Saturday, July 20, 2019

அட பைத்தியக்காரா !!!




பைத்தியமானதின் உன்னதம்
தளர்ந்து போன மனங்களின்
தூசி படிந்த இரவுகளை
தட்டி சீர்படுத்தும் ஒரு பேரன்பு
இல்லாது தவிக்கும்
பெரும்பசி கொண்டவனின் கால்களில் விலங்கிட்டு ...

தேற்றுதல் மொழி அல்லாத பார்வையில் சில எச்சில்களை உமிழ்ந்து கடந்துவிட்டு போகிறது இப்பெரு வாழ்வு ...

ஆசைகள் பேராசைகளாகி அதுவே
நிராசைகளாக
எத்துணை எத்துணை பைத்தியங்கள் இங்கு  வீதியுலா கொள்கிறது ...

உணர்தல் விளக்கங்களாக
உயிர்கள் அனைத்தும்
பைத்தியங்களே !!!

சாட்சிகளற்ற சந்தர்ப்பங்கள் அமையாத எல்லாம் பைத்திங்களாகி போன
ஒரு பெருங்கூட்டம்

ஒற்றை மனிதனை சுற்றி சுற்றி
அவன் பைத்தியமென  கூச்சலிடுவது நகைமுரண் கொண்ட வேடிக்கைதான் ...

அட பைத்தியக்காரா  ...

என்றவன் உன்னை சொல்லும்
முன் ஒரு பேரன்பையாவது
விதைத்துவிட்டு போ ...

வாழ்வான் அவனெனும் உலகில்
சூழ்ந்திருக்கும் ஏதோவொரு
பைத்தியம் ...

மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் !




காட்டு மரங்களின்
கூந்தல் கிளைகளில்
உணவை தேடும் பறவைகளுக்கு ஒய்யாரமாக கதைகள் சொல்லி கடத்தி போகிறது பூக்களின் மகரந்தம் ...

எங்கோ தொலைவில் அதிரும் பெரும் சர்ச்சைகளின் இரைச்சலை கேட்டு கூச்சலிடும் பறவைகளின் நினைவுகளில் சில அதிர்வலைகள் வந்துவிட்டு போகலாம்

காணாமல் போன ஒரு மரத்தில் பல்வேறு சிலுவைகளை செய்து வைத்துள்ளார்கள்
யாருக்கானது அச் சிலுவைகளென
ஆழ்ந்த யோசித்தலில்
ஆயுளை கடக்கும்
பல முகங்கள் அப்படியே நிரந்தரமாக தங்கிவிடுகிறது இந்த
பிரபஞ்சத்தில் ...

நெருப்பின் ஆதி சிக்கி முக்கி கற்களில்
ஒளிந்து கொள்கிறது அனைத்தும் இரகசியங்களாய்...

வாழ்தல் என்பதே பெருங்கனவாக போய்விட்ட காட்டு மரங்களின் கூக்குரல்களில்
மனிதர்களின் அழிச்சாட்டியங்கள்
இயற்கையின் மீதான போர்கள் என
தொடர்ந்தே போகிறது இரக்கமற்ற இரவுகள் ...

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...