நான் பெத்த மகளே!
காலையில்
பூத்த மலர் கூட
இன்னும்
வாடலியே!
நீ!
வாடிவிட்டாயே என் மகளே!
நான் வளர்த்த
கன்றுக்குட்டி துள்ளிகுதிக்குதடி!
துக்கத்தை நீ தந்து சென்றாயே என் மகளே!
அடி மனசு கலங்குதடி!
அக்கினி பிழம்பாய் எரியுதடி!
விறகு பொறுக்கச் சென்றவளை
விரட்டிப்
பிடித்தான் எமனென்று!
நீ செத்த
சேதி கேட்டு!
பத்து மாசம் சுமந்த
வயிறு பத்தி எரியுதடி!
இன்றோடு பத்து ஆண்டுகளாய்!
கண்ணீரில்
கலங்கியபடி காலம் சென்றதடி!
கண்ணாடி பக்கத்தில் கண்ணே உன்
பிம்பமடி!
நான் பெத்த மகளே மண்ணிற்
கிரையானாயே!
காலையில்
பூத்த மலர் கூட
இன்னும்
வாடலியே!
நீ!
வாடிவிட்டாயே என் மகளே!
நான் வளர்த்த
கன்றுக்குட்டி துள்ளிகுதிக்குதடி!
துக்கத்தை நீ தந்து சென்றாயே என் மகளே!
அடி மனசு கலங்குதடி!
அக்கினி பிழம்பாய் எரியுதடி!
விறகு பொறுக்கச் சென்றவளை
விரட்டிப்
பிடித்தான் எமனென்று!
நீ செத்த
சேதி கேட்டு!
பத்து மாசம் சுமந்த
வயிறு பத்தி எரியுதடி!
இன்றோடு பத்து ஆண்டுகளாய்!
கண்ணீரில்
கலங்கியபடி காலம் சென்றதடி!
கண்ணாடி பக்கத்தில் கண்ணே உன்
பிம்பமடி!
நான் பெத்த மகளே மண்ணிற்
கிரையானாயே!
0 comments:
Post a Comment