Saturday, February 21, 2015

ஆகட்டும் பார்க்கலாம்

அன்றொருநாள்
நீயெனுக்கு
பரிசளித்த
பார்வையின்
வணப்புகளை
சேகரித்து
வைத்திருக்கிறேன்,,,

உனக்கென
நான்
எனக்கென
நீயென
உள்ளத்து
உணர்வுகளை
காதலெனும்
குவியலாக்கினேன்,,,

குனிந்த தலை
நிமிரவில்லை
ஆகட்டும்
பார்க்கலாமென்று
அவசரமாய்
மறைந்து விட்டாய்,,,

அதுவே
ஆறுதலெனக்கு,,,

அன்று முதல்
உனை சந்திக்கும்
போதெல்லாம்
எனதியத்தை
ரசமாக பருகிய
விழிகளை பார்த்தே
உரையாடலை
தொடங்கினேன்
வேறெதுவும்
தோனவில்லை
எனக்கு,,,

கெண்டை விழியாளே
தித்திக்கும் தீஞ்சுவையே
கற்பனையில் நான்
மிதந்து கலங்கி
நிற்கிறேன்,,,

ஒருநாள்
உன்னைக் கான
ஓடோடி
வந்தபோது
ஊமையாகி
நிற்கிறது
உனது விழிகள்
ஊனமாகி போனது
நம் காதலெனும்
கால்தடங்கள்,,,

காலத்தின்
இச்சூழ்நிலையை
பழிப்பதா? பறிப்பதா?
இதயத்தில்
விழுந்து விட்ட
இக்கேள்விகளுக்கு
இன்றுவரை
விடை
தெரியவில்லை,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...