Saturday, November 21, 2015

பருப்பு விலையில் பணம் கண்ட கார்ப்பரேட்டுகள்,,,

பருப்பு விலைநிர்ணயம் மற்றும்
பருப்பை இருப்பு வைத்துக்
கொள்வதற்காக கார்ப்பரேட்
கம்பெனிகளுக்கு அரசாங்கம் திடீரென
விதிமுறைகளை தளர்த்தியது போன்ற
விபரங்கள் வெளியாகியுள்ள
நிலையில், மிகப் பெரும் பருப்பு ஊழல்
நடந்திருக்கிறது என்ற
குற்றச்சாட்டினை "அகில இந்திய
விவசாயிகள் சங்கம்"
எழுப்பியிருக்கிறது. பருப்பு வகைகளை
விவசாயிகளிடமிருந்து பெரும்
நிறுவனங்கள் நேரடியாக கொள்முதல்
செய்து கொள்ள அனுமதித்ததை
தொடர்ந்து, பருப்பு 1 கிலோ வெறும் 40
ரூபாய் மட்டுமே விவசாயிக்கு
கொடுத்த கார்ப்பரேட் கம்பெனிகள்,
அதை வெளிச் சந்தையில் ரூ 180
க்கென மொத்தம் 220 ரூபாய்க்குவிற்று
பல்லாயிரம் கோடி கொள்ளையடித்தன,
இதற்கு மத்திய அரசு உறுதுணையாக
நின்றதென, பருப்புஊழலை
விளக்குகிறது விவசாயிகள் சங்கம்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்
நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 17
அன்று தில்லியில் அதன் தலைவர்
அம்ராராம் தலைமையில்
நடைபெற்றது. பொதுச் செயலாளர்
ஹன்னன்முல்லா உள்ளிட்ட
தலைவர்கள் பங்கேற்றனர். நாடு
முழுவதும் உள்ள விவசாய நிலைமை
குறித்து இக்கூட்டம் விரிவாக ஆய்வு
செய்தது. தமிழகம், ஆந்திரப்பிரதேசம்
ஆகிய மாநிலங்களின் கடலோர
மாவட்டங்கள் சமீபத்திய
கனமழை,வெள்ளம் காரணமாக மிகப்
பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
மறுபுறத்தில் நாட்டின் மொத்தமுள்ள
676 மாவட்டங்களில் 302
மாவட்டங்கள் வரலாறு காணாத
வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
மிகப் பெருமளவில் பயிர்கள்கருகிப்
போனதால் விவசாயிகள் துயரத்தின்
பிடியில் சிக்கியுள்ளனர்.இத்தகைய
பின்னணியில்தான் மிகப்பெருமளவில்
விவசாயிகளிடமிருந்து பருப்பு
வகைகளை கொள்முதல் என்கிற
பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள்
கொள்ளையடித்தன, விவசாய விலை
விட 5 மடங்கு கூடுதலாக
விலைவைத்து மக்கள் தலையில்
சுமை ஏற்றி இலாபமடித்த
விபரங்களும் வெளியாகியுள்ளன.
ஆண்டொன்றுக்கு இந்தியாவில் சுமார்
24 மில்லியன் டன் பருப்பு வகைகள்
உட்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த
2 மாதங்களில் மட்டும் சுமார் 4
மில்லியன் டன் அளவிற்கு பருப்பு
உட்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 4
மில்லியன் டன் பருப்பை
விற்றவகையில் மட்டும் ஒரு
கிலோவிற்கு ரூ.180 என பெரும்
நிறுவனங்கள்
கொள்ளையை.வெளியிட்டிருக்கும்
விவசாயிகள் சங்கம், இந்தக்
கொள்ளையை மத்திய பாஜக
மோடிஅரசின் ஆதரவோடு
நடத்தியபெரும் கார்ப்பரேட்
கம்பெனிகளின் பெயர்களையும்
வெளியிட்டுள்ளது. குறிப்பாக
அதானியின் விவசாய மார்க்கெட்டிங்
கம்பெனியான "அதானிவில்மர்"
நிறுவனம் தனது 'பார்ச்சூன்'
நிறுவனத்தின் மூலம் பருப்பு
வகைகள் மற்றும் எண்ணெய்
வகைகளை விற்பதற்காக பல லட்சம்
டன் பருப்பு வகைகளை
விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
செய்துள்ளது. ஆனால், 1கிலோ ரூ.40
என வாங்கி, அதே பருப்பை பாக்கெட்
போட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.220
என்ற விலையில் விற்று
சம்பாதித்துள்ளது.
