உரிமை மீட்பும்
நிலமீட்பும்
பெருங்கடலின் பசியும்
உறைந்து போகாது ஒருபொழுதும்...
உனது இருதயம் நின்றுவிட்ட
நொடிகளிலிருந்து
இன்னமும் அழுதுக் கொண்டிருக்கிறது தமிழினம்...
நீ...
சிந்திய செங்குருதிக்கு
விடை சொல்லும்
தனி ஈழமே விரைவில்...
அத்துணை வலிகளும் வழிகாட்டும்
ஈழ விடுதலைக்காக ...
நீ... உணவை மறுத்தாய்...
நாம் பேசிக்கொண்டிருந்தோம்...
நீ... உணர்விழந்தாய்
நாம் உயிர்துடித்தோம்...
என்றேனும் ஒருநாள்
மலரும் தனி ஈழம்...
அன்றேனும் தீரும்
சுதந்திர தாகம்...
பார்த்திபன் இன்னமும்
பசியோடுதான்
இருக்கிறான் என்
தமிழினமே...
(1987 September 26) திலீபனை காந்தியம் கொன்ற நாள்
0 comments:
Post a Comment