Friday, February 08, 2019

பேரன்புக்காரன் அவன்




கூர்வாள் வீசும் அவன்
பார்வைகளில் பட்டுத் தெறிக்கும்
என் பெண்மையின் விழுதுகளை சுருட்டி
இழுத்துக் கட்டி
ஊஞ்சலாடுகிறேன்
காதலெனும் ஆல மரத்தினில் ...

என் கன்னத்தில் பூசிக்கொண்ட சிவப்பை எடுத்து அவனும் பூசிக்கொள்கிறான் ...

எவ்வளவு இடைவெளிகள் இருந்த பின்னாலும் பேரன்போடு எனக்காகவே ஏங்கித் தவிக்கும் வதைப்புகளினூடே
உட்புகுந்து அவன் மனதோடு பேசும் வித்தைகள் கற்றுத் தந்தவனும் அவன்தான் ...

அதீத ஆர்வம் கொள்கிறேன்
அவன் என் கண்களை கவர்ந்திழுக்கும் பொழுதுகளில் எல்லாம்
அக்கணமே அவன் நெஞ்சில் சாய்ந்திட வேண்டுமென்று ...

எனக்குள் இருந்து
நான் மட்டுமே காணும்
காதலெனும் பெருங்கடலில்
நீந்திப் பழகுகிறேன்
அவனுக்குள்  அலையென வீசி
அனுதினமும் ...

ஒருநாள் அந்த ஒருநாள்
என் மூச்சு ஊசலாடி
கண் மூடுமந்த
கடைசி நிமிடங்களில் கூட
அவன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை தாண்டி
என்னை அவன் கண்களுக்குள் காண்பேன் அத்துணை
பேரன்புக்காரன் அவன் ...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...