நீயெனக்கு துணைவியானால்
ஏற்பேன்
தலைவிதியானாலும்
காதலின் முதல்
விதியதுவென,,,
______
மீளத் துடிக்கிறேன்
மங்கையவள்
பார்வையிலிருந்து,,,
மனதோடு பேசுவது நீயா?
உன் விழிகளா?
______
யாரோ ஒருவனிடம்
அவள் சிரித்துப் பேசுகின்ற
பொழுதுகளில் ஏற்றுக்கொண்டு
ரசிக்கும் கபடமற்ற
மனதால் மெய்பிக்கப்படுகிறது
அவனின் ஆண்மை,,,
______
இரவில்
தூங்காத கண்களுடனே
நான்
உன்னோடு உலாவரத்
துடிக்கிறேன் நிலவுக்கு
துணையான
விண்மீன்களை போலவே,,,
______
அன்போடு அழைக்கிறேன்
அருகில் வரவேண்டும்
நீயொரு காவியத் தலைவியாக
தலைவனுக்கு காதலியாக,,,
______
நிச்சயம்
என்மன அழுக்கை
காட்டுவதில்லை கண்ணாடி
துடைக்க வேண்டியது
என்மன
அழுக்கையே அன்றி
கண்ணாடியை அல்லவே,,,
______
மேகம் வெளுத்து
மோகம் முளைத்து
முனகலோசை கூட்டி விடுகிறது
காற்று
ஸ்பரிஸத்தின் உச்சத்தில்
அது எல்லை கடக்கிறது
மண்வாசனை,,,
______
ஒரு மகானுக்கு
பணிவிடை செய்வதிலேனும்
இவ்வுலகினை யாசித்திருந்திருப்பேன்
புத்தன் மனைவியின்
புலம்பலின்னும்
அப்படியே,,,
______
உனக்காக
ஆகாயம் தனது எல்லைகளை
அகலப்படுத்துகிறது
அன்பிற்குரியவளே,,,
______
அந்த விதைகளை
முளைக்க வைப்பதே
காய்ந்து போன சருகுகள்தானே
காயங்களே
மனதிற்கு மருந்தாகலாம்
சில நேரங்களில்,,,
______
பிடித்திருக்கிறது உன் மௌனம்
எனை விழுங்கி
தின்பதனால்,,,
______
திருடன் போலிஸ்
கையில் கள்ளச்சாவி
அனாதையாய்
நீதி
______
யாரிடமும் பேசாமலிருக்கிறது
பட்டாம்பூச்சி
உன் தேனொழுகும் குரலால்
கவர்ந்த பின்னாலே,,,
______
மாடிகளில்
காகித கப்பல்
ஏழையின் வீட்டுக்கூரையில்
ஒழுகும் மழைத்துளி,,,
______
"ம்" எனும் உச்சரிப்பில்
ஒராயிரம் கவிதைகள் எழுதிவிடுகிறார்கள்
காதலர்கள்
கைபேசி உரையாடலில்,,,
______
என் தொலைந்துபோன தேசத்தில்
துருபிடித்த கத்திகள்
மட்டும் கூடிச் சிரிக்கிறது
வெறித்தனமான இனவழிப்பால்,,,
இன்னமும் இருளில் என்
ஈழதேசம்,,,
______
உன்னைவிட பிரகாசமானது
என்னவளின் முகமென்றேன்
நிலவிடம்,,,
என் கனவை கடன்
கேட்டு தினமும்
துன்புறுத்தும் ருசிகண்ட
பூனையாக மாறிவிட்ட
நிலவு,,,
______
சிறுகச் சிறுக
உயிரை துறக்கிறேன்
காற்று வெளியில்
நீயொரு கானல்நீராய்,,,
______
வண்டல் மணல்
லாரிகளின் வலுக்கட்டாய
புணர்வு
வலியில் ஆறு,,,
______
எரியாத விளக்குகள்
இருளில் அறிவு
மனப்பாடக் கல்வி,,,
______
கழுதையின் சிரிப்பு
பொதி சுமக்கும்
மெட்ரிகுலேஷன் பிள்ளைகள்
வலிக்கிறது முதுகு,,,
______
இதுதான் நடக்குமென்றால்
தடுக்காதீர்கள் அழட்டும்
பனிக்கட்டி
எரித்த
குழந்தைகளை சுமந்தவாரே,,,
______
உதிர்ந்த இலைகளில்
எண்ணி பார்க்கிறேன்
ரேகைகளை
ஏழையின் உடம்பாகிறது சருகுகள்,,,
______
மழை இரவு
மிதிக்கிறேன் நிலவை
தோண்டிய குழியில்
நான்,,,
______****______
0 comments:
Post a Comment