விலையேற்றமடைய அதானி
பார்ச்சூன் நிறுவனம் ஒட்டுமொத்த
பருப்பு வகைகளையும் பதுக்கியதாக
விவசாயிகள் சங்கம்
குற்றம்சாட்டியுள்ளது. மேலும்
டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், ஐடிசி
மற்றும் இதர கார்ப்பரேட் விவசாய
வர்த்தக நிறுவனங்களும், பருப்பு
இருப்பு வைத்துக் கொள்வதற்கான
வரையறையை அரசு தளர்த்தியதை
காரணமாகக் கொண்டு, மிகப்
பெருமளவில் பதுக்கி விலையை
ஏற்றின என்றும், விவசாயிகள் சங்கம்
குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே,
விவசாயிகளிடமிருந்து கூடுதல்
பருப்பை கொள்முதல் செய்யப் போவதாக
கூறிக் கொண்ட மத்திய அரசு, மிகவும்
தாமதமாக ,16ம் தேதி துவரம் பருப்பு
குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4625
என்றும், பாசிப் பருப்பு ரூ.4825
என்றும், குறைந்தபட்ச விலை
நிர்ணயித்து அறிவித்தது. அதாவது
விவசாயிக்கு 1 கிலோ ரூ.46 , ரூ.48
என்ற அளவில் மட்டுமே,,, இதனால்
விவசாயிக்கு எந்த பலனும்
ஏற்படப்படாது .அரசு நிர்ணய
விலையை விட கூடுதலாக ரூ.1
மட்டும் கொடுத்து இதே அதானி
உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும்
மிகப்பெரிய அளவில் விவசாயிகளிடம்
கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளன.
உள்நாட்டில் பருப்பு பற்றாக்குறை
ஏற்பட்ட நிலையில்,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
செய்திட அரசு திட்டமிட்டது. ஆனால்
அதற்கு முன்பு,
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
செய்யப்படும் பருப்பு வகைகளை
நாட்டின் பல்வேறு துறைமுகங்களில்
கையாளுகிற பொறுப்பினை அதே
அதானி நிறுவனத்திடமே மோடி அரசு
கொடுத்துவிட்டது.2014–15ம்
ஆண்டில் இந்தியாவின் பருப்பு
உற்பத்தி மொத்தம் 17.20 மில்லியன்
டன்னாக வீழ்ந்தது. அதற்கு முந்தைய
ஆண்டு 19.25 மில்லியன் டன்
அளவிற்கு பருப்பு உற்பத்தியானது.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காக
நடப்பாண்டில் சுமார் 4 மில்லியன் டன்
அளவிற்கு வெளிநாட்டு பருப்பு
இறக்குமதி செய்திட அரசு
உத்தரவிட்டது. ஆனால் அதற்கு
முன்பே அக்டோபர் இரண்டாவது
வாரத்தில், நாட்டின் அனைத்து
துறைமுகங்களிலும் வந்திறங்கும்
பருப்பை கையாளுகிற பொறுப்பு
அதானி நிறுவனத்திடம்
ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இந்திய
பருப்பு மற்றும் தானியங்கள் சங்க
அமைப்புடன் அதானி துறைமுகங்கள்
மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்க்கொண்டு. அதன் படி நாட்டின் 7
துறைமுகங்களில் அதானி நிறுவனம்
சொந்தமாக வைத்துள்ள துறைமுக
டெர்மினல்களுக்கே வெளிநாடுகளின்
பருப்பு வந்திறங்கும் என்று ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டது. முந்த்ரா, டாகெஜ்,
கண்ட்லா, கஜீரா (குஜராத்), தம்ரா
(ஒரிசா), மர்மகோவா (கோவா) மற்றும்
விசாகப்பட்டினம் (AP) ஆகிய 7
துறைமுகங்களிலும் பருப்பு
இறக்குமதி கையாளப்படும் என்று
அந்த ஒப்பந்தம் கூறுகிறது. குறிப்பாக
கனடா, ஆஸ்திரேலியா மற்றும்
கருங்கடல் பிரதேச நாடுகளிலிருந்து
சுமார் 5 மில்லியன் டன் பருப்பு,
மேற்படி அதானி
குழுமதுறைமுகங்களுக்கு
வந்துசேரும். என்பதே ஒப்பந்தமாகும் .
என விவசாய்கள் சங்கம்
குறிப்பிடுகிறது. அவ்வகையில் பருப்பு
விலை எந்த விதத்திலும் இறங்க
வாய்ப்பில்லை, மேலும் ஒட்டுமொத்த
பருப்பும் தற்போது அதானி போன்ற
கார்ப்பரேட்டுகளின் கைவத்திலே
இருக்கின்ற நிலையில்
விவசாயிகளையும்,பொதுமக்களையும்
திட்டமிட்டே சுரண்டுகின்றன
கார்ப்பரேட்டுகளும்,அ­
ரசுகளும்,,,உள்நாட்டில்
வேண்டுமென்றே பருப்பு
பற்றாக்குறையை உறுவாக்கி
பலகோடிகளை சுருட்டும் கார்ப்பரேட்
மற்றும் ஆளும் அரசுகளால்
நிச்சயமாக மரணத்தை தழுவிவிடும்
நிலைக்கு விவசாயிகளும்,பொதுமக்­­­
களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதுபோதாதென்று இயற்கை
அழிவுகளும் அவர்களின் கழுத்தை
நெறிக்கிப்பிடிக்கின்றன. ஊழலற்ற
அரசு அமைப்போம் என்கிற போலி
அறிக்கைகளால் ஏமாந்து இன்று
விழிப்பிதுங்கி நிற்கிறார்கள்
விவசாயிகளும் பொதுமக்களும்,
அத்தியாவசிய உணவில் கூட
ஊழலெனில் உழைப்பாளிகள் வர்க்கம்
இனியும் தாமதிக்காமல்
விழித்துக்கொள்ள வேண்டும். சனநாயக
சக்திகளால் மட்டுமே முதலாளித்துவ
கார்ப்பரேட்டுகளையும் அதிகார
வர்க்கங்களையும் விரட்டியடிக்க
முடியும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...