Sunday, April 19, 2015

அன்பை சிறைபிடிக்க வேண்டும்

எண்ணம் கரைதொடும்
முன்பே
காற்றிசையோடு
கரைந்தோடும் சின்னக்குருவிகளை
போல

சிறகு விரித்து சிங்காரமாய் அலங்காரம் கொண்டு அலைந்து
சுற்றித்திரிய ஆசை

மேனிச் சுடுகிறதே
மேகமது கீழிறங்க
மாட்டாயோ

கிண்ணத்தில்
ஆசைகள் வழிய
அருந்தும் ரட்சகன்
அன்பை விட்டுச்சென்றால் அளவோடு
இன்பத்தில் மூழ்கியிருக்கலாமே

ஒன்றுக்கும் உதவாத கோபத்தால்
உடல்செத்து உள்ளம்
நொந்து கொதிநீரில் குளிப்பதை விடவும்

கோபம் தவிர்த்து கோபுரத்தில் அன்பை உயர்த்திப் பாராய்
தோழனே என
அழகாய் சொன்ன
இயற்கை ரட்சகனோடு இன்ப உலா வந்தேன்

இவ்வுலகம் முழுதும்
சுவையினிக்க சூழ்ந்திருந்த இருளை அன்பாலே விரட்டியடித்தேன்

தாகம் தீரவில்லை
இன்னமும் தேடுகிறது எங்கேனும்
அன்பிருந்தால்
உடனே சொல்லுங்கள் எனதிதயத்தில்
சிறைபிடிக்க
வேண்டும்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...