Tuesday, October 27, 2015

சமூக வலைதளங்களில் "காதல் கவிதைகள்" சாத்தியமா சமத்துவம்?

சமூகத்தின் மிகப்பெரும் சாபமாக மனிதர்களிடத்தில் சவால்விடும் ஒரு
மூர்க்கச் சீர்கேடாக இருக்கும் சாதிமத வெறியின் பின்புலத்தை
ஆராய்ந்தோமானால் அவை அனைத்தும் ரத்தம் குடிக்கும் அட்டைப் புழுக்களாகவே
இருந்து வந்திருக்கிறது. எங்கும் சாதி எதிலும் சாதி, எல்லாவற்றிலும்
தலமையாகிறது மதம். சாதிமத அமைப்புகளால் சீரழிந்து கிடப்பது
சமூகப்பொதுவெளி மட்டுமல்ல சமூக வலைதளங்களும் தங்கள் பங்கிற்கு சாதிமத
வெறியினை ஊட்டியே வந்திருக்கின்றன.
பேஸ்புக்,ட்விட்டர்,ஜ­ீபிளஸ்,பிளாக்கர்,வேர்ட்பிரஸ்,என நீண்டுக்கொண்டே
போகும் சமூக வலைதள பட்டியல்களில் அனேக மக்கள் தங்களை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.­ அவரவர் மனதில் தோன்றியவற்றை பதிவுகளாக ஏற்றி
காரசாரமான விவாதங்களும் இங்கே நிகழ்த்தப்படுகிறது. அதில்
உண்மையும்,பொய்யும் கலந்தே இருக்கும். அப்படியான பதிவுகளில் சில நல்லப்
பதிவுகள் கவனிப்பாரற்று கிடப்பது தவிர்க்க முடியாதொன்றாக இருக்கிறது.
அந்த கவனிப்பாரற்று கிடந்த முகபுத்தக நண்பரின் பதிவு என்னை மிகநீண்ட
நேரமாக சிந்திக்கவைத்து அதன் உண்மை நிலையை அறியும் ஆவலைத் தூண்டியது.
ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்தமையால் அதன்மையத்தில் எழுத்துக்களை கொண்டு
கருத்துக்களை பதிவு செய்யவது எனக்கு எளிமையாக இருந்தாலும், இன்னமும்
சிந்திக்க வைக்கிறது அந்த முகபுத்தக நண்பர் இட்ட பதிவு,

"சமூக வலைதளங்களில் இடும் "காதல் கவிதைகள்" மூலம்
உண்மையில் சாதிமதற்ற சமூகத்து உறவை தக்க வைத்துக்கொள்கிறதா?"

