Monday, January 28, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் நியாயமானதா ?




பிரச்சினை இதுதான் ... வெகுசன மக்கள் போராட்டம் நடத்துகின்றபோது "எனெக்கென்ன வந்துச்சு " என்கிற மனநிலையில் ஆசிரியர்கள் இருந்தமையாம் இன்று அவர்களுக்கு எதிராக  "அதிக சம்பளம்" என்கிற வரையறைக்குள் அடக்கி ஆசிரியர்களுக்கு எதிராக பொது சனங்கள் திரும்பியிருக்கிறது ...
இதனை எப்படி அணுகுவது என்று மற்ற அரசியல் இயக்கங்களுக்கும் விளங்கவில்லை .... அரசு மிகப்பெரிய அளவில் ஊதிய சுரண்டலில் ஈடுபட்டதை மறைக்க முயற்சிக்குமே தவிர அதனை சரிகட்டும் வேலையில் என்றுமே இறங்காது ... தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வெகு சன மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பி விடுவதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது அரசு ... இன்று தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அவ்வளவு பெரிய போட்டி நிகழ்கிறதெனில் 2011 முதல் 2019 வரையிலான அதிமுக அரசே காரணம் என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள் ... இடையில் பகுதிநேர ஆசிரியர்கள் என்கிற போர்வையில் "அரசு வேலைக்கு கமிஷன்" எனவும் கொள்ளையடித்த ஜெயாவை நோக்கி  "இரும்பு மங்கை " என்று புகழ்ந்தும் அனுதாபங்களை மக்கள் தந்துவிட்டார்கள் ... இதன் நீட்சி "துப்புரவு பணியாளர்கள்" நியமனம் வரையில் கமிஷனுக்கு அரசு வேலை என்று இப்பொழுது வரையில் நீடித்துக்கொண்டுதானிருக்கிறது . முழுக்க முழுக்க முதலாளித்துவ ஆட்சியை நோக்கி பாய வேண்டிய முழக்கங்கள் எப்படி போராடும் இயக்கங்கள் , அமைப்புகள் , சங்கங்கள் மீது திருப்பிவிடுகிறதென உணரும் பட்சத்தில்  ஒரு மாநிலத்தை ஆளும் ஏகாதிபத்திய  கட்சிகள் எவ்வாறு தங்கள் சுய லாபத்திற்காக மக்களை பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும் ... அதுமட்டுமின்றி தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பு  போராட்டம் முதல் மாற்றுத்திறனாளிகள் போராட்டங்கள் வரையில் ஆளும் ஏகாதிபத்திய  அதிமுக அரசின் அணுகுமுறைகளை மக்கள் சற்று சிந்தித்திட வேண்டும் , அதுபோலவே ஆசியர்களும் , இதுவரையில் மக்கள் போராட்டங்களில் அடையாள ஆதரவு கூட எங்கும் கொடுத்ததில்லை ஜாக்டோ ஜியோ அமைப்பு என்பது அவர்களுக்கே தெரியும் .  ஏன் அவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்று கேள்விகள் முன்வைக்கப்படலாம் ... அதற்கு பதில் இன்று  ஆசிரியர்கள் போராட்டத்தை அரசுக்கு எதிராக இல்லாமல் அதே ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் ஆளும் அதிமுக அரசின் அரசியல் யுக்தியை அறிந்திடவே ஜாக்டோ ஜியோ மக்கள் போராட்டங்களில் குரலெழுப்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் . ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அவனோடு "அரசியல் " என்பது இயல்பாகவே பயணிக்கத் தொடங்குகிறது என்கிற உண்மை எப்போது உணர்கிறோமோ அப்பொழுது சனநாயகத்திற்கு வித்திடும் நல்லாட்சியை நாம் தேர்தெடுக்க முடியும் . ஆகவேதான் "அரசியல் பழகு " என அழுத்தமாய் சொல்லப்படுகிறது . ஆண்டாண்டுகால  "உழைப்புச் சுரண்டல் " இன்றும் தொடர்வதற்கு அரசியல் அறிவின்மையே காரணமாக அமைகிறது .  குறைந்தபட்சம்  ஆசிரியர்களின் CPS  பணம் 50000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கும் அரசை நோக்கி தயவுசெயது கேள்வி கேட்கலாம் ... ஏனெனில் இந்த ஊழல் வாதிகள் அவர்களுக்குள்ளாகவே தங்கள் இஷ்டம் போல சட்டமெழுதி "சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு " என இயற்றியபோது நாம் அமைதியாகவே வேடிக்கை பார்த்தோம் , அதுமட்டுமின்றி மக்களை ஆளும் எந்த அரசியல் அதிகார வர்க்கத்திற்கும் (மருத்துவம் , சட்டம், தவிர...)  "எங்களை ஆள இன்ன தகுதிதான் பெற்றிருக்க வேண்டுமென்கிற வரையறை இல்லாத போது அப்படியே எதற்கெடுத்தாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் அவர்களுக்கு சனநாயக ரீதியாக நாம் உரிமை தந்திருக்கிறோம்  அதனடிப்படையில் இவர்களும் TET , NEET , என பல்வேறு அடக்குமுறைகளை மாணவர்கள் மீதும் ஏவுகிறார்கள் . அப்படியே அந்த தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றாலும் மறுபடியும் "கமிஷனுக்கே அரசு வேலை " என்கிற சுழற்சிக்குள் மட்டுமே சுழலும் ஆளும் அதிகார வர்க்கம் . இங்கு இதன்படி எந்தவொரு அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திடும் மனப்பான்மையில் அரசு இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள் எனில் மொத்த குரல்களும் நிச்சயமாய் அரசுக்கெதிராகவே திரும்பட்டும் . 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 17000 ஆசிரியர்களை இன்னமும் பணியமர்த்தவில்லை இந்த அரசு என்பது குறிப்பிடத்தக்கது .

