Monday, March 23, 2015

அவளின் சொல் வீச்சம்பு

சொல் வீச்சம்புகளை
என்மீது வீசிவிடுகிறாள்
அவள்
என்ன செய்வதென்றே
தெரியவில்லை
எனக்கு

எங்கேயோ எழுதிவைத்த
ஏகாந்த வசனங்களை
என்னுள்ளே புதைக்கிறேன்

எங்கே கோபமிருக்கிறதோ
அங்கேதான்
வாழுமாம் அதீத அன்பு

மனதை தேற்றுவதில்
மயக்கமென்ன
வரவாப்போகிறது

சொல்லம்பை திசைதிருப்ப தென்றதலைத்தான்
துணைக்கழைக்கவா

சொல்லடி எனை சூரியனைபோல
சுட்டவளே

அடுத்த வாசகம்
படித்த பொழுதுகளில்
விடிவதே நரக
வேதனையடி
எனக்கு

யாதொருவரிடமும்
அளவோடு அன்பை
செலுத்தி விலகுதலில்
விடியலை தேடிடலாமாம்
திருத்தம் செய்துவிட
திண்டாடிக் கொண்டிருக்கிறேன்

உன்மீதான அதீத
அன்பினில்
அளவையை எப்படி
என்னால்
செலுத்திவிட முடியும்

சிறகொடிந்த பறவைகள்
சிங்காரித்து அழகுபார்த்திடவே
அனைத்துள்ளமும்
துடிக்கிறதே அன்றி

அதன் சிறகினில்
ஓரலகை எடுத்து
காயமுற்றதில்
இதமாய் தடவிடத்தானோ
யாருமில்லை
இங்கே

உன்னைக்கண்டேன்
உலகின் ஒளியாய்
கூண்டில் அடைக்கவில்லை
நீ

சிறகுகளை சேகரிக்கிறாய் அம்மியில்
மருந்தையும் நீயே அரைத்தெடுத்து
அழகான சிறகின் வலியையும்
தூரெறிகிறாய்
துடிக்கிறதென்
மனது

கருணையினை
நீ சுமந்து
காய்ச்சிய கம்பியினால்
எனை மட்டும்
சூடிடுவது ஏனோ

இவன் துடிக்கமழகை
தூரத்திலிருந்து
நீயும் ரசிக்கிறாயோ

வலிக்கத்தான் செய்கிறது
இருந்தும் வலிதாங்குவேன்
சொல்லம்பு வீசி
பெற்சலங்கையிடும்
உந்தன் பாதங்களில்
தொடங்குகிறது
என் காதலோசை

உள்ளத்தில் ஒருதீங்குமில்லா
உனையா
உதறித்
தள்ளிவிடுவேன்
ஒருபோதும்
நினைத்துவிடாதே
துளிகோபமேதும்
என்னிடமில்லை

என்னில் கலந்தவளே
நீ வீசிய சொல்லம்பை
மட்டுமே சுமக்கும்
இதயம் என்னில் இருந்தால் உயிரோடு
வீழ்ந்து விட்டிருப்பேன்

இல்லை உயிரை விடுவதாக இல்லை
தெரிந்து கொள்ளடி
என்னவளே
சொல்லம்பை மட்டுமே
சூரியனில் சுட்டெரித்து
உனக்காவே இன்னும்
உயிரோடிருக்கிறேன்
நான்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...