Friday, March 27, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .3 (கல்வி மற்றும் சுய அறிவின்மை)

ஒரு குடும்பம் எந்தச் சூழலிலும் சிதறாமல்
இருப்பதற்கு அவர்களின் சுயபுத்தியும்
அறிவுத்திறனும் வளர்த்தெடுக்கப்பட
வேண்டும் அதற்கு முதன்மையாக அவர்கள்
கல்வியறிவு பெறுதல் வேண்டும் ஆனால்
அக்கல்வி பெறுவதிலும்
முரண்பாடுகளை வைத்துள்ள நாம்
எப்படி சுயசிந்தனையுடன் நடந்துகொள்ள
முடியும் இதுதான் குடும்பம் இப்படித்தான்
குடும்பம் இருக்க வேண்டுமென்ற
சூழலை கல்வியறிவில்லாமல் அவர்களால்
பிரித்தெடுத்து பகுத்தாய்வு படுத்த
முடியாது இதற்கு ஆதிகாலம் முதல்
அண்மைக்காலம் வரை கல்வியில் உள்ள
ஏற்றத்தாழ்வுகளும் காரணமாக
அமைகின்றது ஒரு சாரருக்கு கல்வி கற்கும்
உரிமையும் மறுசாரருக்கு அதற்கான
உரிமை மறுப்பும்
அன்றிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது கலை இலக்கியம்
தமிழ்க்கலாச்சாரம் பேணிகாத்த ராஜராஜ
சோழகாலத்தில் தான்
தமிழ்க்கல்வி புறந்தள்ளப்பட்டு சமஸ்கிருதம்
வளர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் தான்
குருகுலக்கல்வியில் வருணபேதம்
அதிகமாக அமல்படுத்தப்பட்டதென்றும்
வரலாறு குறிப்பிடுகின்றது இது தமிழ்மொழிச்
சிதைவு என்றும் சொல்லிவிட
முடியாது தமிழுக்கும் முக்கியதும்
கொடுக்கப்பட்டது ஆனால்
சமஸ்கிரதமொழியின்
சார்பினை தமிழ்மொழி என்ற போக்கில்
உறுவாகிய ஓர் காலக்கட்டம்
அவ்வாறு ஆரியர்கள்
தமிழர்களை நம்பவைத்த காலகட்டத்தில்
கல்வி மறுக்கப்படும்
போது வியப்பேதுமில்லை
இதே சூழல் இன்றளவும்
நடைபெறுகின்றது ஆனால்
அது கண்ணுக்கு புலப்படா மறைமுகமாக
நடைமுறைபடுத்தப்படுகிறது ஆக
கல்வியில் புறந்தள்ளிய மக்கள் குடும்ப
உணர்வுகளை எப்படிச் சரியாக பார்க்க
முடியும் ஒருபுறம் கட்டாய கல்விமறுப்பும்
இன்னொரு புறம் வறுமையும்
சேர்ந்து வாழ்வதெப்படி என்ற மன
உலைச்சலில் தான் பெரும்பாலான
குடும்பங்கள் சிதறிக்கொண்டிருக்கிற­
து ஒருவனுக்கு தேவையான
மூன்று வேளை உணவிலேயே அவனுக்கு இருவேளை அல்லது ஒருவேளை உணவுக்கே அவன்
கஷ்ட்டப்படும் வேளையில் குடும்ப
உறுப்பினர்களை வெளியேற்றுவது அல்லது துரத்துவதைத்
தவிற அவனுக்கு வேறுவழித்
தெரியல்லை நம்மால்
முடியாததை அவனே பெற்றுக்கொள்ளட்டும்
என்ற மனநிலையில் கூட இச்சூழல்
அவனை தள்ளப்பட்டிருக்கலாம்
ஆது விலங்கின
யுக்தி என்று சொல்வார்கள் எவ்வாறெனில்
எந்த ஒரு விலங்கினும் தன் இறுதிக்காலம்
வரை தன்னால் பெற்றெடுத்த சேயுடன்
காலம்
கழிப்பதில்லை கருவிலிருந்து வெளிவந்த
சேயானாது தனது உதவிநாடும் வரையில்
தான் தாய் தன்னுடனே வைத்திருக்கும்
பின்பு சிறிது வளர்ந்தவுடன் தனியாக
உணவுதேடிச் சென்றிவிடுமாறு தாய்
துறத்திவிடும் அல்லது விரட்டிவிடும்
அதற்குப் பின்பு தாய் சேய் என்பதற்கான
உறவு விரட்டிவிடப்பட்ட
நாளிலிருந்தே முடிவுக்கு வந்துவிடும்
தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும்
