Sunday, May 24, 2015

செல்போன் ஏன் வெடித்துச் சிதறுகிறது? தீர்வுகள் என்ன?




தகவல் தொழில்நுட்பத்தின் அதீத
வளர்ச்சியின் காரணமாக இன்றைய
காலத்தில் அனேகர்கள் செல்போன்
பயன்படுத்துபவர்களாக
இருக்கிறார்கள் . செல்போன்
இல்லையெனில் வாழ்க்கையையோ
தொலைந்து விட்டதெனும்
சூழலுக்குக் கேற்றவாரு நம்மை
நாமே வடிவமைத்துக்
கொண்டுள்ளோம் என்றேச்
சொல்லலாம் . செல்போனெனும்
தகவல் தொழில்நுட்ப உதவியினால்
ஒரு காலத்தில் நமக்கு பெரியதாய்
தோன்றிய உலகம் இன்று நமக்கு
சிறியதாய் தெரிகிறது காரணம்
உலக உருண்டை நமது கைகளில்
செல்போனாக உருமாற்றம்பெற்று
நம்மிடையே
புழங்குகிறது.தொழில்நு
ட்பங்களில் எந்த அளவிற்கு நன்மைகள்
இருக்கின்றனவோ அதைவிடவும்
மேலாக தீமைகள் இருப்பதை நாம்
மறுத்துவிட முடியாது காரணம்
செல்போனால் ஏற்படும்
ஆபத்துகளை நாம் தினமும்
வாசித்திக்கொண்டேதான்
இருக்கிறோம். அதில் மிக
முக்கியமானதாக "செல்போன்
வெடித்துச் சிதறல்" எனும் ஆபத்து
இன்றளவும் நம்மை
அச்சுறுத்துகிறது.இந்தியாவை
பொருத்தமட்டில் ஒரு நாளைக்கு
சராசரியாக 15 நபர்கள்
இம்மாதிரியான செல்போன்
வெடிப்பு விபத்தில்
பலியாகிறாகிறார்கள் என்று
ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
இப்படியானவர்கள் செல்போனை
சார்ஜ் செய்யும் போதே
பேசியதற்காக விபத்தில் சிக்கிக்
கொள்கிறார்கள் என்றாலும்
அதுமட்டுமே விபத்தை
ஏற்படுத்துகிறது என்றுச்
சொல்லிவிட முடியாது. சார்ஜர்
போடாமல் நமது கைகளிலே
இருக்கும் போதும் செல்போன்
வெடிக்கும். இந்நிகழ்வு
பெரும்பாலும் ஆன்ட்ராய் மற்றும்
ஆப்பில் போன்ற ஸ்மார்ட் போன்களால்
ஏற்படுத்தப்படுகிறது. உங்கள்
கைகளிலே வைத்திருக்கும்
ஸ்மார்ட் போனானது எப்போது
வேண்டுமானாலும் வெடித்து
உங்களை மரணத்திற்கு இட்டுச்
செல்லுமென்றால் அதுவும்
"வெடிகுண்டு" ரகம்தானே! இதற்கு
தீர்வுதான் என்ன? ஏனிப்படி ஸ்மார்ட்
போன் வெடிக்கிறது என்பதை நாம்
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள
வேண்டியது அவசியமாகப்
படுகிறது. சார்ஜரில் போட்டு
பேசப்படும் செல்போன் வெடித்துச்
சிதறும் ஆகவே அம்முறையை
பயன்படுத்தாதீர்கள் என்றுமட்டுமேச்
சொல்கிறோமேத் தவிர எதன்
உந்துதலால் ஸ்மார்ட் போன்
வெடிக்கிறது என்பதை தெரிந்து
கொள்ளுதலும் அவசியம்.
செல்போன் வெடிப்பிற்கான
பெரும்பகுதியை தீர்மானிப்பது
செல்போன் பேட்டரிகளே! ஒரு
ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்
வெடிப்பிற்கு பேட்டரியின் அதிக
வெப்பநிலையேற்றலே காரணமாக
அமைகின்றது. நீங்கள் பயன்படுத்தும்
ஸ்மார்ட் போனில் முக்கியமாக
பார்க்கப்பட வேண்டியது
பேட்டரியின் சார்ஜ் கொள்ளலவு
எவ்வளவு என்பதேயாகும். ஸ்மார்ட்
போனின் பேட்டரியில் அந்த ஸ்மார்ட்
போனின் கம்பெனிக்கு பிறகு
பேட்டரியின் கொள்ளலளவு
குறிக்கப்பட்டிருக்கும் . அதாவது
வோல்டேஜ் அடிப்படையில் 3.7V
,அல்லது அதற்கும் மேலான 4.5V,5.0V,
என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனை நன்றாக கவனத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும் .
