Tuesday, March 17, 2015

உதடுகள் காமத்தை பேசட்டும்



"உதடுகள்
காமத்தை பேசட்டும்"

சுவற்றில்
ஒட்டுண்ட
பல்லி போல
படுக்கையில்
உன்னோடு
ஒட்டிக் கொள்கிறேன்,,,

என் ஆடைகளை
அவசரபடாமல்
அவிழ்கிறதுன்
கைகள்,,,

ஆடை விலகிய
வெட்கத்தில்
கண்மூடுகிறது
வானம்,,,

கூச்சத்தின்
உடலசைவை
ஊமை விழிகளால் நோட்டமிடுகிறாய்
நீ,,,

உன்
விரல் கோதும்
என் கூந்தலில்
வானம்
உடுத்திய கார்மேக உடைகளின்
கூட்டங்கள்
விளையாடுகிறது,,,

உடைகள்
விளையாடுவதை
சொக்கிய
இன்ப
மயக்கத்துடனே
ஓரக்கண்ணால்
நானும்
ரசித்துவிடுகிறேன்,,,

உச்சந் தலையில்
தொடங்கிய
முத்தம்
மெட்டியொலியில் சங்கமிக்கிறது
மெதுவாக
என் உடலெங்கும் வெதுவெதுப்பாய்
பரவுகிறது
போதவில்லை
என்கிறது
புணர்தல்,,,

செவ்விதழ்களை
கவ்வியதில்
செங்காய்கள்
உடனே
கனிகின்றது
உதட்டில்
அதன் சுவையும்
என் உமிழ்நீரில்
கலந்து முக்கடலில்
சங்கமிக்கிறது
இதுதான்
இச்சையின்
உச்சமா?

எண்ணிப்பார்க்கிறேன்
என் எண்ண
ஓட்டத்தில்
நீ புணருமழகை
படுக்கையில்
கசங்கியிருந்த
மலர்களிடம்
சொல்லிச் சொல்லி
கர்வம் கொண்டேன்
காதலில் காமம்
கசிந்தோட
வேண்டாமா,,,

எத்தனை முறை
எண்ணிக்
கணக்கிட்டாய்
என் கள்வனே
எண்ண
ஓட்டத்தை,,,

உச்ச இன்பம்
அடைதலில்
பெண்ணினம்
எப்போதும்
போதாதென
எத்தனை முறை
கணக்கிட்டாய்
என் கள்வனே,,,

இன்பத் துளிர்விடும்
மலர் பறிக்கும்
உன்னழகில்
வியந்துதான்
போகிறேன்
விந்தையான
வித்தைகளை
எங்கே கற்றாய்
காதுமடல்
முத்தமிடுகையில்
கற்ற வித்தையின் ரகசியத்தையும்
சொல்லிவிடேன்
எனக்கு,,,

கடைசி பாய்ச்சலில் கண்சொக்கி
கிடக்கிறேன்
உடலில் இன்னும் உயிரோட்டம்
உள்ளதெனக்கு,,,

உன் உணர்ச்சி
மழையில்
உள்ளம் நனைய குளிரெடுக்கிறது
எனக்கு
குழந்தையொன்று
இப்போதே
என் கருவில்
உதிர்த்திடக்
கண்டேன்,,,

புணரும் வேகம்
புவியீர்ப்பு
விசையாகிறதே
இப்போது,,,

மூடு பனிகளெல்லாம்
எனை மூடேற்றும் வியர்வைத் துளிகளில்
கலக்கிறது
அவைகளும்
காமத்தீயில்
குளித்திருக்க வேண்டுமென
என் நெஞ்சம்
கணிக்கிறது,,,

கணிப்பில் பிழையில்லை
கண்சொக்கி
கிடக்கிறது
மூடுபனி கூட்டங்கள்,,,

புணர்ந்தது போதுமா?
உச்சு இன்பம்
உனக்குண்டா?
காமத்தில் உனக்குந்தான்
திருப்தியுண்டா?
இன்னும் விளையாடலாமா?

இப்படிப் பல
கேள்விகளடுக்கி
என் காதோரம்
கிசுகிசுக்கிறாய்,,,

இது போதுமெனக்கு
மது போதையில்
ஒருதலை திருப்தி
மட்டுமே
ஓங்கி நின்று
புணரும் பெண்ணை
புரட்டிப் போட்டு
அவள் ஆசை முடியுமுன்னே
தனதிச்சை
முடிந்ததென்று
கட்டிலில்
வாந்தியெடுத்து
கடைசியாய்
குரட்டைவிடும்,,,

பல காதலர்களுக்கு
நடுவே
கட்டழகு குணவழகு
காதலனாகத்
தெரிகிறாய்
நீ,,,

முழுதாய் எனை தந்துவிட்டேன் முழுமதியினை
ஏனழைக்கிறாய்
திரைமூடாதே
திகட்டாத
வேட்கையினை
திரண்டு வந்து பார்க்கட்டும்,,,

திராட்சை
தோட்டங்களில்
வீசும் காற்றோடு
பல காம சூத்திரங்கள்
கலந்துவரும்
ஒவ்வொன்றாய்
தேடிபிடித்து
நாமும் கற்றிடலாம்,,,

காதலை நாமும் கொன்று விடவில்லை
ஆதலால்தான்
காமம்
நமக்கொன்றும்
கசக்கும்
கனியாகிடவில்லை,,,

காமம் பேசாத
உதடுகளின்
ஊமைக் கதவுகளை
திறந்து விட
வேண்டுமென
துடிக்கிறதென்
மனது,,,

காமமில்லா
காதலை
பூட்டிவைத்து
காதலை மட்டுமே
திறக்கும்
பொருந்தாச்சாவி
தேவையில்லை
நமக்கு,,,

நாம் காதலிக்க பிறந்தவர்கள்
நமக்கும்
உணர்ச்சிகளுண்டு
உதடுகள்
காமத்தை பேசட்டும் அப்பேச்சுகள்
காற்றில் கரைந்து
வானமும்
கலவியில்
மூழ்கி திளகட்டும்,,,

உறவுகளால்
வலம் வரும்
உண்மை
காதலர்களுக்கு
மட்டுமே
காட்சியாகும்
காமமிது,,,

உள்ளத்தால்
சேராது
உடல் ஒன்றே
விரும்பும்
ஒவ்வாத காதலுக்கு இக்காம புணர்தல்
என்றுமே
காட்சியாகவும்
தெரியாது
சாட்சியாகவும்
நிற்காது,,,

2 comments:

  1. சூப்பர்... அருமையான கவிதை... காதலின் ஆழமான காமத்தையும்... காமத்தின் ஆழமான காதலையும் அழகாய் எடுத்துரைக்கும் வரிகள்... இதைவிட அருமையாய் இதை யாரும் கவிதையில் கையாளுவது சாத்தியமற்றது... மிக அருமையாய் கொடுத்திருக்கிறீர்கள்...

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...