Tuesday, November 24, 2015

தலித் பெண் (கர்ப்பிணி) மீது தாக்குதல், பார்ப்பானியத்தின் கோவில் நுழைவுத் தடைகள் உடைபடுமா?

ஒருங்கிணைந்த சமூகத்தின் ஒற்றுமை பிரதிபிம்பம் என்பது கூடிவாழ்தலும்,
கூட்டு முயற்சிக்கு ஒத்துழைத்தலுமேயாகும்­ . அதுவே சமூகச் சீரமைப்பிற்கான
வழியாக இருக்கிறது. ஆனால் இந்தியத்தில் அவ்வாறான கூடிவாழ்தலுக்கும்,
கூட்டுமுயற்சிக்கும் சாத்தியக்கூறுகள் அறவே இல்லை என்பது நடப்பு நிகழ்கால
சான்றாக விளங்குகிறது.
எத்தனையோ யுகங்கள் கடந்தபின்னரும் தொட்டால் தீட்டு, தொழுதால் தீட்டு,
என்று தலித்திய சிறுபான்மை மக்கள் மீது இந்துத்துவ பார்பானியம்
தொடுக்கும் அடிமைமுறை சங்கிலித் தொடராவாகவே நீண்டுக் கொண்டிருக்கையில்
எங்கிருந்து வந்துவிடும் இங்கே சமத்துவம். தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு
, ஒரு மூலையில் ஒதுக்கப்பட்ட தலித்துகளின் வாழ்வியல் துயரங்களை
விளக்கினால் நிச்சயமாக பார்ப்பானியம் நிர்வாணமாய் நடுத்தெருவில்
நிற்கும். அந்த அளவிற்கு தலித்துகள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைகள் அளவு
கடந்து ஓர் எல்லையில்லாப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதற்கும்
ஓர் அளவுத் தீர்மானத்தை முன்வைக்கும் பல்வேறு விதமான முற்போக்குகாளர்கள்
தலித்துகள் மீதான தீண்டாமைகளுக்கு எவ்வித அளவு வைக்கப்படவேண்டுமென்றே­
தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கிறார்கள். எங்கும் தீண்டாமை , எதிலும்
தீண்டாமை என்றால் அவர்களால் என்ன செய்துவிட முடியும். குறைந்தபட்சம்
தீண்டாமையை மிகக் கடுமையாக எதிர்த்த புரட்சியாளர்களின் கருத்துக்களையும்
அவர்கள்தம் எழுத்துக்களையும் வெகுசன மக்களிடையே எடுத்துச் செல்ல கடுமையாக
உழைத்தாலும் காலத்தின் கொடுமைகள் தலித்தின விரோதப்போக்கினை
ஆதிக்கர்களிடமிருந்து­ மீட்டெடுக்கவே முடியவில்லை, இந்தியத்தில் தலித்தின
மக்கள் மீதான தீண்டாமை 3000 வகைகளைக் கொண்டுள்ளது இவைகள் வெளிப்படையாக
அறிந்த தீண்டாமைகள் மட்டுமே,,
இதில் நவீனத் தீண்டாமைகள் இடம்பெறவில்லை, இத்தீண்டாமை வகைகளில் "கோவில்
நுழைவுத் தடை" பரவலாக்கப்பட்டிருக்கிறது . "கோவில் நுழைவுத் தடை" எனும்
தீண்டாமைக்கு நேரடியாகவே பாதிக்கப்பட்டும் அதை எதிர்த்து புரட்சிப்
பிழம்பாய் வெகுண்டெழுந்து வெற்றி கண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்பதை
இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும் , மகாராஷ்டிர மண்ணில் அம்பேத்கரும்
தென்னிந்திய தமிழ்த் திராவிட மண்ணில் வைக்கம் போராட்ட பெரியாரும் கோவில்
நுழைவு போராட்டத்தில் அளப்பறிய தன் கடமைகளை செய்தவர்களாக
இருந்திருக்கிறார்கள்­, இருந்தும் தலித்துகள் மீதான காழ்ப்புணர்சியின்
காரணமாக ஆதிக்க இந்துத்துவர்கள் கோவில்களில் அனுமதிப்பதில்லை, தொடர்ந்து
பின்பற்றப்படும் இத்தீண்டாமைக்கு எதிரான குரல்கள் தலித்துகளைப் போலவே
நசுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட
வேண்டியதாயிருக்கிறது­. "தன்னை விடவும் தன் இனத்தை சேர்ந்த ஒரு தலித்தை
விடவும் ஒரு சாதி இந்துவை உயர்வாக மதிக்க தலித் ஒருவருக்கு
