட்டதல்ல. 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதியிலும் நாடாளுமன்றம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ரபேல் போர் விமானங்களின் விலைகுறித்து தகவல்கள் தரப்பட்டன.

17. இரகசியம் என்பது போர் விமானத்தின் பாகங்கள், செயல்திறன், வேகம் மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் போன்றவற்றை வெளியிடக்கூடாது என்பதே தவிர விலை குறித்து இரகசியம் காக்கத் தேவையில்லை என்பதே. இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த பிரத்தியேக பேட்டியில் ‘ரபேல் போர் விமானங்களுக்கான விலையை வெளியிடும் முடிவு முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தினுடையது; இதில் எங்கள் தலையீடு எதுவுமில்லை’ என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

18. இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு இராணுவத் தளவாடங்களின் விலையையும் யார் வேண்டுமானாலும் இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நடைமுறை.

19. ரபேல் போர் விமானங்கள் 36-க்கான விலையை தஸ்ஸால்ட் அண்ட் ரிலையன்ஸ் நிறுவனமும், தஸ்ஸால்ட் நிறுவனத்தின் 2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டுள்ளன. அதன்படி 36 விமானங்களின் விலை தோராயமாக ரூ.60,000 கோடி என்கிறது அவற்றின் அறிக்கை. அப்படியென்றால் ஒரு விமானத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.1660/- கோடியாகும். பழைய ஒப்பந்தத்தில் கணக்கிடப்பட்ட 126 விமானங்களுக்கான விலையிலிருந்து பார்க்கும்போது இரண்டு மடங்குக்கும் மேல் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் நாடாளுமன்றத்தில் 18.11.2016 அன்று தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு விமானத்திற்கு ரூ.1000/- கோடி அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.

20. கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு போர் விமானம், ஆயுதங்கள், பராமரிப்பு என அத்தனை செலவுகளும் உட்பட ரூ.670/- கோடி என்று சொல்லிவிட்டு இப்போதோ கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால்தான் ரூ.1660/- கோடியாக அதிகரித்து விட்டது என்று பசப்புகிறது இந்திய அரசு

21. இந்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருவதை நிரூபிக்க மேலும் ஒரு உதாரணமாக தஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிரேப்பியர் 19.02.2015 அன்று பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ‘போர் விமானுங்களுக்கான விலை நிர்ணயம் குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். முதல் ஒப்பந்தத்தில் என்ன விலை குறிப்பிடப்பட்டதோ அதுவேதான் இப்போதும் தொடர்கிறது’ என்று கூறியுள்ளார்.

22. இறுதியாக போபர்ஸ் ஊழல் வழக்கில் என்ன நடைமுறைகளை காங்கிரஸ் கையாண்டதோ அதே நிலையைத்தான் மோடியின் பாஜக அரசும் எடுத்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை அநியாயமான முறையில் செலவிட்டு விட்டு, அதற்கான காரணங்கள் கேட்கப்படும்போது பாதுகாப்பு, இரகசியம் என்ற பெயரில் வெளியிடவிடாமல் தடுப்பது என்ற போக்கில்தான் இந்த அரசாங்கம் சென்று கொண்டுள்ளது.

மோடியின் ஊழல்
இவ்விவகாரத்தில் ஊழலின் நாயகன் – வெட்டி வாய்ச்சவடால் மோடி கல்லுளிமங்கனாய் மவுனித்திருக்கிறார்
மூன்று கேள்விகள் நம்முன்னே இப்போது எழுகின்றன

எந்த ஒரு வெளிநாட்டுடனும் போடப்படும் ஒப்பந்தத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்தின் வரம்புகளுக்கு உட்படாமல் செயல்படும் அதிகாரம் இருக்கின்றதா?
ஆர்.டி.ஐ மற்றும் சி.ஏ.ஜி போன்ற சட்டங்களுக்கு அப்பாற்பட்டு எந்த ஒரு அன்னிய நாட்டு ஒப்பந்தமும் போடப்பட முடியுமா?
அப்படியே இது போன்ற ஒப்பந்தங்கள் இரகசியமானது என்றாலும் ஊடகங்களுக்கு இந்த இரகசியத் தகவல்கள் எப்படி கிடைக்கின்றன, அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்த இரகசியத் தகவல்கள் கிடைப்பது சாத்தியமா என்ன?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அரசு எந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி 126 ரபேல் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை அநியாய விலையில் வாங்குவதன் மூலம்

தேசப்பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுவிட்டது
அரசின் கருவூலம் அநியாயமாகச் சூறையாடப்பட்டுவிட்டது
அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனம் அநியாயமாகத் தூக்கியெறியப்பட்டுவிட்டது
விமான மற்றும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் குறைந்தபட்ச அனுபவமே இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் பெருமளவிலான நிதி அதாயம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு கிரிமினல் குற்ற நடவடிக்கையாகும். அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தேச நலன் மற்றும் தேசப் பாதுகாப்பினை காவு கொடுத்து பலதரப்பினரை வளப்படுத்தும் செயலாகும்.

பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பாதுகாப்பையும், அரசின் வெளிப்படைத் தன்மையையும், ஊழலைத் தடுப்பதையும், உறுதி செய்து மேற்பார்வையிடக் கூடிய பிற அமைப்புகளும், ஊடகங்களும் முதலில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தம் எவ்வாறு கீழிறக்கப்பட்டது என்பதையும் அதனிடத்தில் தகுதியற்ற மற்றொரு ஒப்பந்தம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதன் பின்னணியை தோண்டி வெளியிட வேண்டும்.

தமிழாக்கம்: #வரதன்

ஆங்கில அறிக்கையின் இணைப்பு: ‘The Rafale Transaction Is a Case of Criminal Misconduct’

அதில் ?


பெண் எனும் என்னில்
தீட்டும் புனிதமும்
குரூரமாக காமத்தை தாக்கிட
பசியென்று சொல்லி
வெறியோடலையும்
வாய் பிளந்த கோரைப்பற்களில் வழியும் குருதி காயும் முன்னே...
உன் கழுகு பார்வையில் முதலில் என் நிர்வாணம் பூசி...
பழி தீர்த்துக்கொள்ள
துளி விஷம்
தெளித்திடுவேன்
கண்டாலே தூக்கித் திரியும்
ச்ச்சைக்...
அதில்? ....

Friday, September 21, 2018

பிரியமானவளே


அந்தி வானத்தில்
தவழும் பிறை
தோள் தொட்டு
தேடுவதற்குள்
என்னில் உட்புகுந்தாய்
அந்நேரத்தில் மலர்ந்த
மலரின்
ஸ்பரிசத்தை போல...
சொல்ல மறந்த கதைகள் என
ஏதுமில்லை நமக்குள்...
ஆம்...
நான் மரணித்த பிறகும்
உன் நினைவுகளினூடே
அவை அசைபோடுமல்லவா...
யாதொரு ஒளிவு மறைவுமற்ற
நேசத்தில் செதுக்கிய
காதலின் கூடு அது...
பிரியமானவளே...

Friday, September 14, 2018

ராட்சஷி


எனக்குள் ஒலித்திடும்
ஜீவ நதிகளின் இசையினூடே
உன்னை தேடுகிறேன்
அனுதினமும் இம்சிக்கும்
உன் பேச்சொலிகளின் மயக்கத்தில்
நித்தம் அலைகிறேன் ஒரு
பித்தனாக...
பசி மறந்து... தூக்கம் மறந்து...
என் துக்கத்திலும் நீ.. கலந்து...
ஒவ்வொரு நொடிகளிலும்
உன் பெயரையே உச்சரித்து
வாழ்தல் பிடிக்கிறது‌‌.‌‌..
ஆமாம்...‌‌
காதல் எப்போது வந்தது எனக்குள்
என்று மட்டும் புலப்படவேயில்லை
இன்று வரையில்...
உனக்கும் அப்படித்தான்
என்றுணர்ந்து உச்சிமுகர்ந்து
மிச்சங்களை வாரி இறைக்கிறேன்
முத்தங்கள் என்றுணர்வாய் நீ...
மூச்சின் வெப்பம் தணிவதற்குள்ளாக
நாம் விழித்துக்கொள்ளுதல் வேண்டாம் விடிந்த பின்னாலும்... 
இமைகளை மூடிக்கொண்டே
நினைவுகளின் பகிர்தலில் ஒன்றாய்
படுத்திருப்போம்...
பேரன்பின் பெருங்கனவு நமக்குள்
காட்சிகளாகட்டும்
ராட்சஷியே.‌‌..

