Wednesday, March 23, 2016

பகத்சிங் நினைவு நாளில் எங்களின் முழக்கமும்,சபதமும்,

இன்று தோழர் பகத்சிங் அவர்களின் நினைவுநாள்
(மார்ச் 23, 1931) ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சிக்கு எதிராகவும் இந்திய
சூழலியல் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் "நான் ஏன் நாத்திகனேன்" எனும்
மிகப்பெரிய பொக்கிஷ நூலை தன் தண்டனை காலத்திலேயே எழுதி, தூக்குமேடையை
முத்தமிட்டு முழங்கிய அந்த "இன்குலாப் ஜிந்தாபாத்" முழக்கத்திற்கு
மத்தியில் முதலாளிய ஏகாதிபத்தியம் மிரண்டடித்து ஓடித்தான்போனது, காலங்கள்
மாறினாலும் காட்சிகள் அப்படியே உயிர்த்திருப்பது இந்தியாவின் சாபக்கேடே
அன்றி வேறில்லை, தோழர் பகத்சிங் வெள்ளை ஆட்சிக்கு எதிராக மட்டும் கலகம்
செய்யவில்லை, ஆண்டாண்டு காலமாக இந்தியத்தில் புரையோடிருக்கின்ற
பார்ப்பானிய சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கலகம் செய்தார்
என்பதில் இருக்கிறது அவரின் உண்மையான தேசபக்தி ஆகவேதான் "பாரத் மாதா கி
ஜெய் " என பார்ப்பானிய ஆர்எஸ்எஸ், பிஜெபி, முழக்கமிடுகின்றபோதெல­்லாம்
தோழர் பகத்சிங்கின் "இன்குலாப் ஜிந்தாபாத்" நேரடியாக மோதி
பார்ப்பானியத்தை ஓடவிடுகிறதென்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய
இந்துத்துவத்தின் பார்ப்பானிய ஆட்சிகால
மனித உரிமை மீறல்களையும், சாதி இந்துக்களின் வெறிச்செயல்களையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம், ரோகித் வெமுலாவை கொலை செய்து தூக்கில்
மாட்டி நாடகமாடிய கும்பல்கள்,கன்னையா குமாரை தேச விரோதியென முத்திரை
குத்தும் கும்பல்கள், அட்லக்கை கொலை செய்த கும்பல்கள் என இந்த சாதி
இந்துக்களான பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்,பிஜெபி கும்பல்களின் வன்முறை மற்றும்
மனிதக்கொலைகள் இரண்டாண்டு ஆட்சி கால லட்சனத்தை வெளிச்சமிடுகிறது.
சமத்துவம்,சகோதரத்துவ­ம் விரும்பும் இந்தியத்தில் இன்று எங்கு காணினும்
சாதிவெறி,மதவெறி,பெண்­ணடிமை,பாட்டாளி விவசாய தொழிலாளிகள் தற்கொலை,கடன்
வாங்கிய தொழிலதிபர்கள் தலைமறைவு,சாதி ஆவணக்
கொலைகள்,தீண்டாமைகள்,­வன்புணர்வு,மனித உரிமை மீறல்,தனியார் மயக் கொள்கை,
கல்வி வியாபாரம், தாராளமயக் கொள்கை, உலகமயமாதல், நில அபகரிப்பு, அணுவுலை
ஆதரவு, இத்யாதி இத்யாதி என நீளும் அன்றை வெள்ளை ஆட்சிக்கு சற்றும்
குறைவில்லாமல் கட்டவிழ்த்து சுதந்திரமாக சுரண்டலை
ஈடுபட்டுக்கொண்டிருக்­கும் இந்தியத்தை ஆளும் பிஜெபி, மற்றும் ஆர்எஸ்எஸ்
பிறகு அவர்களுக்கு ஒத்தூதி உழைக்கும் அரசு அதிகாரிகளான ஆட்சியர்கள்
மற்றும் காவல்துறைகளுக்கு எச்சரிக்கையை பகிரங்கமாக தெரிவித்துக்
கொள்கிறோம் . ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி தூண்டுதலின்
மத்திய அரசு ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோகித்வெமுலா மீது ஒருதலைப்பட்சமான
நடவடிக்கை எடுத்து. கல்வி பயிலும் வாய்ப்பு மற்றும் நீதி நெறிகளுக்கு
மாறாக ரோகித்வெமுலாவிற்கு முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் . இந்துத்துவ
சாதி ஆதிக்க கொடுமைகளால் ரோகித்விமுலா தற்கொலை செய்து கொண்டார்.
ரோகித்வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும்
துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் அப்பா ராவ் மீண்டும் பணிக்கு திரும்பியதற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் எங்கள் பகத்சிங்கின் மாணவர்களை நேற்று (மார்ச்22.2016)
கண்மூடித்தனமாக தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளீர்கள்­. ஒன்றை தெளிவாக
புரிந்துகொள்ளுங்கள் அரசப் பயங்கரவாதிகளே, உங்களின் "பாரத் மாதாகி ஜெய்"
முழக்கத்திற்கு முன்னால் எங்களின் "இன்குலாப் ஜிந்தாபாத்" "ஜெய்பீம்"
முழக்கங்கள் ஒருபோதும் மண்டியிடாது. நாங்கள் மார்க்ஸின் பேரக்குழந்தைகள்,
லெனினின் வளர்புகள், அம்பேத்கரின் பிள்ளைகள், பெரியாரின் பரப்புனர்கள்,
பகத்சிங்கின் மாணவர்கள் என்பதை நீங்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை,
அன்றைய நாள் வரும்போது எங்களின் கைகளில் கல்வி ஆயுதமாகும், உங்களின்
கரங்களில் விலக்கிடப்படும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். தமிழக
ஆளும் திராவிட கட்சிகளே இப்போதும் சொல்ல கடமைபட்டிருக்கிறோம் நினைவில்
கொள்ளுங்கள் "பெரியாருக்கு பின்னால் திராவிடம் திருடப்பட்டு விட்டது"
என்பதை உரக்கச் சொல்வோம் உரிமைகளை மீட்டெடுப்போம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!
ஜெய்பீம்!
திராவிடத்தால் எழுந்தோம்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...