கற்றுத்தரபட்டிருக்கி­றது என்கிறார் -அம்பேத்கர் , அதன்படியே தானொரு
ஆதிக்கச்சாதியாளன் ஆகவே தன்னுடைய அடிமைத்தனத்திற்கெல்ல­ாம் நீ அடிபணிய
வேண்டும், அப்படி இல்லையெனில் நீ மண்ணில் மரணத்தைத் தழுவ நேரிடும் என்பதே
ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியத்தின் மிரட்டலாக இருக்கிறது.
அம்மிரட்டலுக்கு பயந்த தலித்தினம் ஒருவிதத்தில் மீண்டெழுந்தாலும் அவர்களை
அடக்கியாளுவதில் கொஞ்சமும் சளைத்துபோகவில்லை ஆதிக்க இந்துத்துவம்.
அதன்படியே தலித்துகள் கோவிலுக்குள் நுழைவதை தடைசெய்வது காலங்காலமாக
இந்தியத்தில் எழுதப்படாத சட்டமாகவே தொடர்ந்து பின்பற்றப்படுகிறது, சென்ற
மாதம் கோவிலுக்குள் நுழைய முற்பட்ட ஓர் தலித் முதியவரை அடித்து அதே
இடத்தில் எரித்து கொன்றிருக்கும் ஆதிக்க இந்துத்துவ பார்ப்பானியம் அதனைத்
தொடர்ந்து,,, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (22-11-2015) உத்தரகாண்ட்
மாநிலம் டேராடூன் மாவட்டம் கபேலா கிராமத்தில் குகர்ஷி மகராஜ் கோவிலில்
நுழைய முற்பட்டதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணையும்
(கர்ப்பிணி) அவரது கணவன், மாமனார் ஆகியோரை அங்கிருக்கும் ஆதிக்கச்
சாதிவெறி இந்துத்துவர்கள் மூவரையும் தடுத்ததுடன் அல்லாமல் சம்மந்தப்பட்ட
பெண் கர்ப்பிணி என்றும் பாராமல் மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள­்.
அதன் பின்னர் கட்டப்
பஞ்சாயத்தின் மூலம் மூன்று பேருக்கும் தலா ரூ.501 அபராதமும்
விதித்திருக்கிறார்கள­். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தை போல் இந்துக்களின்
எழுதப்படாத தலித் விரோத சட்டத்தின் படி குகர்ஷி மகராஜ் கோவிலுக்குள்
நுழையவோ வெளியில் நின்று வணங்கவோ தலித் பிரிவினருக்கு அனுமதி மறுத்து
அக்கிராமத்து இந்து ஆதிக்கர்கள் தடை விதித்திருக்கிறார்கள­். அத்தடையினை
எதிர்த்து வெகுண்டெழுந்த கர்ப்பிணி பெண்ணையும் அவரது கணவர் மற்றும்
மாமனரையும் தண்டித்திருக்கிறது ஆதிக்கச் சாதியம், தகவலறிந்த காவல்துறை
கண்துடைப்புக்காக மூன்றுபேரை மட்டும் கைது செய்திருக்கிறது. ஆதிக்கம்
அதன் அடிமைபடுத்தும் வெறித்தனத்திலிருந்து­ இன்றளவும் தம்மை
மாற்றிக்கொள்ளவில்லை என்பதை இங்கே உணர்த்தப்படுகிறது. மேலும் ஒரு
தகவலுக்காக புதுடெல்லியில் இயங்கிவரும் தேசிய பொருளாதார பயன்பாட்டு
ஆராய்ச்சிக் கழகம் ( National Council of Applied Economic Research -
NCAER ) என்னும் தன்னார்வ அமைப்பு சார்பில், நடத்தப்பட்ட நாடு தழுவிய
சர்வேயில் "நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர்" எனும்
அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கையில் உண்மையில் ஆதிக்க சாதிவெறியைக்
கண்டு அச்சப்படவே முடிகிறது.
அம்பேத்கர் அன்று சொன்ன "இந்துக்கள் தலித்துகளை மிருகங்களை விடக் கேவலமாக
நடத்துகிறார்கள்" என்பதை இன்றளவும் கண்கூடாக பார்க்கமுடிகிறதெனில்­ எங்கே
பிறந்து விடும் இங்கே சமத்துவம்? மீண்டும் இங்கே உரக்கச் சொல்லப்படுவது
ஒன்றே "தலித்தின விடுதலை இல்லாமல் இந்தியத்தில் சமத்துவத்திற்கு
வழியில்லை"

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...