Thursday, August 02, 2018

பென்சில் மீன்


சிறு பொறி தட்டும்
சூடேறிய மனதிற்குள்
சூழ்ச்சமங்களை அவிழ்த்துவிட்டு
வீசும் காற்றில் சில்லென்ற...
நதியின் சாரலில் கடந்து
சிலிர்த்தெழும்  அலைகளினூடே
உட்புகுந்து பாதி இரவினை
பல வர்ணங்களால் தீட்டி
மீதி இரவினை உடற்சூட்டால்
தகர்த்து
ஆதி பிறப்பிடம் தேடி
அலையும்
யாரோ ஒருவன் வரைந்துவிட்டுப் போன
பென்சில் மீன் நான்...
சுவாசித்தலுக்கு அவன்
செவுல்களை தீட்ட
மறந்தான்...மறுத்தான்...
சிலுவையில் அறைந்துவிட்டதொரு
உணர்வு...
மீண்டு(ம்) வந்து
கிராபைட் கறுப்பில் கோடிட்டேனும்
சிலுவையில் இருந்தென்னை
மீட்டுவிடு ஒரு மீட்பராய்...
வலைவிரித்தோ
தூண்டிலிட்டோ...
நதியோர காத்திருப்பில்
உனைத் தேடி வந்து
சரணடைவேன்...
ஒரு உயிர்பெற்ற அதே
பென்சில் மீனாக...



Sunday, February 25, 2018

ஒரு நடை பிணம்




எங்கும் உலத்திக் கொண்டிருக்குமென்
எண்ணக் கதவுகளுக்கு
கண்ணீரின் தேவைகள் 
அவசியமாகிறது...

அலறுவதற்கோ
அழுவதற்கோ
இடமில்லாத
இசங்களை கண்டு
உணர்வுகளை அழுத்தி
வெற்றுச் சதைகளாக
ஒரு நடை பிணம்...

எந்த சவுக்கடிகளும்
சீக்கிரத்தில்
தீர்ந்து போவதை
விரும்பாத கண்கள்
வேடிக்கை பார்த்து
எக்காளமிடுகிறது....

ஆமாம் ஏன்?
எங்கோ நடப்பதற்கு
ஏன் நான் அழ வேண்டும்?

எனது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதே...

இப்படியான இசங்களினால்
ஆழ்மனதின்
அமிழ்ந்துவிட்ட
கூர்முனை கத்திகளின்
கீறல்கள் தந்த
தழும்புகளே ஏராளம்...

நான் ஆதிப் பழங்குடி
நான் நரிக்குறவன்
நான் தலித்
நான் பெண்
நான் சிறுபான்மையன்
நான் காதலன்
நான் காதலி
இத்யாதி இத்யாதி....

கொலை செய்தோ
குடிசைகளை கொளுத்தியோ
ஆணவப்படுகொலை செய்தோ
வண்புணர்வு செய்தோ
மசூதி இடித்தோ
எதுவோ....

துடிக்கத் துடிக்க சித்ரவதை
செய்யுங்கள் சனநாயகத்தை...

செவிடர்களை கண்டே
பழகிப்போய்
வெறுத்துவிட்ட
மனங்கள்தான்
என்னுடையது...

அதனாலே
அலறுவதற்கோ
அழுவதற்கோ
இடமில்லாத
இசங்களை கண்டு
உணர்வுகளை அழுத்தி
வெற்றுச் சதைகளாக
ஒரு நடை பிணம்...
வலியுடன்....

Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்





இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!

விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!
அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!

ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன் சொத்தை அபகறிக்கும் திருட்டு கூட்டங்களிக்கிடையேதான் தலித் சமூகம் இன்றும் வாழ்ந்து கொன்டிருக்கிறது. சிறுவனை கொலை செய்தல் , பெண் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தலில்தான் உங்களின் சாதிவெறி இருக்கிறதெனில்.. அச்சாதியாதிக்கத்தை ஆணவப்படுகொலைகளை தடுத்து சம உரிமைக்காக தலித் ஆதிக்கம் எழுந்து நிற்குமேயானால் அந்த தலித் ஆதிக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது... இங்கே முழுக்க முழுக்க சாதியத்தாலே கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் என்றுமே மனிதன் கொடூர மிருகமாகத்தான் இருக்க முடியும்.. சாதியத்தை அதன் வேரான ஹிந்துத்துவ பார்ப்பனியத்தை... அதனை வளர்த்தெடுக்கும் இடைசாதி ஆதிக்க வெறியினை அம்பேத்கரை விடவும் , பெரியாரின் கைத்ஊடி விடவும், மாவோவின் எதிர்வினையை பயன்படுத்துகையில் அடித்து விரட்ட இயலும் என்றே தோன்றுகிறது... ஆம்
" நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்" என்பதே அது.....