இப்போது உங்களின் செல்போன்
பேட்டரியில் குறிப்பிட்டப்படுள்ள
வோல்டேஜ் அளவுக்கு மட்டுமே
செல்போனில் மின்சாரம் செலுத்த
வேண்டும் என்பது
விளங்கியிருக்கும் . பேட்டரியின்
வோல்டேஜ் அளவை கவனத்தில்
கொண்டு அப்படியே செல்போன்
சார்ஜ்ஜரை எடுத்துப் பாருங்கள்
.செல்போன் ஜார்ஜரில் ஒட்டப்பட்டுள்ள
லேபிளிலோ அல்லது அதனோடு
ஒட்டிய பிளாஸ்ட்டிக்கிலோ சில
குறிப்புகளை தாங்கிய பக்கத்தில்
கவனத்தை திருப்புங்கள். ஜார்ஜரில்
மாடலும், அதற்கடுத்து INPUT உம்
அதற்கடுத்து OUTPUT உம் இடம்
பெற்றிருக்கும் அதில் OUTPUT ஐ
கவனியுங்கள் அதில் 4.75V,
(வோல்டேஜ்) என்றோ அதற்கும்
மேலாக 5.1V,5.75V என்றோ
குறிப்பிடப்பட்டிருக்கும்
இங்கேதான் கவனமாக இருக்க
வேண்டும் உதாரணமாக உங்கள்
செல்போன் பேட்டரியில் 3.7V
என்றிருந்தால் அதற்கும் மேலாக 1.0V
ஐ தாண்டிப் போகாத ஜார்ஜரையே
நீங்கள் பயன்படுத்த வேண்டும்
அதாவது ஜார்ஜரின் OUTPUT ஆனது
4.7V இல் இருக்க வேண்டும் 4.7V
வோல்டேஜூக்கு மேல் நீங்கள்
செல்போனில் ஜார்ஜ் போட்டால்
பேட்டரி சூடாகி அது வெடித்து
விடும் . ஆகவே இவ்விரண்டையும்
கவனத்தில் கொண்டு உங்கள்
செல்போனுக்கு ஜார்ஜ் செய்திடல்
வேண்டும். ஜார்ஜ் செய்கையில்
செல்போனில் பேசுகின்ற போது
அளவுக்கதிமான சிக்னலை
இழுத்துக்கொடுக்க வேண்டியச்
சூழலால் செல்போனானது தன்
வரம்பைமீறி 4.7V ஐத்தாண்டி தனக்கு
ஜார்ஜ் கொடுக்குமாறு
செல்போனின் ஜார்ஜரை
தூண்டுகையில் ஜார்ஜரின்
ட்ரான்பர்மரை வேகமாக
இழுக்கிறது இதன் காரணமாக
ஜார்ஜரின் சூடும் செல்போனின்
சூடும் ஒன்றினைந்து
அளவுக்கதிகமான சூட்டினால்
செல்போனும் வெடித்து
விடுகிறது.இதே முறையைத்தான்
ஜார்ஜரும் வீட்டு மின்சாரமும்
மோதிக் கொள்கின்றன இதனை
கவனிக்க ஜார்ஜரின் INPUTல் எவ்வளவு
வோல்டெஜ் என்பதை
குறிப்பிட்டிருப்பார்கள்.இதனை
கருத்தில் கொண்டு ஏதோவொரு
ஜார்ஜர் நமக்கு கிடைத்து விட்டது
செல்போனுக்கென்று இல்லாமல்
அனைத்தையும் கவனத்தில்
கொள்ளவேண்டும். கூடுமானவரை போலி
ஜார்ஜர்களின் மூலம் செல்போனை
ஜார்ஜ் ஏற்றாமல் கம்பெனி ஜார்ஜ்ர்கள்
மூலம் செல்போனுக்கு ஜார்ஜ்
ஏற்றுங்கள். அடுத்ததாக கையில்
உபயோகித்துக் கொண்டிருக்கும்
செல்போன் வெடிப்பானது
அளவுக்கதிகமாக இன்டர்நெட்டுன்
சேர்த்து செல்போனையும் அதன்
செயல்பாடுகளையும்
இயக்குவதனால் பேட்டரி அதிகச்
சூடேறி வெடித்து விடுகிறது.
இதனை தவிர்க்க கூடுமானவரை
உங்கள் ஸ்மார்ட் போனில் அதிக
மினிமைஸ் செய்வதையும்
தேவையில்லாத அப்ளிகேஷன்களை
தானாக இயக்குவதையும்
தவிருங்கள். தேவைப்படும்போது
மட்டும் ப்ளூடூத் மற்றும்
இன்டர்நெட்டுகளை
பயன்படுத்துங்கள் . முக்கியமாக
செல்போன் இன்டர்நெட்
பயன்படுத்துகின்ற போதே
அழைப்பு வருகின்ற போது
உடனடியாக எடுத்துப் பேசாமல்
ஐந்து வினாடிகள் கால அவகாசம்
கொடுங்கள். ஏனெனில் அந்த ஐந்து
வினாடிகளில் தானாக உங்கள்
இன்டர்நெட் தடைபட்டு அழைப்பு
மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்
இதன்காரணமாக பேட்டரி
சூடாவதை தவிர்க்கலாம். மேலும்
கூடுமானவரை வெருங் கைகளில்
செல்போனை பயன்படுத்தாமல்
காட்டன் கர்ச்சிப்பில் லேசான ஈரப்பதம்
செலுத்தி அதன்மேல் செல்போன்
வைத்து பயன்படுத்தப்
பழகிக்கொள்ளுங்கள் இதனால்
பின்னாலிருக்கும் பேட்டரியின்
வெப்பநிலை குறைந்து
வெடிப்பதை தவிர்க்கலாம். இரண்டு
வாரத்திற்கொருமுறை உங்கள்
செல்போனை ரீசெட்டோ அல்லது
ரீஸ்ட்டார்டோ செய்து விடுங்கள் .
செல்போன் பேட்டரியின்
பின்களையும் செல்போன்
பின்களையும் காட்டன் பட்ஸ் வைத்து
அழுத்தம் கொடுக்காமல்
இருவாரத்திற்கொருமுறை
துடைத்து விடுங்கள். இதன் மூலம்
செல்போன் வெடித்துச் சிதறி நம்
உயிரை காவு
வாங்குவதிலிருந்து நாம்
தப்பித்துக் கொள்ளலாம். எதையும்
பாதுகாப்பு அனுமுறைகளோடு
கையாள்வதன் மூலம் நம்மை
ஆபத்திலிருந்து எப்போதுமே
விடுபெற்றுக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...