அமைதியாக
புத்தன்
அமர்ந்திருக்கிறான்
ஆசைகள்
அனைத்தும்
சிலைகளாக
வடித்தாகிவிட்டது
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அல்லாமல்
உலகெங்குமாய்
ஆனாலும்
புத்தனுக்கு
பேச வேண்டும்
போலிருந்தது
என்னை ஏன்
கடவுளாக்கினீர்கள்
என்று
வாய்ப்பூட்டு
புத்தனுக்கும்
வாய்ப்புகளை
சிலைகளுக்கும்
தந்தாகி விட்டது
நிரந்தரமாய்
மௌனம்
புத்தனுக்கு
பொருந்திப் போனதென்று
போலியாய்
பரப்புரையும்
செய்தாகிவிட்டது
இனி
பேசுதல் பற்றி
சிந்தித்தல்
கூட புத்தனுக்கு
பக்தர்களின்
அனுமதி வேண்டி
வரிசையில்
நின்றாக வேண்டுமே,,,
புத்தன்
அமர்ந்திருக்கிறான்
ஆசைகள்
அனைத்தும்
சிலைகளாக
வடித்தாகிவிட்டது
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அல்லாமல்
உலகெங்குமாய்
ஆனாலும்
புத்தனுக்கு
பேச வேண்டும்
போலிருந்தது
என்னை ஏன்
கடவுளாக்கினீர்கள்
என்று
வாய்ப்பூட்டு
புத்தனுக்கும்
வாய்ப்புகளை
சிலைகளுக்கும்
தந்தாகி விட்டது
நிரந்தரமாய்
மௌனம்
புத்தனுக்கு
பொருந்திப் போனதென்று
போலியாய்
பரப்புரையும்
செய்தாகிவிட்டது
இனி
பேசுதல் பற்றி
சிந்தித்தல்
கூட புத்தனுக்கு
பக்தர்களின்
அனுமதி வேண்டி
வரிசையில்
நின்றாக வேண்டுமே,,,
கவிதை அருமை நண்பரே மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
அற்புத வரிகள் நன்று
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete