நிழல் பிரியும்
நேரத்தில்
எனதுயிர்
பிரிந்து போனதென்று
வெற்றுடம்பு
புலம்புவதை
காதில் கேட்ட
நினைவுகள்
காதலை சுமந்து
வந்ததென
காதலியவள்
காணத் துடிக்க
கண்ணீரோடு
எனதருகே
எங்கும்
மலர்வளையம்
மரணத்திலும்
அனாதையாக
விட்டுச்சென்ற
ஆன்மாவை
உடனழைத்து
அவள்
அணிவித்த
மலர்வளையம்
மட்டும்
தேடலானேன்
கடைசி கால
அடக்கச்
சமாதியில்
அழுதுக்
கொண்டிருந்த
காதலின்
நினைவுகளுக்கு
யாரோ ஒருவனின்
கவிதைகள்
கரங் கொடுக்குமெனும்
நம்பிக்கையில்
எழ முடியாத
உறக்கத்தில்
நானும்
எனது காதலும்
எனது காதலியும்
எனது நிழலும்,,,
நேரத்தில்
எனதுயிர்
பிரிந்து போனதென்று
வெற்றுடம்பு
புலம்புவதை
காதில் கேட்ட
நினைவுகள்
காதலை சுமந்து
வந்ததென
காதலியவள்
காணத் துடிக்க
கண்ணீரோடு
எனதருகே
எங்கும்
மலர்வளையம்
மரணத்திலும்
அனாதையாக
விட்டுச்சென்ற
ஆன்மாவை
உடனழைத்து
அவள்
அணிவித்த
மலர்வளையம்
மட்டும்
தேடலானேன்
கடைசி கால
அடக்கச்
சமாதியில்
அழுதுக்
கொண்டிருந்த
காதலின்
நினைவுகளுக்கு
யாரோ ஒருவனின்
கவிதைகள்
கரங் கொடுக்குமெனும்
நம்பிக்கையில்
எழ முடியாத
உறக்கத்தில்
நானும்
எனது காதலும்
எனது காதலியும்
எனது நிழலும்,,,
0 comments:
Post a Comment