Friday, February 20, 2015

தூளியில் குழந்தை

பால் சுரக்காத
முலைகள்
இருந்தும்
அப்போதைக்கு
ஆருதலாய்
மடியில்
குழந்தை

____

அழுகை
நின்றிடவில்லை
பேராளும்
விடுவதாய்
இல்லை
தூளியில்
குழந்தை

___

வயிற்றில்
ஈரத்துணி
வற்றித்தான்
போனது
குழந்தையின்
சிரிப்பு

____

ஜோடி பொருத்தம் பார்க்கவில்லை
வறுமையில்
மெலிந்த
காலுக்கு
மெழுகானது
காலணிகள்

____

பாலுக்கு அழும்
குழந்தை
இருந்தையும்
வந்தவன்
வாயில் திணித்தான்
விபச்சாரி பட்டத்தை

___

தலையணை
மெத்தை வீடு
எதுவும்
வேண்டாம்
தெருவோர
தூளியில்
குழந்தை

____

பசிக்கிறது
குழந்தைக்கு
கோயிலில்
பாலபிஷேகம்
வாயிலில் நின்ற
-தாய்

_____

பாட
புத்தகமெல்லாம்
தராசில்
தொங்கியது
தொடர்ந்து
வந்த
வறுமையால்

____

கணவன்
குடிகாரன்
கழுத்தில்
தாலியெனும்
-தூக்குக்கயிறு
____

மேடையில் சீர்திருத்த முழக்கம்
சிரித்தே கடந்து போனாள் ஒருவள்
முழக்கம் முனகியது கட்டிலில்

___

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...