Sunday, February 21, 2016

பேசும் இதயம் 4

முகம் அவளுடையது
என்றாலும்
பிம்பம் நான்
வரைந்தென்று
காதல்
கர்வம் கொண்டது,,,
__________

நம் நினைவுகளை
திரும்ப ஒப்படைக்க
வேண்டுமாம்
ஒற்றைக் காலில்
நிற்கிறது கனவு,,,
தவம் கலைந்து
விழித்துக்கொள்கிறேன்
காதல் வியர்வையில் நனைந்து,,,
__________

பிறகென்ன பிரிவோம்
நாமிருவரும் நட்டாற்றில்
காதலை தவிக்கவிட்டு,,,
எத்தனை காலம்
ஆகுமோ!
வெந்த புண்கள்
ஆருவதற்கு,,,
__________

பிறந்த குழந்தையின்
அழுகை
பற்றிக்கொள்கிறது
முதல் ஸ்பரிஸத்தை,,,
அழுகையை
சேமிக்காதீர்கள்
அதன் வீச்சம்தான்
உலக நியாயம்,,,
__________

சிரித்துக் கொண்டே
மரணித்துவிட
முயற்சிக்கையில்
கழுமரங்கள்
கேலி செய்கின்றன
வேஷம்
கலைந்து போனதென்று,,,
__________

நான் உடுத்தும்
சேலையில்
எப்படியோ
நுழைந்துவிட்ட
உன்னை
வெளியில் தெரியாமல்
மடித்து சொருகினேன்
அடிவயிற்றில்
அப்போதும்
முத்தமிடுகிறாய்
நீ!
__________

வேலி மறித்த
போதெல்லாம்
வாடி நின்ற
பூக்கள்
வதங்கி காற்றோடு
வேலிதாண்டி
சங்கமித்தது
மரணத்தில்,,,
__________

எதை பற்றியும்
கவலையில்லை
எங்கேயும்
கோமாளியாகிறேன்
எனக்கு முன்னால்
குழந்தையொன்று
எப்படியும்
சிரித்துவிட வேண்டும்
__________

பேரிறைச்சலோடு
நிர்வாண­மாய்
ஊர்சுற்றும் காற்று
தனக்குள் புகுந்தே
இசையாகிறதென
அகந்தையில் பேசிய
புல்லாங்குழலை
தட்டிவிடுகிறேன்
என் உதட்டிலிருந்து,,,
__________

எச்சில் ஈரம்தான்
முத்தமென அறியாமல்
கொடுத்து விடுகிறாய்
தொலைபேசியில்
முத்தங்களை,
மிச்சம் வைத்திரு நாம்
சந்திக்கின்ற வரையில்,,,
__________

எந்த வயலுக்கும்
சொந்தமில்லாத
என் பாதங்களை
வரப்பில்
மேயவிடுகிறேன்
கேலி சிரிப்புகள்
மடை திறக்கின்றன,,,
__________

உன்னைவிட
உன் தோழியிடம்
உனக்குள்ளிருக்கும்
என்னை
தெரிந்துகொண்டேன்,
ஆர்வக்கோளாரல்ல
காதல்கோளாரால்
நான் கள்வன்,,,
__________

ஒரு நீர் குமிழிக்குள்
சேகரித்த
புன்னகையெல்லாம்
வெடித்து விட
அடுத்தமுறை
தன் இதயத்தையே
அதனுள்
செலுத்தி விடுகிறாள்
அந்த குழந்தை
சோப்பு நுரைக்குள்,,,

__________***__________

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...