Monday, March 21, 2016

என் அன்புக் காதலனே!

உன் விழிகளில்
தடம் பதித்து
மார்புக்குள்
முகம் புதைத்து
தேடுகிறேன் காதலை

சொட்டச் சொட்ட
தேனொழுகும்
இதழ்களை மெல்லக்
கவ்வி பிடித்து
காதோரத்து
முடிகளையும்
கோதிவிட்டு
நெருங்க நெருங்க
தேடுகிறேன் காமத்தை

மீசை முடியில்
ஓராயிரம்
வார்த்தைகளை
சுமந்தவன் நீ!

வெட்டிய குறுந்தாடியில்
குடிகொள்கிறதென்
அமைதியற்ற
திருவிளையாடல்

முகத்தை திருப்பாதே
முடிந்தவரை
என்னை பார்த்து ரசி!

எதையும் மறைத்து
விடாத எனது
நிர்வாணத்தில்
எப்போதும் தூய்மை
படிந்திருப்பதாய்
அடிக்கடி
வர்ணித்தெழுதுவாய்
வாய் ஜாலங்களால்

பிடிக்காது எனதுடலை
தூய்மையென
நீயுரைக்கையில்
இருந்தும் பிடிக்கும்
தீவிரமாய்
காமம் தேடாமல்
இச்சைக்கு மட்டுமே
பிச்சையெடுக்கும்
வேட்கைகள் எதுவுமற்று

என் கண்களையே
அதிகம் பார்த்து
பேசிகிறாய் நீ!

அதனாலேயே
பிடிக்கும்
பிடிக்கும்
மிகபிடிக்கும் உன்னை
போதுமா!

இந்த உயிரானது
உனக்காகவே
சமைக்கப்பட்டிருக்கிற­து,
உரிமையோடு
விருந்துண்ணு
என் அன்புக் காதலனே!
எனக்காக பிறந்தவனே!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...