Thursday, October 22, 2015

முடிந்தவரை முரண்களை ஒதுக்கி வைப்போம்

பிஜெபி,ஆர்எஸ்எஸ்,சிவசேனா இவை மூன்றையும் ஒன்றோடொன்று வேறுபடுத்தி
பார்ப்பதென்பது முட்டாள் தனம் , மூன்றுமே சாதிய மனுவியத்தின் அங்கமாக
விளங்குகின்றது. இவற்றுக்கிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு
அவர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறது என்றால் அதன் நோக்கம்
ஒன்றேதான்,வெளியில் முரண்பட்டதுபோல் காட்டிக் கொண்டால்தான்
சாதியத்தையும்,சாதியின் மூலக்கூறான மதத்தையும் தக்கவைத்து
வளர்ச்சியையும்,அதிகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது.
அதே வேளையில் தங்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்காத வண்ணம் பார்த்தும்
கொள்கிறது. இதில் நான்காவதாக காங்ரஸையும் இணைத்துக் கொள்ளலாம் . காரணம்
எதையும் மறைமுகமாக ஆதரிப்பதில் காங்ரஸும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது.
இங்கே எந்த முற்போக்கு சித்தாந்தமும் அழிக்க வல்ல சக்தியாக
உறுவாக்கப்படவில்லை என்பதே இந்திய சனநாயத்திற்கு கேள்விக்குறியாக
இருக்கிறது. அதற்கான தடைகளை உடைக்க வேண்டுமெனில் ஒவ்வொரு முற்போக்கு
சிந்தாந்தத்திற்குள்ளும் இருக்கும் முரண்பாடுகளை களையெடுக்க வேண்டும்.
கம்யூனிஸம் பெரியாரியத்தை தூற்றுவது, தமிழ்த்தேசியம் திராவிடத்தை
தூற்றுவது, திராவிடம் மற்ற இரண்டையும் தூற்றுவது, அனைத்துமே
அம்பேத்கரியலை ஒதுக்குவதென நமக்குள்ளேயே இயக்க ரீதியிலான முரண்பாடுகளை
கொண்டிருப்பதன் காரணமாக மட்டுமே ஒவ்வொரு சமூக அவலங்களிலும் இங்கே ஒரு
பிரிவினை ஏற்பட்டு இதற்கு இவர்கள் மட்டுமே போராட வேண்டும் என பொதுபுத்தி
உறுவாகிப்போய், பொதுவான பிரச்சனைகளை ஒரு கட்டுண்ட சிறைக்குள் நாமாகவே
தள்ளிவிடுகின்றோம் . இது சாதிமதவியளார்களுக்குச் சாதகமாகி விடுகிறது.
கொள்கை மற்றும் இயக்க ரீதியிலான கோட்பாடுகளின் மத்தியில் வெவ்வேறான
கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் பொதுவான சமூக அவலங்களை
முன்னெடுக்கையில் ஒன்றாகப் பாடுபடுதலை புரட்சிக்குத் தேவையான வித்தாகும்.
திராவிடத்துக்குள்ளும்,தமிழ்த்தேசியத்துக்குள்ளும்,பொதுவுடமைக்குள்ளும்,மெல்ல
மெல்ல வலதுசாரியம் நுழைவதை கண்கூடாக பார்க்க நேரிடுகிறது. காரணம் இங்கே
இயக்கங்களின் வறையறைகள் ஒரு கட்டுக்குள் இல்லை என்பதே நிதர்சனம். இது
கசப்பாக இருக்கலாம் ஆனால் கசப்பான மருந்துதான் நோய்க்கான மருந்தாகிறது.
இடதுசாரியம் ஓர் ஆரோக்கியமான சூழலை பெறவேண்டுமெனில் முதலில் செய்ய
வேண்டியது போட்டியை உறுவாக்குவது. போட்டி என்பது பொறாமையால் அல்லாமல்
பொறியாக மாறிட வேண்டும். ஒவ்வொரு சமூக அவலங்களுக்குள்ளும் இருக்கும்
அநீதிகளை வெளிக்கொணர முற்போக்கு இடதுசாரியங்களுக்குள்ளே போட்டி இருத்தல்
அவசியமாகிறது. யார் முதலில் சமூக அவலங்களை வெளிக் கொணர்கிறார்களோ அவர்கள்
மற்ற முற்போக்கு இடதுசாரியங்களின் உழைப்பையும்,கஷ்டங்களையும் எடுத்துக்
கூறி நன்றி பாராட்டுதல் வேண்டும். என்னாலான சிந்தனை இதுவாகத்தான்
இருக்கிறது.

2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...