Friday, November 20, 2015

நடிகர் சங்க அறிவிப்பும் நமக்கான விழிப்பும்

மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட
மக்களுக்கு உதவ வேண்டியது அரசின்
கடமை இதில் நடிகர் சங்கம் ஓன்றும்
செய்ய முடியாது நடிகர் சங்கம்
என்பது நடிகர்களின் பிரட்சனையை
மட்டும் தீர்க்க உள்ள அமைப்பு ஆகும்.
முதல்வரை சந்தித்த பின்
நடிகர் சங்க நிர்வாகிகள் இப்படி
அறிவித்திருக்கிறார்கள். மாற்றுக்
கோணத்தில் நடிகர்கள் சங்கம்
கூடியெடுக்கும் முடிவுகளிலும் சிலச்
சாதகமானவைகள் இடம்பெறவேச்
செய்கின்றன. ஈழ இனப்படுகொலை
குறித்து ரஜினி ஏன் பேசவில்லை,
உலகவங்கிகள் ஒப்பந்தம் குறித்து
உலகநாயகன் ஏன் கண்டனம்
தெரிவிக்கவில்லை, காஷ்மீர்
இனவாதம் குறித்து நாசர் ஏன்
வாய்திறக்கவில்லை , கடலூர்
சென்னை கரூர் வெள்ள பாதிப்பு
குறித்து நடிகர்சங்கம் ஏன்
கேட்கவில்லை, என்று நம்மறிவு
கேட்கும் கேள்விகளென்பது
அபத்தபமாகும். நடிகர்
சங்கத்திற்குள்ளேயும் பல
ஒடுக்குமுறைகள் காலங்காலமாக
இருந்துக்கொண்டே இருக்கிறது.
அதற்கான பலமானச் செயல்பாடுகளை
முதலில் அவர்கள் முன்னெடுக்கட்டும்
. கலைத்துறைக்கும் , அரசியலுக்கும்
இருக்கும் நெருக்கத் தொடர்பை
இவ்வகையான முடிவுகளின் மூலம்
பிரித்தெடுக்கலாம். அரசியல் வேறு,
கலைத்துறை வேறு என்கிற
பார்வையில் எடுத்துச் சென்றால்
மக்கள் சிந்தனையுள்ள சமூக
நல்லிணக்க மனிதர்களை எளிதாக
தேர்ந்தெடுத்து விடலாம். 18 வயது
பூர்த்தியடைந்த ஒரு இளைஞனோ,
இளைஞியோ வாக்களிக்கும் உரிமை
பெற்று அதனை முறையாக
பயன்படுத்தும் ஓர் முடிவுக்கு
வருகிறார்கள் அது மக்களவை
தேர்தலோ, சட்டசபை தேர்தலோ,
உள்ளாட்சித் தேர்தலோ . யாருக்கு
ஓட்டுப்போட வேண்டும் என்பதில் சில
சதவிகிதங்கள் நடிகர் நடிகைகளே
தீர்மானிக்கிறார்கள். அதனால்தான்
ஆளுமையின் உச்சத்தில் இருக்கும்
அதிமுக மற்றும் திமுக கட்சிகள்
தேர்தல் நேரங்களில் நடிகர்
நடிகைகளை களத்தில் இறக்குகின்றன.
அதுமட்டுமில்லாது 2016 தேர்தல்
சந்திக்கப்போகும் வேளையில்
இவ்வகையிலான முடிவுகள்
சாதமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது
எனலாம். தனது நடிப்புத் துறையின்
அடையாள முகங்கொண்டு அரசியலில்
உள்நுழையும் நடிகர் நடிகைகளால்
மக்கள் பாதிப்படைவதை விடவும்
அதிகமாக இந்த தமிழ்ச் சமூகத்திற்காக
உண்மையாக உழைக்கும் மக்கள் நல
களப்பணியாளர்களின் உழைப்பு
வீணாக்கப்பட்டு பெரும்
பாதிப்படைகிறார்கள். ஒரு தொகுதியில்
பேச்சுக்காக ரஜினியோ, கமலோ, அஜீத்தோ,
விஜயோ, கார்த்திக்கோ, விஷாலோ
தேர்தலை சந்திக்கிறார்களெனில்
அங்கே அவர்கள் வெற்றிவாகை
சூடிக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கு
மாறாக அந்த தொகுதி மக்களின்
அடிப்படை வசதி மற்றும்
உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கு­
ம் சமூகச் சிந்தனையாளர்கள் அல்லது
அரசியலாளர்கள் டெபாசிட் இழந்து
படுதோல்வி சந்திக்கிறார்கள் . இது
நமது அரசியலின் எதார்த்த
உண்மைகள். திமுக ஆட்சியின் போது
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா
எடுப்பதும், ஊழல் அதிமுக ஜெ
சிறையிலிருக்கும்போது தெய்வத்தை
தண்டிப்பதா என்பதும்
அரசியலாளர்களுக்கும்
கலைத்துறையினருக்கும்
மத்தியிலிருக்கும் பிழைப்புவாத
பரிவரித்தனையே காரணமாய்
இருந்திருக்கிறது. இதனை
மையப்படுத்தி நடிகர் சங்கமும் நடிகர்
நடிகைகளும் தங்களை
வளர்த்துக்கொள்கிறார்கள் மேலும்
ஒடுக்குதலுக்கும் ஆளாகி
நிற்கிறார்கள். ஒரு சங்கம் மக்கள்
பாதிப்புக்கு உதவ வேண்டும் என்பதை
திணிக்க முடியாது. அது
அவர்களாகவே முன்வந்துச் செய்ய
வேண்டும் . உதவுவதும் உதவ
மறுப்பதும் அவரவர் விருப்பம். அதில்
தலையிட நமக்கு உரிமையில்லை
ஆனால் யார் உதவுகிறார்கள் உதவ
மறுக்கிறார்கள் எனும் வகையறிந்துச்
செயல்படுவதும், சிந்திப்பதும்,
அடையாளம் காணுவதும் மிக
முக்கியான பணியாக நமக்கிருக்கிறது.
