Wednesday, April 01, 2015

வழியில் தடங்கல் பூனை

மிகச் சாதாரணமாய்
கடக்க முடிவதில்லை
பூனையை

ஏதோவொன்று
தடுக்கிறதே நமது
பயணத்தை

பூனை குறுக்கே போனால்
போகும் பயணம்
விளங்காதாமே
தடுப்பது யாரென்று
தெரிந்தும் போனது

எதன்மீதோ
மனமோடி
பற்றிக்கொள்ள

பாவம் பூனை
என்ன செய்யும்

பெருந்திரளாய்
வானெழும்
மூடநம்பிக்கையில்
மூழ்கியவனை
மூழ்கடித்தே
வேடிக்கை காட்டுவது
வாடிக்கையாகி
போனது இங்கே

கால்தடுக்கி விழுந்தவனை
காப்பாற்றுவதில்
என்ன சாங்கியம்
வேண்டிகிடக்கு

நீயும் பசிவயிற்றுக்கு
பயணப்படுகிறாய்
பூனையும்
பசிவயிற்றுக்கு
பயணப்படுகிறது

பசியென்று வந்தாலே
பூனையும் நீயும்
ஒன்றல்லவா

எதையும் எளிதாய்
கடந்து விடும்
நீயேன் பூனையை
கண்டால்
புறமுதுகிடுகிறாய்

பயப்படாதே
பகுத்தறிவால்
பக்குவபடு

பூனையில்
சாங்கியம்
விதைத்தவனே
இங்கே
செழிப்பாக
இருக்கையில்

செருப்பில் கூட
சாங்கியம் பார்த்து
செறுக்கடைகிறாயே

சேற்றுப்புழுதியில்
நீயுமோர்
புழுவாய் நெளிகிறாயே

நில் லென்று
உனை தடுத்தவனை
உதைப்பதில்
இங்கே நியாயம்

புனிதமென
பூசியவற்றில்
புரட்டுகள்தான்
உள்ளதென
அறிவுக்கண்ணை
திறந்து பார்

ஆறறிவு ஐந்தறிவை
பார்த்து
அச்சப்படுவது
அவசியமற்றதென
அறிவுக்கண்
அப்போது
அழகாய் விளக்கும்

இனியும் பூனையில்
சாங்கியம் கண்டால்
பால்கூட மிஞ்சாது
பசிவயிற்றுக்கு

போலி புரட்டுகளை
மண்ணில் புதைப்போம்,
அதை கற்பித்தவனை
கல்லறையில்
அடைப்போம்,
எப்போதும் நாம்
ஆறறிவால்
உலகை
உழுதிடுவோம்
வா! மனிதா வா!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...