Monday, April 20, 2015

நாம் தமிழர் கட்சி அறிவிப்பும் கொஞ்சம் வரவேற்பும்

சில தினங்களாக இணையத்திலும்,பொதுவில­ும் தந்தை பெரியாரை மிகவும்
கீழ்த்தரமாக அவமானப்படுத்தும் செயலில் நாம் தமிழர் கட்சியின்
பொருப்பாளர்களும்,தொண­்டர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.­ இந்நிகழ்வுகள்
ஒன்றும் புதிதானதல்ல ஏற்கனவே திராவிடத்தை எதிர்க்கிறோம் பேர்வழிகளென்று
பெரியாரை வடுகனென்றும்,வந்தேறி­யென்றும்,கன்னடவெறியன­ென்றும்,சாதிநாயக்கரெ­ன்றும்
தொடர்ந்து பரப்புரை செய்தவர்களிடம் வேறெதுவும் எதிர்பார்க்கமுடியாது­தான்
இருந்தாலும் தற்போது வெளியாகிருக்கின்ற தலைமை அறிக்கையானது இதிலிருந்து
சற்று மாறுபட்டிருக்கிறது. இதனால் நாம்தமிழர் கட்சியின் செயல்பாடுகளில்
சிறிதளவே வரவெற்கத்தக்கதாக அமைகிறது. காரணம் இன்னும் அவர்கள் பார்ப்பன
பிடியிலிருந்து வெளியேறவில்லை. அவர்களின் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தே
இருக்கும்.
வெளியான அறிக்கை இதுதான்:

ஒரு முக்கிய அறிவிப்பு.
--------------------------------------------------------------
தலைமை அலுவலகம்,
நாம் தமிழர் கட்சி. 19-04-2015
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
சீரிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்ச்சமூகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு,சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை
தகர்ப்பு,போன்ற பல்வேறு தளங்களில் தந்தை பெரியார் ஆற்றியுள்ள
பங்களிப்பினை என்றும் மிகவும் நன்றியுடன் நினைவு கூர்கின்ற நாம் தமிழர்
கட்சி, அவரை தனது பெருமைமிக்க வழிகாட்டிகளில் ஒருவராக வைத்து
போற்றுகிறது...
சமீப காலமாக இணைய வெளிகளில் பெரியார் தொடர்பான
கண்டிக்கத்தக்க,அருவருக்கத்தக்க, அவதூறு மிக்க பதிவுகள் உலவி வருவதை நாம்
கவனிக்கிறோம். மேற்கண்ட பதிவுகளில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரின்
பங்களிப்பினையும் நாம் கண்காணித்து வருகிறோம். இந்துத்துவா-காவி அபாயம்
சூழ்ந்துள்ள இக்காலத்தில் தந்தை பெரியாரை இழிவுப்படுத்துகிற எச்செயலும்
இந்துத்துவா-காவி கும்பலுக்கு வலு சேர்க்கிற செயல்களாகவே அமைந்துவிடும்
என்பது உறுதி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்
தமிழ்த்தேசிய இன விடுதலைப்பாதையில் மாபெரும் வழிகாட்டியாக தந்தை பெரியார்
விளங்குகிறார் என்று நேற்று நடந்த அண்ணல் அம்பேத்கார் வீரவணக்க
பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களிலும் புகழாரம்
சூட்டி வருகிறார். கட்சியின் பொது கருத்தியல் இவ்வாறு இருக்க, தந்தை
பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிடும் எவரும் நாம் தமிழர்
கட்சிக்கு தேவை இல்லை எனவும், அவர்கள் கட்சியில் இருந்து விலகிக்
கொள்ளலாம் எனவும்,இந்த அறிவிப்பினையும்மீறி தந்தை பெரியார் குறித்த
அவதூறு செய்திகளை வெளியிடும்,பரப்பும், கீழமை வார்த்தைகளால்
விமர்சிக்கும் எவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கிட நாம் தமிழர்
இணையத்தள பாசறை பரிந்துரைக்கும்எனவும் இதன் மூலம் கண்டிப்பாக
அறிவிக்கப்படுகிறது.
கட்சியின் கட்டுப்பாட்டிற்கு, கட்சியின் பொதுநோக்க கருத்தியலுக்கு
விரோதமாக செயல்படுவோரை கண்காணிக்க இணையத்தள பாசறையின் நிர்வாகிகள்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள், அனைத்துப்பாசறை
பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள், ஆதரவாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த
அறிவிப்பு பொருந்தும்.
-மணி செந்தில்,சே.பாக்கியராசன்
இணையத்தளப்பாசறைதலைமைப் பொறுப்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி.

குறிப்பு : இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ள -மணி செந்தில்,சே.பாக்கியர­ாசன்
இணையத்தளப்பாசறைதலைமை­ப் பொறுப்பாளர்களிடம் பல வருடங்களாக
முகபுத்தகத்தில் விவாவதம் செய்திருக்கிறேன் இன்று வரையில் தோழர்
மணிசெந்தில்(வழக்குறை­ஞர்) மட்டுமே என்னுடன் நட்பில் நீடித்திருந்து
விவாத உண்மைகளை ஏற்று அரசியல் புரிகின்றார் .தோழர் பாக்யராசன் சே அவர்கள்
விவாதக் கேள்விகளுக்கும் அதற்கான பதிலுரைகளுக்கும் தக்கதான அரசியல்
முன்னெடுப்பில் பின்தங்கி கடந்த 2012ல் என்னை தடைசெய்துவிட்டுச் சென்றவர்
என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...