Thursday, March 19, 2015

விழிகளின் வெளிச்சத்தில்

விழிகளின் வெளிச்சத்தில்

பிரியமானவளே
உனக்கொரு
இனிய
எச்சரிக்கை
இம்சையெனவும்
பாவித்துக்கொள்,,,

நடுநிசியில்
என் கனவினில்
உன்னதக்
கதவுகளின்
வெளிச்சத்தில்
உன் விழிகளை
திறந்து காட்டி
என்னிமைகளை
திறக்கும்
முயற்சியில்
மூழ்கிப்போகாதே,,,

உனது
விழிகளின் வெளிச்சத்தில்
விடிந்துவிட்டதென
என் வீட்டில்
உள்ளவர்கள்
எழுந்து விடப்
போகிறார்கள்!

உன் இமைகள் எப்போதும்
மூடியே இருக்கட்டும்
கனவிலும்
உனை விட்டு
விலகிடமாட்டேன்
நான்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...