Friday, February 23, 2018

ஏது இங்கே மனிதத்தன்மை





Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள் "ஆக்கிரமித்தார் " அல்லது அடிமைபடுத்தினார் என்பதுதான் உண்மை இதை அங்கே மிச்சமிருக்கும் பழங்குடி ஆதிக்குடிகள் கேட்டுக்கொண்டதாக சொன்னார்... ஆக இங்கே எல்லோரும் " வந்தேறிகள்"தான் ஆதி பழங்குடி இனத்தவர்களே பூர்வக்குடிகள்... எதற்கு இதை சொல்கிறேன் என்றால் அந்த கேரள பழங்குடி  இளைஞன் மது ன்று பெயர் கொண்ட இளைஞனை  200 ரூபாய் திருடியதற்காக அடித்தே கொன்றார்களே ! அவர்களுடன் மிருகங்களைக்கூட  ஒப்பிடாதீர்கள்... ஏனெனில் மிருங்கள் தங்கள் பொது எதிரியான " பசியுடன் " மட்டுமே போரிடுமே தவிர... இவ்வாறு கொலை செய்யாது.

தஷ்வந்த் தூக்கில் தீர்வு கிடைத்திடுமா ?



அப்படி பார்த்தால் இச் சமூகத்தில் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாய் இருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை... அந்தளவுக்கான வன்மம், முறையற்ற பராமரிப்பு, ஒழுக்கம் தவறிய செல்லம்தான் இங்கு குழந்தை வளர்பாகிறது... அது போக பாலியல் குறித்தான விழிப்புணர்வு இங்கில்லை அந்தளவுக்கு மதங்கள் தங்கள் புனிதங்களை புகட்டி விட்டிருக்கிறது... ஆண்டாளை எப்படி தாசியென சொல்லலாம் என பொங்கியவர்கள் தங்கள் மதங்களுக்குள்ளேயான பாலியல் வஞ்சகங்களை மறைத்திடுகிறார்கள், போலவே  இதற்கான எதிர்வினை என ஆண்டாள் எப்படி "காமம்" பற்றி செய்யுள் எழுதலாம் என பொங்கியவர்களே இங்கு ஏராளம்... ஆக இங்கு இப்பொழுதும் காமம் ஒரு ரகசியப்படுத்துதலாகவே இருக்கிறது அதன் விளைவாகவே பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை குறித்து தங்கள் மகன், மகள் களுக்கு எடுத்துகூறுவதில் மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது... அதே மாதிரி எப்படியானாலும் சில மிருகத்தன்மை ஒட்டிக் கொண்ட மனிதர்களின் தொடுதல் எவ்வகையானது என்று தங்கள் பிள்ளைகளுக்கும் விளக்கிட தவறிவிடுகிறார்கள்... ஒரு தூக்கு இதையெல்லாம் சரி செய்யுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பேன்.. போலவே... ஏதேனும் ஒரு சம்பவம் தஷ்வந்துக்கள் மாதிரியாக நிகழ்ந்து அதில் பலரின் விமர்சனங்களை நன்றாக கவனியுங்கள் , குறி அறுக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்றே இருக்கும் ஒருவரும் " நிகழ்ந்து விட்டது அடுத்து என்ன மாதிரியாக சமூகத்தை நகர்த்தப் போகிறோம்" என விமர்சனம் எழவே எழாது... இதுவும் கடந்து போகும் என்பதாகத்தான் எதுவும்,, இயலாமைக்கு " சவுதி தண்டனையை நடைமுறைப் படுத்த வேண்டுவோம்,,,
எழுதுவேன் இன்னமும்....

Tuesday, February 20, 2018

பெயரற்றவ(ளி) னின் பேரன்பு





பெயரற்றவ(ளி)னின் பேரன்பு

அவ(ள்)ன் அசைவுகளற்றவனில்
இருந்து
ஒரு தும்பியின்
விரல் பிடித்து சில மணித் துளிகளை
கடந்து விடும் ஆசையில்
முற்றத்து பூஞ்செடிகளின்
மீது பற்று கொள்கிறான்...

துறப்பு என்பதன் பொருளில்
தன்னை அர்ப்பணித்து
தேடுகையில்
அவனை சூழ்ந்து வெறும்
தும்பிகள் மட்டுமே
தன் மெல்லிய சிறகுகளினால்
சிறை வைத்துவிடுகிறது

தும்பிகள்  அனைத்தும் சேர்ந்து அவனை என்ன சொல்லி அழைக்கும்....

ஆழ்ந்த உறக்கத்தில் அத்துணை பெயர்கள் கனவுகளில் அவனுக்கு
மட்டும்....

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...