எதுவும் மறந்து போகலாம்
எனில்
நினைவில் தங்கியிருந்த ஓராயிரம் கனவுகளை எங்கே
பதுக்கிவைப்பது ...
எதுவும் வேண்டாம் ...
என் ஏக்கங்களை துளைத்து
வெளிவரும் கடைசி
மணித்துளிகளில் கூட
உன் முகமே பார்த்திட வேண்டுவது காதல் ...
நானாகி நின்றதுவும்
நீயாகி பொழிந்திடவும்
இந்த பேரன்பில்
என் மடியில் சாய்ந்து
உறங்கிட மழலையாகிறாய் ...
வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையிலான அத்துணை காலங்களையும்
காதலால் , பேரன்பால்
பெருஞ் சுமையென நினைக்காது கடத்திடும்
நம் நேசக் கனவுகளுக்கு
அப்பால்
ஒரு சாத்தானாகிறேன் நான்...
கடவுளாகிறாய் நீ ...
யார் சொன்னது ?
கடவுளும் சாத்தானும்
காதலிப்பதில்லை யென்று ...
0 comments:
Post a Comment