விரிந்து கிடக்கும் மணற் போர்வைகள் வழியே ...
விளங்க முடியாத கையறு நிலையில்
நீட்சிகள் பெறும் சாபக்கேடுகளில்
ஒன்றை எடுத்து
தன் பாத இடுக்குகளில் நுழைத்து
நடக்க ஏதுவாக இன்னொரு
வரட்சியை இறுக்கக் கட்டி
காலணி என உடுத்தி
எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியிலும்தான்
எத்துணை எத்துணை துரோகங்கள் ...
பித்து பிடித்தவளின் பிதற்றல் வார்த்தைகளில் யாதொரு குறியீடுகளுமின்றி
ஏமாற்றம் ஒன்றே பிரபஞ்சத்தின் வாழ்வியல் விதியென ஏக்கங்களை சுமந்து மணற் போர்வைக்குள்ளிருந்து
சற்றே கடலலை அழைத்திடும்
தூரத்தில் அவளும் போனாள் காட்சிகளுக்கு துணையாய் அல்ல ...
இந்நிலத்தில் எனக்கு ஏன்
வாழத் தகுதியற்றவளாக மாற்றி வைத்தீரென
கேள்வி கேட்க ...
0 comments:
Post a Comment