உதிர்ந்து எழுகிறது
ஒவ்வொரு மலரும்
என்னிதழ் முத்தம்
அவளிடத்தில்,,,
____
முத்தங்கள் மொத்தமாய்
கொட்டிவிட
கானக் குயில்கள்
தேடிப் பிடிக்கிறது
நம் காதலை,,,
____
தமிழ் விளையாடும்
சோலையில்
நம் உயிர் உறவாடுகிறது
வளர்த்த பெருமை
மண்ணுக்கும், மனதையாளும்
மொழிக்கும்,,,
____
தூரல் போடுகிறது
தூரமாய் நிற்காதே
அருகில் வா!
மழையோடும்
மழலை மொழியோடும்
நனைந்தே போகலாம்
நாம் காதலை
சுவாசிக்கப் பிறந்தவர்கள்,,,
_____
நேற்றே
கானல் நீரானேன்
இன்றெனை
அழைக்கிறாயே!
சலனமில்லாத
நம் சந்திப்புகளை
மறந்திருக்குமா
இந்த மேகம்,,,
_____
காதலிக்கத் தெரியவில்லை
எனக்கு
காற்றோடு நான்
கரைந்து போகிறேன்
காயங்கள் மறைவதாயில்லை,,,
_____
இடம் பொருளறிந்து
நம் எல்லைகள்
மீறாது
மீண்டும் பிறப்போம்
காதலின் குழந்தையாய்,,,
_____
வயலின் கடைசி
விளிம்பில்
அவன் தேடுவது
உழைப்பின் பலனை
இறந்த மண்ணுக்கு
மீண்டும் உயிர்தருகிறான்
உழவன் அவனாதலால்,,,
_____
முந்தானை எட்டாமல்
முழங்கையால்
பிடித்திருக்கிற ாள்
புடவையை
என்மீது பார்வையை
தெளித்தபடியே,,,
_____
காந்தியின் சிரிப்புக்குக்கீழ்
இறுக்கமாய் ஒரு
நீதி,,,
_____
பாவம்,அவள்
கற்பித்து விட்டார்கள்
கலியாணம் முடிந்த
கையோடு மறந்துவிடு தாயை என்று,,,
_____
பதவி வேண்டுமெனில்
பகுத்தறிவை அடகு
வைக்கலாம்
ஆசைகள் வெறியாக
அடிமைகள் இங்கே
பரவலாக,,,
_____
கைகளை கோர்த்துக்கொண்டு
கண்களால் பேசுங்கள்
மௌனம் தாமாக கட்டிக்கொண்ட
காதலுக்கான
வரமாகையால்,,,
_____
கற்பனையில்
மிதக்கிறேன்
உண்மையில்
எனை இயக்குவது
நீயென அறியாமல்,,,
புரியாத இன்பம்
பருகுவதும்
பேரானந்தமே,,,
_____
ஊர்க் குருவிகளின்
ஒப்பாரி மழையாக
நாளை
திங்கட்கிழமை,,,
_____
ஆயிரத்தில் ஒருவனாக
இருப்பதை விடவும்
அனைவருக்கும்
தோழனாக இருப்பதே
ஆகச் சிறந்த
மருந்தாகும்
மனதிற்கு,,,
_____
ஒரு தாயின் சபதமே
சேயின் அடுத்த
நகர்வு
மண்மீது மரம் கொண்ட
பற்றுதல் போல,,,
_____
உன் நினைவுகளின்
ஊடே நானும்
கண்விழிக்கிறேன்
வசந்தமாகிறதென்
விடியல்,,,
_____
மனிதம் படைக்கும்
நோக்கத்துடன்
மண்ணை நேசித்துவிடு
இயற்கை நமக்கு
இன்பத் தாலாட்டாகும்,,,
_____
ஐந்தாண்டுத் திட்டத்தில்
அனைவருக்கும்
கல்வி
நிறைவேறாமலேயே
எத்தனை ஐந்தாண்டுகள்,,,
_____
கவிஞர்கள் எழுதினார்கள்
உன்னை
நாணலென்று
தலையாட்டி
விடுகிறாய் நீ!
