Friday, April 10, 2015

"என்ஜன்னல்"

அவளின் மௌனம்
எப்போது
உடையுமென
என்ஜன்னல்
கேட்கிறது,,,

காற்றோடு
நீயாடும்
கதகளியை
நிறுத்திவிட்டு,,,

என்னோடு
நீகலந்து
காதல் நதியில்
நீந்தப்பழகு,,,

காத்திருப்புதான்
காதலுக்கு
அழகென
அறிந்த பின்னிரவு
மலர்சூடும்
வேளையில்,,,

உடையும்
என்னவளின்
மௌனத்தோடு
எதிர்வீட்டு
ஜன்னலுமென்றேன்,,,

சிலிர்த்தெழுந்தே
சிரித்து
விட்டது
-என்ஜன்னல்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...