ஒன்று கூடினார்கள் அவர்களோர்
அமைப்பாக
தீரன் சின்னமலையையும்
ராமசாமி படையாச்சியையும்
துணைக்கழைத்துக்கொண்டு,,,
கொண்டாடினார்கள்
வீரப்பனையும்
பிரபாகரனையும்
அவர்களுக்கே உரித்தான தலைவர்களென்று,,,
மனுவின் கட்டளைப்படி
சேரிகளை அடித்து
நொறுக்கி ஊருக்கு மட்டுமே உரிமையென
உள்ளே இருக்கும்
சாதியுணர்வுடன் வீரப்பனுக்கும் பிரபாகரனுக்கும்
எழுப்பினார்கள்
சிலையை
குலதெய்வ வழிபாட்டு
தடங்களில்,,,
கொளுத்தப்பட்ட குடிசைகள்,எரிக்கப்பட்ட தேர்கள்,அழிக்கப்பட்ட
கற்புகள்,வீசப்பட்ட கத்திகள்,அறுக்கப்பட்ட கழுத்துகள் எல்லாவற்றையும்
இருவருக்கும் படையலாக்கி ஊரே
வணங்கியது அந்த
குலதெய்வத்தை
முன்னோர்கள் படைத்தார்களாம்
மூத்திரம் விடக்கூட
பார்ப்பானியனின்
காலில் விழுந்தோர்கள்
வேண்டாமென அதிகாரம் தடுத்து அகற்றினார்கள்
அவ்விரு சிலைகளையும்
கிளர்ந்து எழுந்தார்கள்
குடிசைகளையும்
கோயில்தேரை கொளுத்தியவர்களும்
கூடே இணைந்தார்கள்
கோகுல்ராஜ் கழுத்தை
அறுத்தவர்களும்,,,
ஆயுதங்கள் கைகளில்
ஏந்தி வேடிக்கை பார்க்கும் எல்லைச்சாமிகள்
கற்சிலைகளும் கண்ணை குருடாக்கும்
குலச்சாமிகளும்
கும்மியடிக்கிறதிங்கே
குருதி வாடை காற்றில்
கலந்து கல்லறைகள்
கருப்புக் கரிகளாக,,,
வீரப்பன் பிரபாகரன்
அகற்றப்பட்டார்களாம்
எங்கோ ஒலிக்கிறது
எதிர்ப்பு அலைகள்
அதன் வீச்சம் அறியாமையின்
தோற்றம்
எப்போது தாக்கப்படுவோம்
எல்லைச்சாமிகளின்
துணையோடு
பயத்தில் உறைந்துபோன
பாமரனின் தோற்றம்
வெறும் எலும்புக்கூடுகளாய்
பொறுக்கி எடுக்கிறார்கள்
அதையும்
வீரம் வையகம்
பரவ வேண்டுமாம்
வேட்டிகளில் படிந்திருக்கும் ரத்தக்கறைகள்
அறிந்திருக்கவில்லை
எதற்கு இவர்கள்
அடித்துக் கொ(ல்)ள்கிறார்கள்
என்று
குலச்சாமிகள் கும்மியடிக்கிறார்கள்
அடித்துக் கொ(ல்)ள்ளுங்கள்
அதுதான் தேவை
என்று ,,,
சிந்திக்க வைக்கிறியள்
ReplyDeleteதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
நன்றி!
ReplyDeleteநல்லதொரு கவிதை! இனமானம் காக்கிறேன் என்று கழுத்தையறுத்துக் கொலை செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
ReplyDelete