Friday, May 10, 2019

ஒருதலைக் காதல் , மறுத்தால் படுகொலைதான் தீர்வா ?




தலித்திய ஆதரவுகள் , தலித்திய ஒடுக்குமுறைக்கான எதிர்வினைகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற போதெல்லாம் அதே தலித்தியத்தினுள் இருக்கும் காட்டுமிராண்டிகள் முந்தைய எல்லா நியாயமான வழிகளையும் மூடி தலித்துகள் மீதே சேற்றை வீசிவிட்டு போகின்ற தலித் காட்டுமிராண்டிகளை என்னவென்று அழைப்பது? கடலூர் கோரச்சம்பவம் போல நிறைய இங்கு நடந்துகொண்டுதானிருக்கிறது ... அருந்ததியர் குடியிருப்பில் ஒரு பெண் பருவத்திற்கு வந்தால் போதும் அங்கு சிதைத்து சீரழிக்கப்பட்ட பெண்களின் நிலமை சொல்லி மாளாது, போலவே  மாற்று சாதியினரை திருமணம் செய்து இல்லரம் நடத்தாமல் அவர்களை கொடுமை படுத்துவதும் நடந்துகொண்டிருக்கிறது .... நான் எப்பொழுதும் சொல்வேன் ... ஏதாவது சமூக அநீதி நிகழ்துவிட்டால் நான் பறைச்சி, பறையன் என  துணிச்சலாக பதிவிடும் அந்த துணிச்சலை இன்னமும் பறையர்கள் சக்கிலியர்களுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை , என்னதான் தலித்துகள் நிகழ்த்தும் படுகொலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்த்தப்படுகிறது என்று விவாதம் வைத்தாலும் அதுவும் படுகொலைதானே , என்னை பொறுத்தவரையில் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு நிகரானது இம்மாதிரியான படுகொலைகளும் , ஏனெனில்  காதலை ஏற்கவோ , நிராகரிக்கவோ ஒரு பெண்ணிற்கு முழு சுதந்திரம் உண்டு , அது பெண்ணின் உரிமையும் கூட , அதில் தலையிட வற்புறுத்த எந்த ஆணுக்கும் உரிமை இல்லை , அது சமூக அநீதியும்கூட , எல்லாரும்  இயக்குநர் பாலாவை சிகரத்தில்  வைத்து கொண்டாடுகின்றபோது  எனது பெயரில் வெளியான முதல் படம் " சேது" வில் அந்த கதாபாத்திர காதல் வற்புறுத்தல் அவ்வளவு வன்மம் சூழ்ந்தது என்று பதிவிட்டது ஏனே நியாபகத்திற்கு இப்போது வந்தது . தனது பெற்றோரின் மீதான பயத்தை அச்சத்தை விட "என்னை காதலி இல்லைனா கொன்னுடுவேன்னு" மிரட்டுகிறவனோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டுமே ... அது எவ்வளவு கொடுமையானது என்று உணர்ந்தால் சக மனுஷியை சம நீதியில் வைத்து பார்க்க முடியும் , காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது , கொலை செய்வது , தனது உடலை வருத்தி அந்த பெண்ணை பயமுறுத்துவது , அப்பெண் சார்ந்தோரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவது என்று ஏக போகத்திற்கு பெண்கள் மீது கொடுமைகளை அழுத்தமாக திணிப்பது தமிழ்ச் சமூக சீரழிவிற்கு வித்திடுவதாகவே பொருள் . தொட்டால் தீட்டென்றால் தொடாமல் விடாதே என தலித்தியம் கூறும் சமூக நீதி கருத்துகள் வெகுசன மக்களிடத்தில் கடினப்பட்டு கொண்டு சேர்த்தால் , இந்த காட்டுமிராண்டிகள் , என்னை காதலி ... இல்லையேல் கத்தி வெட்டு என சொல்லி அத்துணை சமூகநீதியையும் சுக்குநூறாக உடைத்திடுகிறார்கள் . ஒன்று மட்டுப் தெளிவாக தெரிகிறது , எல்லா சமூக அநீதிகளும் , சமூக படுகொலைகளும் பெண்களை சுற்றியே இங்கு கட்டமைக்கப்படுகிறுது , அதையும் இவர்களை கற்பிதமும் செய்கிறார்கள் என்பது மிக வேதனையான விஷயம் .