வெள்ள பாதிப்புக்களுக்கு நடிகர் சங்கம்
தலையிட முடியாது, அது அரசின்
வேலையென செல்வதில் ஓர்
உண்மையும் கடமையும் இருக்கிறது
நமக்கான முதல் பணி
மெத்தனப்போக்கோடு ஐந்தாண்டுகள்
ஆட்சி செய்யும் அரசை கண்டிக்கவும் ,
எதிர்க்கவும் ஓர் வலுவான இயக்க
முடிவுகளை முன்னிலை படுத்த
வேண்டும். அதன் பிறகே
கலைத்துறையின் அரசியல்
குறிக்கீடுகளை எதிர்க்க முற்பட
வேண்டும். நடிகர் சங்கம் உதவ
மறுத்து விட்டது என்பதற்காக
அவர்களை கடுமையாக எதிர்க்கும்
அதே மக்கள்தான் அதீத உணர்ச்சி
கொண்டு அவர்களின் உருவத்திற்கும்,
திரைப்பட கட்டவுட்களுக்கும்
பாலபிஷேகம் செய்கின்றோம் .
அதையும் தாண்டி ஒருபடி மேலே போய்
பீர் அபிஷேகம் நிகழ்ந்துக்கொண்டிருக­
்கிறது இது முரணாக நமக்குத்
தெரியவில்லையே ஏன்?
கலைத்துறையிலும் பல்வேறு
ஒடுக்குமுறைகள் இருப்பதை நம்மால்
மறுக்க முடியாது. அவ்வப்போதெழும்
"தடை உத்தரவுகள்" நமக்கு
பழிகிப்போனவைகள். அது பற்றியே
பேசாத போது அவர்களிடமிருந்து
மற்றவற்றை எதிர்பார்ப்பது நியாயமே
இல்லை.ஒரு வலுவான மக்கள்
இயக்கம் இருந்தால் ஒருவேளை அந்த
தைரியம் நடிகர் சங்கத்திற்கு
வந்திருக்கும். ஏன் நமக்கே
அப்போதுதான் நம்பிக்கை வரும். நாமும்
இங்கே வலுவான மக்கள் இயக்கத்தை
கட்டமைக்கவுமில்லை என்பதே
பிரதான உண்மை. வெறும் மூவாயிரம்
ஓட்டுக்களை முன்வைத்த நடிகர்
சங்கத் தேர்தலை முழுநேர
நேரலையில் காட்டிய நமது செய்தி
ஊடகங்கள் , ஒரு லட்சத்திற்கும்
மேலாக இருக்கும்
விவசாயம்,கூலித்தொழிலாளர்,
கட்டுமானர்கள் சங்கங்களின் தேர்தலை
ஏன் நேரலையில் காட்டவில்லை
என்று என்றாவது கேள்விக்
கேட்டிருப்போமா? இங்கே
தவறுகளையும்,குற்றவுண­
ர்வுகளையும் தற்செயல் நிகழ்வுகளாக
கடந்துபோகும் மனநிலையே சராசரி?
மனித மனநிலையென கற்பதம்
கொண்டவர்கள் நாமாக இருக்கையில்
ஏன் எதிர்பார்க்கிறோம் அடுத்தவர்
உதவு வேண்டுமென்று,,,
காலம் கனிந்து வந்துக்
கொண்டிருக்கிறது நமது முன்னால்
நமக்கேத் தெரியாமல் நன்மைகள்
பின்தொடர்ந்து வருகிறது அடுத்த
2016 தேர்தலில் மக்கள் நல சனநாயக
முற்போக்கு சிந்தனைகளின் வெற்றிச்
சுடர்களை ஏற்றிவைக்க நமக்கே உரிய
முழு அதிகார இயக்கமொன்றை
கட்டமைப்போம் , அப்போது கலைத்துறை
தாமாக விலகிவிடும் அரசியலில்
இருந்து, அதுவரையில்
எதிர்பார்க்காதீர்கள் அவர்களின்
கைகளை,,, IT துறையில் தொடங்கி
தொழிலாளர் துறைகள் வரையில் நம்
கண்முன்னால் வெள்ள நிவாரண
உதவிகளைச் செய்திடும்
நல்லுள்ளங்களை இத்தருணத்தில்
பாராட்டிட வேண்டுமல்லவா
அதற்காகவேனும் கலைத்துறை மீதான
எதிர்ப்புகளை கொஞ்சம் ஒதுக்கியே
வையுங்கள். நடக்கும், நடக்கப்போகும்
நிகழ்வுகளை நேரில் கண்டு நடிகர்
சங்கம் தாமாகவே தங்களை திருத்திக்
கொள்ளும் வாய்ப்புகளை
பொதுமக்களாகிய நாம் உறுவாக்கிட
வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...