Thursday, November 19, 2015

இணைய உலகிற்கு என் நன்றிகள்!

இவ்வாண்டில் 300 பதிவுகளை எழுதிக் கடந்துவிட்டேன் . எதுவும்
சாத்தியமாகிறது என்னுள் பிறந்து வளர்ந்த நம்பிக்கையினால்,,, இணைய
வெளியில் அதுவும் வலைப்பூவுலகில் முதலில் என்னை எழுதவைத்தது பேஸ்புக்காக
இருக்கிறது. ட்விட்டர் எனக்கு அவ்வளவாக பரிட்சயமில்லை, உண்மையில்
பேஸ்புக்கால் எந்த நன்மையுமில்லை, அதுவொரு வெட்டியாக பொழுது போக்குமிடம்,
அதனால் எவ்வித சிந்தனைகளும் வளர்த்தெடுக்க முடியாதென வாதம் புரிவோர்களைக்
கண்டால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எனக்கு இவ்வளவு செய்திருக்கும்
பேஸ்புக்கை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. "உன்
நண்பன் யாரென்றுச் சொல் நீயாரென்று சொல்கிறேன்" என்பதை மறந்திருப்பார்களோ
இவ்விவாதக்காரர்கள். நான் பேஸ்புக்கை, ஜி ப்ளசை எந்தளவுக்கு
காதலிக்கிறேனோ அதைவிட மேலாக வலைப்பூவினை காதலிக்கத் தொடங்கி விட்டேன்.
அவ்வளவு பிடித்திருக்கிறது இந்த பரந்து விரிந்த வலைப்பூவுலகம்.
பேஸ்புக்கில் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதை உணர்ந்தாலே
நீயும் நல்ல நண்பனாகவும்,சிந்தனைய­ுள்ளவனாகவும் நிச்சயமாக இருப்பாய்.
எனது நட்பு வட்டம் அவ்வளவு அலாதியானது. ஊடகவியலாளர்கள்,சமூக
ஆர்வலர்கள்,எழுத்தாளர­்கள்,முற்போக்குச்
சிந்தனையாளர்கள்,கவிஞ­ர்கள்,இலக்கியவாதிகள்­,அரசியலாளர்கள், பெண்
ஆளுமைகள், பெண்ணிய சிந்தனையாளர்கள்,
பதிப்பகத்தார்கள்,சட்­டத்துறையினர்,மருத்து­வர்கள்,பொறியாளர்கள்,­மார்ஸியர்கள்,பெரியார­ியர்கள்,அம்பேத்கரியர­்கள்,இயக்கத்தார்கள்,­என
பட்டியல் மிக நீண்டுக்கொண்டே போகும். இதைவைத்து நான் பேஸ்புக் பிரபலம் என
நினைக்காதீர்கள். நான் சாதாரணன், மிஞ்சிப்போனால் ஒருபதிவுக்கு மூன்று
லைக் விழும் அம்மூன்றுபேரும் எனது பழைய பள்ளி நண்பர்கள்.
மேற்குறிப்பிட்ட சிந்தனையார்கள் எழுதிய, பரிந்துரைத்த, புத்தகங்களை
வாசிக்கத் தொடங்கியதன் விளைவுதான் இந்த "அரும்பிதழ்" வலைப்பூ.அதுமட்டுமல்லாது "நீங்க எழுதுங்க, உங்களால முடியும்" நிச்சயமா நீங்க எழுதுவீங்க! என்று, என்னை எழுத வைத்த பேஸ்புக் தோழர் திருமதி Rajeswary Medzinskii அவர்களை நன்றியோடும் அன்போடும் பார்க்கிறேன்.
பேஸ்புக் திறந்து அவரவர் பதிவுகளை கவனிப்பேன், எதை
எழுதுகிறார்கள்,எதுபற­்றி எழுதிகிறார்கள்,யாரை பின்பற்றுகிறார்கள் ,
என்றெல்லாம் கவனத்தோடு பார்த்தும் தெரிந்தும் கொண்டேன். நட்புப்
பட்டியலில் இருக்கும் மூவாயிரத்து சொச்சம் நண்பர்களை குறிப்பிட்டு
எழுதமுடியாது, ஆகவே யார் என் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்க
நீங்கள் எழுத்துலகில்,வாசிப்ப­ுலகில், நுழைந்தாலே போதுமானதாகும். இதில்
இன்னொரு வேடிக்கை என்னவெனில் நான் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று அனேக
நண்பர்களுக்குத் தெரியாது. அவ்வளவா பேஸ்கில் பகிர்ந்து கொண்டதில்லை,