Wednesday, May 01, 2019

தொழிலாளர் தினம் இந்தியாவில் ...



                   உலகத் தொழிலாளர்களே
                    ஒன்று சேருங்கள் - மாவோ

முதலாளித்துவ வர்க்கம் , தொழிலாளர் வர்க்கம் என இரு வர்க்கங்களின் மூலம் சாதிய மனோநிலையில் இங்கு கொட்டிக்கிடக்கிறது , பெரு முதலாளியர்களின் சுரண்டல்கள் பொருளாதார ரீதியிலான ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் ஹிந்துத்துவ சாதியத்தினுள் சுழன்றுக்கொண்டே இருக்கும் . முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் மோதல்களும் இவ்வகையில்தான் கட்டமைக்கப்படுகிறது , சாதியப் படிநிலையில் தனக்கு கீழான‌ஒருவன்  தனக்கு நிகராக முதலாளிய பலம் பெறுவதை அதே முதலாளித்துவ வர்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை , அதேபோல
தொழிலாளர் வர்க்கம் தனக்கு கீழான சாதிய படிநிலை கொண்ட சக தொழிலாளர்களை நசுக்குவது அல்லது அடிமைபடுத்துவதிலேயே குறியாக இருக்கும் வேளையில் இங்க தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது . இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு வர்க்கங்கள் என்பதை தாண்டி மூன்றாம் வர்க்கமாக "சாதிய முரண்" இடம்பெறுவதை    சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டு கொள்வதில்லை என்பதே எதார்த்த நிலை .
ஒரு சமூகம் தன் அடிமை நிலையிலிருந்து மீண்டெழுந்து சோஷியலிஸத்தை விரும்பதாக  தன் நிலையிலிருந்து அது மீண்டெழ முதலில் சாதிய வர்க்கம் பேதங்களிலிருந்து மீண்டெழ வேண்டும் . இந்த நிலையிலிருந்து பார்த்தோமானால் ,
 இந்தியாவில் எந்தவொரு தொழிற்சங்கங்கமும் அதன் பின்னணியில் இயக்கப் பொருளாக இருப்பது சாதிய படிநிலை கொண்ட தொழிற்சங்கங்களாகவே காணப்படுகிறது . போலவே அதன் அடுத்த நிலையிலிருந்து ஆணாதிக்கம் என்கிற பதத்திலும் வந்து ஒட்டிக் கொள்கிறது .  சோஷியலிஸ கம்யூனிஸ்ட் எப்பொழுதும் பெண்ணடிமை தளத்தை உடைத்தெறிந்து விடுதலில் தனக்கான ஓரிடத்தை கொண்டிருக்கிறது என்பது வரலாறு , பெண் சுதந்திரம் , பெண்களுக்கு சம உரிமை , பெண்களுக்கு வாக்குரிமை , ஆணாதிக்க எதிர்ப்பு என எல்லா தளங்களிலும் கம்யூனிஸ சித்தாந்தங்கள் இல்லாமல் பேசிவிட முடியாது , ஆனால் இன்றளவும் நீளும் பெண்ணடிமைத்தனம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை . எனவே இந்த மே 1 தொழிலாளர் தினத்தில் சாதிய மனோபாவத்திலிருந்தும் , ஆணாதிக்க மனோபாவத்திலிருந்தும் தொழிலாளர் வர்க்கம் விடுதலை பெற்று ஒரு முழுமையான சோஷியலிஸ , சமத்துவ தொழிலாளர் வர்க்கம் உருவாகி முதலாளித்துவ எதிர்ப்புக் களத்தை உறுவாக்கிட நாம் அனைவரும் "தோழன் " என்கிற முறையில் சக மனிதர்களாக களம் அமைத்திட வேண்டும் .
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ...
மேதின வாழ்த்துகள் ...

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...