Tuesday, March 24, 2015

ஹைக்கூ "ஒரே குடையில்"

துரத்துகிறேன்
தூங்க மறுக்கிறது
காதல்
விடியற்காலை
கனவுகள்
___

விழித்தெழுந்த
கண்
வாசலில் கோலம்
உணர்ந்த
நிமிடங்கள்
உறங்காத
பெண்ணினம்
____

இரவு
நட்சத்திரங்கள்
அப்படியே
அம்மாவின்
மடியில்
____

எழுந்திரு
வயல்வெளி
அழைக்கிறது
அடுத்தநாள்
விலைநிலமாக
____

புலம்புதை
நிறுத்தவில்லை
நிலா
அவளை மட்டுமே காதலிப்பதால்
____

கண்கசங்கி
பனிதுளிகள்
இன்னும்
பூமிறங்காமல்
கதிரவன்
___

குடை
மிளகாய்
இனிக்கிறது
வாழ்ந்துதான்
பாருங்களேன்
___

மகிழ்சியில்
மரத்து
வேர்கள்
ஒரே குடையில்
நனைகிறது
பூக்களும்
இலைகளும்
____

கானாதொன்றை
கண்டது
சாலைகள்
எங்கும்
மரணத்தில்
தூவிய
மலர்கள்

____***_____

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...