எதற்கெடுத்தாலும்
சுய அறிவின்றி,,,
_____
இதயத்தின் வேர்களான
ரத்த நாளங்களில்
கொடியாக
படர்கிறாள்
அசைக்க முடியாத
மற்றுமொரு தாயாக
காதலியவள்,,,
_____
நிறைவேறாத
ஒரு காதல்
ஆசையாக
இருவேறு
பாதச்சுவடுகள்
ஆதீத முரண்
அழித்தலே செய்யும்,,,
_____
விவசாயிகள்
கோமாளிகளாக
வியாபாரிகள்
கோடீஸ்வரர்களாக
வரவேற்றார்கள்
வால்மார்ட்டை,,,
_____
வசந்த காலம்
எதுவெனக் கேட்டால்
வாழ்நாளையே
சுட்டிக்காட்டுவ ேன்
அவளும் நானும்
அவ்வளவு நெருக்கமாய்,,,
_____
நீ மண்ணை
நேசிக்க கற்றுக்கொண்டாலே
பாதி மனிதனாகி விடுகிறாய்
மீதி மனிதனுக்கு
நேசித்துவிடு
உன் தாயை,,,
_____
தூக்கம் வருமுன்
நிலவை ஒருமுறை
பார்த்துக்கொள்கிறேன்
பரிதாபமாய்
அனேக சன்னல்கள் மூடப்பட்டிருந்தது,,,
_____
வீட்டில் ஊமையாய்!
கொலுவில் பொம்மையாய்!
சிறையில் கைதியாய்!
கனவினை தொலைத்ததொரு
காட்சிப்பொருளாய்!
அவளொரு பெண்ணாய்!
முடங்கியே இருந்து விட்டாள்
இன்னமும் விழித்தெழாமல்,,,
_____***_____
ஒவ்வொரு மலரும்
என்னிதழ் முத்தம்
அவளிடத்தில்,,,
____
முத்தங்கள் மொத்தமாய்
கொட்டிவிட
கானக் குயில்கள்
தேடிப் பிடிக்கிறது
நம் காதலை,,,
____
தமிழ் விளையாடும்
சோலையில்
நம் உயிர் உறவாடுகிறது
வளர்த்த பெருமை
மண்ணுக்கும், மனதையாளும்
மொழிக்கும்,,,
____
தூரல் போடுகிறது
தூரமாய் நிற்காதே
அருகில் வா!
மழையோடும்
மழலை மொழியோடும்
நனைந்தே போகலாம்
நாம் காதலை
சுவாசிக்கப் பிறந்தவர்கள்,,,
_____
நேற்றே
கானல் நீரானேன்
இன்றெனை
அழைக்கிறாயே!
