Friday, February 20, 2015

காட்சிப்பிழை

மாடத்தில்
புதுவிளக்கு
இன்று
பௌர்ணமி
____

உழைத்து
வியர்த்த
உடம்புகள்
தோளில்
துயரம்
சுமக்கிறது
துண்டுகள்
____

அவனியை
வலம் வரும்
ஆண்டவன்
கையில்
தோலில்லா
எலும்புக் கூடுகள்
___

வழிந்தோடிய
வாடைக்காற்று
மௌனமொன்றே சாட்சிக்கூண்டில்
___

கற்பில்லா
ஆண்மகன்
கடைச்சரக்கில்
குவிந்து விட்டது
விலைமகளிர்
இல்லங்கள்
___

எந்த ஓநாய்கள்
வீசியதோ
மானிட உடலெங்கும் சாதியெனும்
பாவத்தழும்பு
____

நெஞ்சை விட்டு
நீங்காத நெடி
சூடுபிடிக்கும்
தமிழீழ
வியாபாரம்

_____

2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...