என்று கேட்டிருந்தார் அந்த நண்பர், மிக நீண்ட சிந்தனையில் என்னை
ஆட்படுத்திவிட்டது அவரின் கேள்வி. இது சாத்தியமா? எனும் விவாதம் யாரும்
முன்வைக்கவில்லை நானும் அதில் அடங்குவேன் வெறும் லைக்கை மட்டும்
இட்டுவிட்டு,,, பதிவை அப்படியே உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் .
அதன் ஆழத்தன்மையை அவ்வளவு எளிதாக கடந்துபோக முடியாது.காரணம் அதில்
கவிதையும் காதலும் கலந்திருக்கிறது.
உண்மையில் காதல் கவிதைகளை எழுதுவதன் மூலம் சமூக வலைதளங்களில் நிலவும்
சாதிமத உணர்வை அகற்ற முடியுமா? என்றால் அதற்கான பதில் இல்லை என்பேன் நான்
எனது அனுபவத்தில்,,, காரணம் பொதுதளத்தில் எந்தளவிற்கு சாதிமத வெறியுணர்வு
மண்டியிருக்கிறதோ அதைவிட மேலாக சமூக வலைதளங்களை அது ஆக்கிரமித்துள்ளது
என்றே எடுத்துக்கொள்ளலாம். முகபுத்தகத்தை பொருத்தவரையில் பல்வேறு சாதிய
வகுப்புப் பிரிவுகளுக்கும் , ஒவ்வொரு மதப்பிரிவுகளுக்கும் விருப்பப்
பக்கங்கள் (like page) உண்டு, குழுமங்கள் உண்டு. ஒரு நபர் புதிதாக
முகபுத்தக கணக்கொன்றை தொடங்குகிறார் என்றால் அவர் முதலில் தேடுவது
தான்சார்ந்த சாதிமத பற்றாளர்களையும்,அதன்­ குழுமங்களையும்,அதன் விருப்பப்
பக்கங்களையும் மட்டுந்தான் அதைத்தாண்டி அவர் வேறெதையும் தேடுவதல்லை
என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது. இது பெரும்பான்மையாக இருக்கும்
மனநிலை உணர்வுப் போக்காகும். சமூகத்தையும்,சமூக அவலங்களை பற்றி
பதிவிடுதல்,விவாதித்தல்,முற்போக்குச் சிந்தனை விதைத்தல், என
பங்கெடுப்போர் இங்கு "சிலர்" என்கிற எண்ணிக்கையில் மட்டுமே
இருக்கிறார்கள். காதல் கவிதைகள் இங்கே கவனிப்பாரற்ற நிலையில் தான்
இன்னமும் வலம்வந்துக்கொண்டிருக­்கிறது. அதையும் மீறி ஒருசில காதல்
கவிதைகள் புகழடைகிறது என்றால் அந்தக் கவிதைகளின் சொந்தக்காரர் சாதிமத
எதிர்ப்பாளராக தம்மை முன்னிருத்தாத நபராகத்தான் இருப்பார். ஒருவேளை தம்மை
முற்போக்காளராக முன்னிருத்தும் முகநூல் பயணாளர் காதல் கவிதைகள்
எழுதும்போது அதில் பிற்போக்கு எதிர்ப்பு வினையை செயல்படுத்த முடியாத
கையறு நிலையிலேயே இருப்பார் இது முகநூலில் காலங்காலமாக இருக்கும்
வறையறையாகவே தொடர்கிறது. நான் ஹைக்கூ எனும் ஜென்கவிதைகளால்
ஈர்க்கப்பட்டவன். அந்த நண்பரின் ஹைக்கூ கவிதைகளால் ஈர்க்கப்பட்டு அவரின்
எழுத்துக்களை நேசிக்கத் தொடங்கினேன். ஒருநாளைக்கு குறைந்தது ஐந்து
ஹைக்கூக்களையாவது எழுவார் அதில் இரண்டு ஹைக்கூ கவிதைகளையாவது
முற்போக்குச் சிந்தனையை விதைப்பார். ஆனால் மற்ற கவிதைகள் பெறும் வரவேற்பை
விட குறிப்பிட்ட அந்த முற்போக்கு கருத்து கொண்ட ஹைக்கூ கவிதைகள் அதிகம்
பகிராமலும் அதிகம் விருப்பமளிக்காமல் மிகச்சாதாரணமாய் கடந்துபோகும் . இது
ஹைக்கூ கவிஞன் கி சார்லஸ் அவர்களின் பதிவுகளில் மட்டுமல்ல அனேக
கவிஞர்களின் காதல் கவிதைகளிலும் இதேநிலைதான். இங்கே கவிஞர்களை கூட சாதிமத
வர்க்க முரண்பாட்டோடு பார்க்கப்படுவதுதான் வேதனையான ஒன்று.
கடந்த 2014 அன்று அருமை நண்பர் ஹைக்கூ கவிஞன் கி சார்லஸ் அவர்கள் உலகை
விட்டு பிறிந்தபோது அவரோடு சேர்ந்து காதல் கவிதைகளும் விடைபெற்றுக்கொண்டு
விட்டதை எண்ணி இன்றளவும் என்னால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இது
சமூகத்தின் பிரதிபிம்பமாய் இன்றளவும் தொடர்ந்தே இருக்கிறது. ஆனாலும்
பின்வாங்குதல் மனிதர்க்கு அழகில்லைதானே! எழுதிக்கொண்டேதான்
இருக்கிறார்கள் கவிஞர்கள் காதல் கவிதைகளை ! என்றேனும் ஒருநாள்
கவனிக்கப்பட்டு சாதிமத பேதங்கள் கண்ணாடிபோல் உடையும் . அன்றைய நாள்
வருகின்றபோது காதல் கவிதைகள் சாதிமத பேதங்களை சவக்குழியில் தள்ளி
சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்தும் எனும் நம்பிக்கையோடு,,, தொடர்ந்து
எழுதப்படும் சமூக வலைதளங்களில் காதல் கவிதைகள்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...