காரணம் இருக்கிறது உபயோகிப்பது செல்போன் என்பதால்,,,
வலைப்பதிவுலம் பொருத்தவரையில் 2014 ஆகஸ்ட்டில் எழுதத் தொடங்கினாலும்
முழுமையாக எழுதத் தொடங்கியதும் அறிமுக தோற்றத்தை அளித்ததும் நடப்பாண்டான
2015 சனவரி 5 , அந்நாளில்தான் தமிழ் மணம் என் தளத்தை இணைத்துக்கொண்டதாக
ஈமெயில் அனுப்பியது. அதற்கு முன்பு தமிழ்மணம் பேஸ்புக்கால்
அறியப்பட்டாலும் அந்த சனவரி 5ம் நாளிலிருந்து பல புதிய
நண்பர்களும்,மூத்தோர்­களும்,அனுபவஸ்த்தர்கள­ும் எனக்கு அறிமுகமானார்கள்.
மூத்தோர்கள்
புலவர் இராமாநுசம்,பழனி கந்தசாமி, தருமி, இரா எட்வின், ஆகியவர்களையும்,
என்னை வழிநடத்தியவர்களான
கில்லர்ஜி, திண்டுக்கல் தனபாலன் , சி.பி.செந்தில்குமார்­(சென்னியார்),
யாழ்பாவாணன் , புதுவை ராம்ஜி , S.Raman, தி.தமிழ் இளங்கோ , S.P. Senthil
Kumar, முகுந்த் அம்மா, வலிப்போக்கன் , தேன்மதுரத்தமிழ் கிரேஸ்,
நாகேந்திர பாரதி, Ramani S , Geetha M, Thulasidharan, 'தளிர்' சுரேஷ் ,
Mythily kasthuri rengan, Mubeen Sadhika, ஊமைக்கனவுகள். செங்கதிரோன்,
தனி மரம், சுரேகா, பசி பரமசிவம் ஆகியோர்களையும் நன்றியுடன் இத்தருணத்தை
எண்ணிப்பார்க்கிறேன்.­ இதில் (வினவு, மு.வி.நந்தினி, கனி ஓவியா, சத்தீஷ்
செல்லதுறை, வே மதிமாறன் பேஸ்புக் நட்பு வட்டார நண்பர்களையும்)
இவர்களனைவரும் என்னை எழுத வைத்தவர்கள்,வாசிக்க வைத்தவர்கள், அனைவரையும்
ஒருசேர எனக்கு அறிமுகப்படுத்திய தமிழ் மணத்திற்கு முக்கிய நன்றியினை
தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் ஒரு தகவலைத் தெரிவிக்க
விரும்புகிறேன், கணினி,மடிக்கணினி இருந்தால் மட்டுமே வலைப்பூவில்
பதிவெழுத முடியும் என்கிற தவறான கருத்தினை அனேகரும் கொண்டுள்ளனர் .
அக்கருத்தை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுகிறேன். கையில் தேனை
வைத்துக்கொண்டு வாய்க்கு சர்க்கரை இனிக்கவில்லை என்கிறார்கள்
இவ்வகையினர். வெறும் ஆண்ட்ராய்ட், சிம்பெய்ன் என இரண்டு கைபேசிகளை
மட்டுமே வைத்து இந்த 300 பதிவுகளை ஓராண்டில் எழுதியிருக்கிறேன். ஒரு
பொருளின் நுணுக்கங்களை நன்கறிந்து அதன் தேவைப் பயன்பாட்டினை அப்படியே
உள்வாங்கிக் கொண்டோமானால் கைபேசியால் உலகை அளந்து விடலாம். எதையும் மிகச்
சாதாரணமாக எடைபோடாதீர்கள். எல்லாவற்றிலும் அதற்கான சேவைகள்
கொடுக்கப்பட்டே இருக்கின்றன. அதனை சரியான முறையில் கையாண்டு நமக்குச்
சாதமாக்கிக்கொள்ளலாம்­. உங்கள் எண்ணம் உங்கள் கையிலேதான் இருக்கிறது
கைபேசி வடிவத்தில், ஆகவே வலைப்பூவுலகில் எழுதவும் , வாசிக்கவும் முன்வர
வேண்டி அரைகூவல் விடுக்கிறேன். ஆனந்தப் பெருவெள்ளத்தில் வரும் ஆனந்தக்
கண்ணீரை கொஞ்சம் மாடலாக மாற்றிவிட்டார்களாம் ஆகையால நானு "அழுவுலயே!!!
கண்ணு வேர்க்குது!!!"

4 comments:



  1. பகிர்விற்கு நன்றியும் 300 தொட்டதற்கு வாழ்த்துக்களும்.

    கோ

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...