Friday, November 20, 2015

அன்பெனும் ஆகாசப் பறவைகள்

அடுத்த நிமிடமே
அழத்துடிக்கும்
மனங்களுக்காக
ஏதோ ஓரிடத்தில்
மடைகளைத் திறந்தே
வைத்திருக்கிறது
அன்பெனும் நேசம்

தாவிக்குதித்து
பெருங்கோபம் தவிர்த்து
அமைதியாய்
ஆனந்தமாய்
தேன் சுரக்கும்
பூக்களின்
நறுமணங்களாய்
நேசமிங்கே
யார் கண்ணிலும்
படாமல்
ஓர் அழுகையின்
கண்ணீரைத் துடைக்கும்
கைக்குட்டையாகிறது

யாருக்காக அழுகிறது
இந்த மனம்
ஆராய்ச்சியின் முடிவில்
இலக்கணங்கள்
உடைகின்றன
இமைகளின் துடிப்புகளை
அன்பெனும் ஆழ்கடல்
அள்ளி அணைக்கிறது

சிந்தப்படும் கண்ணீரில்
அடுத்தவர் படும்
வேதனைகளை அளவாக
படிக்கிறது இந்த
அன்பெனும் நேசம்

இவன்,இவள்,
இவர்கள்,இதற்குத்தான்
கண்ணீர் சிந்துகிறார்கள்
எதற்கெனும்
கேள்விகளுடைந்து
மனிதாபிமானமாக
அன்பின் பிறப்பிடமாக
மனிதம் போற்றுவதாக
எங்கும் நிறையும்
கண்ணீரின் கரிசனங்கள்

சனங்களை திட்டாதீர்கள்
சன்னல்களை
மூடாதீர்கள்
கண்ணீர்கள் நேசத்தின்
கால்களை தொட்டுத்
தழுவுகிறதே அன்றி
வாரிவிடுவதற்காக
அல்ல

ஒரு கணம்
அந்த ஒரு கணம்
அடுத்தவருக்காக
அழுகின்ற மனங்களின்
அழுக்குகளை
துடைக்கிறது என்
நேசத்து அன்பெனும்
ஆகாசப் பறவைகள்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...