Wednesday, November 25, 2015

அம்மா உத்தரவின் பேரில் மழை? ஆட்சியர்களும் அடிமைகளாக,,,

தமிழக ஆளும் அதிமுக ஜெயா அரசின் சர்வாதிகார அடிமைத்தன ஆட்சிக்கு
அடையாளமாய் விளங்குவது அக்கட்சியின் அமைச்சர்களும், சட்டமன்ற
உறுப்பினர்களும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளான நாங்களும்தான் என்கிறது அரசு
உயர் மாவட்ட ஆட்சியாளர்கள் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்கள். அரசு
அதிகாரிகள் தாங்கள் என்ன பேசினாலும் ஜெயாவின் புகழுக்கும் அவரின் ஆதிக்க
மனோபாவத்திற்கும் களங்கம் விளைவிக்காத வண்ணம் மிகத் தெளிவாக?
கனங்கச்சிதமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்துகிறார­்கள். ஏதேனும் புது
வார்த்தைகளா? என்று எதிர்பார்க்கத் தேவையில்லை, எப்பொழுதும் போல
அக்கட்சியின் தொண்டர்கள் வரையில் உபயோகப்படுத்தும் அதே "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என்கிற தங்கத்தாரகையின் தாரக மந்திரம்தான் அது,,,
ஆனால் அத்தாரக மந்திரத்தை உபயோகித்த மாவட்ட ஆட்சியர் தற்போது பெரும்
சிக்கலில் மாட்டி அவதிப்படுகிறார். படித்த படிப்பை மறந்து, பெற்ற அறிவை
துறந்து, வகிக்கும் பதவியை பறக்கவிட்டு, எதற்கெடுத்தாலும் "அம்மாவின்
உத்தரவின் பேரில்" என உபயோகித்தால் அவஸ்தைகள் தானாகவே தேடிவருமென்பதற்கு
நல்லதொரு உதாரணமாய் விளங்கிறார் அந்த! மாவட்ட ஆட்சியர். மக்களுக்கு
முழுநேர பணிசெய்யும் உன்னதப் பதவியையும் ஆளும் அதிமுக ஜெ அரசிற்கு அடகு
வைத்துவிட்ட இவ்வகை அரசு அதிகாரிகளின் அடிமை வாழ்க்கையை விட, ஏழைகள் ஒன்று இழிவாக வாழ்ந்துவிட வில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்­
மாவட்ட ஆட்சியர் சம்பத். இயற்கையின் விளைவாக தமிழகத்தில் ஏற்பட்ட
வடகிழக்கு பருவநிலையின் காரணமாக பொழிந்த மழையின் தாக்கம் குறித்து சேலம்
மாவட்ட நிலவரங்களை குறிப்பிடுகையில் அம்மாவட்ட ஆட்சியர் சம்பத் IAS,
அவர்கள் சமீபத்தில் பத்திரிகை யாளர்களுக்கு, பேட்டி அளித்தபோது,
''முதல்வர் அம்மா உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் மழை அதிக அளவு
பெய்துள்ளது" என்றார். இதனை ஆராய்ந்தால் இயற்கைக்கு உத்தரவு போடும்?
அளவிற்கு மாநிலத்தை ஆளும் ஜெயாவிற்கு ஏகாதிபத்திய அதிகாரம்
இருந்திருக்கிறது என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. மழையே ! உடனே
தமிழகம் இறங்கி வா! என இயற்கைக்கே உத்தரவு போட்ட ஜெயா அவர்கள்
மழைவெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானபோத­ு "நான் மூன்று
நாட்களுக்குத்தான் உத்தரவு போட்டேன் இந்த மழை ஒரே நாளில் பெய்துவிட்டது
ஆகவே மழையின் மீது அவதூறு வழக்கு போடப்போகிறேன் என்று இதுவரையில் சட்ட
நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆட்சியர் சம்பத் இக்கேள்வியை
புறக்கணித்தாலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி
என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம் கலெக்டருக்கு, மனு
அனுப்பியிருக்கிறார்.­ அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன்.
"முதல்வர் உத்தரவின் படி" மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள்.­­ அதற்கான
முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என,கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு,
கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் என்று அவர் படித்த
படிப்பும்,பெற்ற அறிவும், வகிக்கும் பதிவியும் எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கி­றது. முற்றாக அதிமுக ஜெவின் அடிமைகளாகிப் போன
தமிழகத்தையும்,அதன் அமைச்சர்களையும், அதன் அரசு உயர் ஆட்சியாளர்களையும்
இனி காப்பாற்றவோ, கரைசேர்க்கவோ முடியாது என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...