ஒரு அறைதலில் வெளிபடும்
வீரயத்தில் சிவந்திடும்
கன்னங்களில்
பதிந்துவிட்ட அச்சுகளில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை ...
காய்ச்சி எடுத்த வெப்பச் சலனத்தில் எங்கும் புண்கள் முளைத்து
வடுவென மாறிப்போன
அந்த தொழிலாளிகளின் கரங்களில் தங்கியிருக்கும் வலிகளில்தான்
அதிர்வுகளை காண்கிறது அதிகார வர்க்கம் ...
நிறங்களின் கிளைகளில்
படிந்துவிட்ட கரைகளை
சனநாயக சக்தி கொண்டு
மீண்டும் துளிர்விட துடிக்கிறது
எல்லோர் கைகளிலும் பூட்டப்பட்டு
கிடக்கும் அடிமை விலங்கை
அதிர ... அதிர ...
உடைத்தெறிந்து கிடாசுகிறது
ஆதி மரத்தில் அழியாச் சுடராய் வீற்றிருக்கும் அப்பேராயுதத்தில்
நிறைந்திருக்கும் கருநீலசிவப்பு நிறங்கள் ...
வானுயர்ந்த ஒற்றை மரக்கிளையில்
நிறங்களின் பூர்வ பகையை அசைப்போட்டுக் கொண்டே இருக்கிறது
எவனோ எழுதிவைத்துவிட்டுப் போன
சாதிமத சட்ங்குளின் வழியே ஒழுகும் மதமெனும் சாதியெனும்
வர்க்க பேதங்கள் சூழ்ந்த விஷ பரிட்சைகள் அப்படியே ...
தொழிலாளர் வர்க்கம் மீண்டெழாதபடிக்கு
அப்படியே ...
என்றேனும் ஒருநாள்
எதையும் அழித்தொழித்தல்
பகுத்தறிவின்பால்
எங்கும் நிறைந்திருக்கும்
எம் கருநீலசிவப்பு ...
0 comments:
Post a Comment