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் :


Sunday, January 27, 2019

பத்மஸ்ரீ கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார்




இந்துத்துவம் முற்றிலுமாக பரவி கிடக்கின்ற காவி தேசத்தில் மாட்டு கோமியத்திற்கு கூட விருது வழங்கப்படலாம் , இதில் அதிர்ச்சியாகவோ , ஆச்சர்யப்படவோ ஒன்றுமில்லை , கடவுளர்களை காட்டி மக்களின் மனங்களில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து அதன் மூலம் கொழுத்து அலையும் போலிச் சாமியார்களை கொண்டுதான் இந்த பாசிச பாஜக "ராம ராஜ்ஜியம்" என்று திரும்பவும் மனு சாஸ்திர குப்பைகளை மக்கள் மீது திணிக்கிறது , இதற்கு ஆளுகின்ற மாநில அரசுகளும் அடியாட்களாய் போய் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை , தமிழகத்தில் எந்த பெரிய அரசியல் கட்சிகளானாலும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் என்கிற அயோக்கியனின் பணத்தை நன்கொடையாக பெற்று தேர்தல் அரசியலை சந்துத்துவிடுகிறது என்பது எதார்த்த உண்மை , இது இப்பொழுது மட்டுமல்ல அந்த போலிச் சாமியார் உறுவான காலத்திலிருந்தே இதுதான் நிலைமை . அம்பேத்கர் உரைப்பார் ,,,
 பெண்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவித்து , அவர்களுக்கு அரசியல் அறிவை ,அடிப்படை கல்வியின் மூலம் புகுத்தினால் பெண்கள் தாங்களாகவே "பெண்ணடிமை" தளத்தை உடைத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று ...