இதே போலத்தான் மனிதச்சமூகமும்
நடைமுறைப்படுத்துறது இதில்
எது நல்லது எது கெட்டதென்று தெரியாமல்
இயற்கையுடன் போரிடத்
துணிவில்லா விலங்கின
அறிவை கல்வி மற்றும் சுய
அறிவின்மையால் மனிதன்
பெற்றுவிடுகிறான்.
அவனுக்கான அந்த
சுயபுத்தியை வளர்த்தெடுக்க
முற்படவேண்டுமானால்
மனிதனை புறந்தள்ளி அவனுக்கான
அடிப்படி உரிமைகளை மறுக்கும்
சமூகத்திலிருந்து அவனை மீட்டெடுக்க
வேண்டும். மனித
ஆசைகளை நிர்ணயிப்பதில்
பெரும்பங்காற்றிவருவது பசியும்
பசிசார்ந்த தீர்வுகளும் தான் அளவான
பசிக்கு அவன் தேடிக்கொள்ளும்
உணவுத்தீர்வானது சரிபட நிலையில்
இல்லாதபோது அவன்
தன்குடும்பத்தையே வெறுக்கும்
சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறான்
என்னதான்
அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திய
போதும் கல்வியும் அத்திட்ட தீர்வுகளும்
அவனிடம் சரியாக
போய்ச்சேரவில்லை என்பது மறுக்க
முடியாத உண்மை தன்னுடைய
தேவைக்கு அதிகமாக அவன்
வைத்திருக்கின்ற போது அவன்
உறவு சார்ந்தவர்கள் தானாக கூடுவதும்
இந்த அடிப்படையிலான
மூலகாரணமாகத்தான் இருக்கும்
"பணம்பெற்றவனுக்கு பாச உறவுக்கள்
தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
என்று வழக்க மொழிகளில் சொல்வார்கள்
அதாவது ஒட்டுண்ணி உயிரினத்திற்கு இணையாக
இதை பயன்படுத்துவார்கள் ஆக
இங்கே உறவுநிலைச்
சிதறல்களுக்கு பணமின்மை வறுமை கல்வியறிவின்மை ஆகிய
காரணிகள்
மேலோங்கி நிற்கிறது (இவை அதிகப்படியாக
கிடைக்கின்ற போதும் ஆபத்தாக
அமைகின்றது) தேவையின்
அளவு பசிக்கான தீர்வு கல்விக்கான
அடிப்படை கட்டமைப்பு ஆகியவை ஒரு சமூகத்திற்கும்
சமூக உறுவக மூலக்கூறான
குடும்பத்திற்கும் நிச்சயம் பரந்த அளவில்
அளிக்கப்பட வேண்டும்
ஒரு குடுபத்தலைவன் தனக்கான
தேவைக்கும் அவன் குடும்பத்திற்கான
தேவைக்கும் இரண்டிற்கும்
சேர்த்து உழைக்கின்றான் இதில்
ஒன்று நிறைவேறாவிட்டாலும்
அல்லது இரண்டுமே நிறைவேறாவிட்டாலும்
அவன் சிந்திக்கும்
சக்தியை இழந்துவிட்டு மிருக
வாழ்வை மேற்கொள்கிறான் இதற்கான
தீர்வுகள் என்னென்ன எவ்வாறு இதைச்
சரிச்செய்வதென்று சிந்திக்கும்
ஆற்றலை அவனுக்கும் அளிக்கும்
முதன்காரணி கல்வியானது அவன்
பெறவில்லை அல்லது பெறப்படுவதற்கான
வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனும்
போது இக்குடும்ப உறவுநிலைச்சிதறல்
என்பது தொடர்ந்து நடைபெற்றே கொண்டிருக்கிறது எந்த
குடும்பமும் சிதறிக்கொண்டிருக்கும்
சூழலை பெற்ற
ஒரு குடும்பத்தை அப்படியே உள்வாங்கி அதையே நடைமுறையில்
நியாயப்படுத்தி செயல்முறைபடுத்தும்
சமூகச்சூழலில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த
மனநிலை ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதித்துவிடுகின்றது இதற்கான
அளவுகோளொ நமக்கு நாமே தீர்மானித்துக்கொள்ள
வேண்டும்.


தொடரும்.....
--

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...