சலனமில்லாத
நம் சந்திப்புகளை
மறந்திருக்குமா
இந்த மேகம்,,,
_____
காதலிக்கத் தெரியவில்லை
எனக்கு
காற்றோடு நான்
கரைந்து போகிறேன்
காயங்கள் மறைவதாயில்லை,,,
_____
இடம் பொருளறிந்து
நம் எல்லைகள்
மீறாது
மீண்டும் பிறப்போம்
காதலின் குழந்தையாய்,,,
_____
வயலின் கடைசி
விளிம்பில்
அவன் தேடுவது
உழைப்பின் பலனை
இறந்த மண்ணுக்கு
மீண்டும் உயிர்தருகிறான்
உழவன் அவனாதலால்,,,
_____
முந்தானை எட்டாமல்
முழங்கையால்
பிடித்திருக்கிற ாள்
புடவையை
என்மீது பார்வையை
தெளித்தபடியே,,,
_____
காந்தியின் சிரிப்புக்குக்கீழ்
இறுக்கமாய் ஒரு
நீதி,,,
_____
பாவம்,அவள்
கற்பித்து விட்டார்கள்
கலியாணம் முடிந்த
கையோடு மறந்துவிடு தாயை என்று,,,
_____
பதவி வேண்டுமெனில்
பகுத்தறிவை அடகு
வைக்கலாம்
ஆசைகள் வெறியாக
அடிமைகள் இங்கே
பரவலாக,,,
_____
கைகளை கோர்த்துக்கொண்டு
கண்களால் பேசுங்கள்
மௌனம் தாமாக கட்டிக்கொண்ட
காதலுக்கான
வரமாகையால்,,,
_____
கற்பனையில்
மிதக்கிறேன்
உண்மையில்
எனை இயக்குவது
நீயென அறியாமல்,,,
புரியாத இன்பம்
பருகுவதும்
பேரானந்தமே,,,
_____
ஊர்க் குருவிகளின்
ஒப்பாரி மழையாக
நாளை
திங்கட்கிழமை,,,
_____
ஆயிரத்தில் ஒருவனாக
இருப்பதை விடவும்
அனைவருக்கும்
தோழனாக இருப்பதே
ஆகச் சிறந்த
மருந்தாகும்
மனதிற்கு,,,
_____
ஒரு தாயின் சபதமே
சேயின் அடுத்த
நகர்வு
மண்மீது மரம் கொண்ட
பற்றுதல் போல,,,
_____
உன் நினைவுகளின்
ஊடே நானும்
கண்விழிக்கிறேன்
வசந்தமாகிறதென்
விடியல்,,,
_____
மனிதம் படைக்கும்
நோக்கத்துடன்
மண்ணை நேசித்துவிடு
இயற்கை நமக்கு
இன்பத் தாலாட்டாகும்,,,
_____
ஐந்தாண்டுத் திட்டத்தில்
அனைவருக்கும்
கல்வி
நிறைவேறாமலேயே
எத்தனை ஐந்தாண்டுகள்,,,
_____
கவிஞர்கள் எழுதினார்கள்
உன்னை
நாணலென்று
தலையாட்டி
விடுகிறாய் நீ!
எதற்கெடுத்தாலும்
சுய அறிவின்றி,,,
_____
இதயத்தின் வேர்களான
ரத்த நாளங்களில்
கொடியாக
படர்கிறாள்
அசைக்க முடியாத
மற்றுமொரு தாயாக
காதலியவள்,,,
_____
நிறைவேறாத
ஒரு காதல்
ஆசையாக
இருவேறு
பாதச்சுவடுகள்
ஆதீத முரண்
அழித்தலே செய்யும்,,,
_____
விவசாயிகள்
கோமாளிகளாக
வியாபாரிகள்
கோடீஸ்வரர்களாக
வரவேற்றார்கள்
வால்மார்ட்டை,,,
_____
வசந்த காலம்
எதுவெனக் கேட்டால்
வாழ்நாளையே
சுட்டிக்காட்டுவ ேன்
அவளும் நானும்
அவ்வளவு நெருக்கமாய்,,,
_____
நீ மண்ணை
நேசிக்க கற்றுக்கொண்டாலே
பாதி மனிதனாகி விடுகிறாய்
மீதி மனிதனுக்கு
நேசித்துவிடு
உன் தாயை,,,
_____
தூக்கம் வருமுன்
நிலவை ஒருமுறை
பார்த்துக்கொள்கிறேன்
பரிதாபமாய்
அனேக சன்னல்கள் மூடப்பட்டிருந்தது,,,
_____
வீட்டில் ஊமையாய்!
கொலுவில் பொம்மையாய்!
சிறையில் கைதியாய்!
கனவினை தொலைத்ததொரு
காட்சிப்பொருளாய்!
அவளொரு பெண்ணாய்!
முடங்கியே இருந்து விட்டாள்
இன்னமும் விழித்தெழாமல்,,,
_____***_____
பன்முகக் கவிதைகள் . வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தோழர்!
ReplyDelete