ஆனால் இப்போதைய காலக்கடத்தில் இது தலைகீழ் விகிதங்களாய் போனது  பங்காரு அடிகளார் எனும் அயோக்கியனின்  காலை கழுவி மரியாதை செய்வதிலிருந்து தங்களை தாங்களே " சுய மரியாதை" யை இழக்கின்றனர் , நில மோசடி , பல்வேறு கொலைகள் , அதிலும் குறிப்பாக சிறுமிகளை நரபலியிடுதல் , நில ஆக்கிரமிப்பு , தன்னையே தெய்வமாக கட்டமைத்தல் என அனைத்து களவாணி வேலைகளையும் மிகக் கச்சிதமாக "ஹிந்து மதம் " என்கிற கற்பிதங்களுக்குள் செய்பவன்தான் இந்த கங்காரு "ச்ச்சீ பங்காரு அடிகளார்.

யாருக்கு ? பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது நிசர்சன உண்மை ... அதேவேளையில் மத்திய காவிமய ஹிந்துத்துவ பாஜக அரசு " பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பதால் " பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென கூறுகிறது ... இதை ஏன் சபரி மலை ஐய்யப்ப கோவிலில் செய்தால் இதே பாசிக பாஜக எதிர்க்கிறது ?   இங்கு பூசாரிகளும் , அர்ச்சகர்களையும் வேறு வேறு திசைகளாகவே அணுகுகிறது  ஹிந்துத்துவம் என்பது வெட்டவெளிச்சமாகிறதல்லவா ... என்னதான் இருந்தாலும் அவாள்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நெருங்கி விடலாம் , ஆனால் இதே கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார் எனும் சூத்திரன்  அவாளின் கோவில்களில் உள்ளே தேவஸ்தானத்தில் சென்று பூஜை செய்ய முடியாது .... இதுதான் எதார்த்தம் ... நிலைமை இப்படியிருக்க பார்ப்பனிய இந்துத்துவ மோடி கும்பல் "பத்மஸ்ரீ விருது" என்கிற பெயரில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதே தவிர அவர்களுக்கு இந்த போலிச்சாமியார்களால் பெரும் நிதியுதவி பெற்று கட்சியை இந்துத்துவத்தை வளர்ச்சியடைய கருவியாக பயன்படுத்துவார்களே தவிர , வேறென்ன உள்நோக்கம் இருந்துவிடப்போகிறது .  கங்காரு அடிகளார் என்பதே எச் ராஜாவின் ட்விட்தானே ஒழிய இங்கு இந்த  இந்துத்துவ போலிச் சாமியார்களை இதைவிட கேவலமாக பேசிவிடலாம் ... மதம் மனிதனை மிருகமாக்கும் என்கிற பெரியாரின் எழுத்திலிருந்து முளைபெற்ற தமிழகம் இப்படி கவிகளின் பின்னால் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது . குரங்கு (அனுமான்) கையில் பூமாலை கிடைத்தது போல இவர்கள் கையில் " பத்மஸ்ரீ விருது" படாதபாடாய் படுகிறது .

Wednesday, January 23, 2019

வார்த்தைகளில் ஒளிந்து கொள்கிறாய் ...




மிக சொற்ப சொற்களால் குறித்தெழுதும் கனவுகள் எனக்கு மட்டுமே ‌
வாய்த்திருக்கிறதென எண்ணுகிறேன் ...

உனை காணும் பொழுதெல்லாம் தேனருந்தாமலே பூக்களின் மகரந்த வாசனையில் லயித்து மயக்கம் கொண்டு ...

சிரிக்குமந்த  மலர்களிலே வீழ்ந்து கிடக்கும் ஒரு பட்டாம்பூச்சியின்
பிதற்றல் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டலையும் காதல் மயக்கம் கொள்கிறேன்...

என் நாடித்துடிப்புகளில்
இப்படித்தான் உன் மீதான காதல் ஒளிந்து கொண்டிருக்கிறது போலும் ...

Monday, January 21, 2019

லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...


















































லயோலா கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓவிய கண்காட்சிகளில் இடம்பெற்ற புகைப்படங்கள் இவை ... நாள்  : திங் :21 :2019























வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...