Wednesday, January 27, 2016

பத்மஸ்ரீ நாப்கின் உற்பத்தியாளன்

வாழ்த்துதலை ஒரு பெட்டகத்தினுள் அடைத்துவிட்டு வெற்றுக் காரிய நிழல்களால்
நம்மையும் சேர்த்து அதனுள் பூட்டிவைக்க மனம் விரும்பவில்லை, அனாலும்
அதற்கான தகுதி அலசலுக்கு எவ்வித அடக்கமும் தேவையில்லை என்றே
உரைக்கப்படுகிறது ஓர் சமூக உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
என்பதால்,,,
இது நிகழ்ந்திருக்கலாம் அல்லது நிகழ்த்தியிருக்கலாம்­ என்கிற வெற்று
பேச்சிற்கு அப்பால் நிகழ்த்திவிட்ட ஒரு சாதனையாளனுக்கு அதுவும்
சமூகத்தின் தயக்கத்தில் புழுங்கிப்போயிருந்த மற்றும் புழக்கமில்லாத ஒரு
அத்தியாவசிய தேவைப் பொருளை மலவு விலைக்கு தயாரித்து விற்பனை செய்திட்ட
சாதனையாளருக்கு தகுந்த விருதுதான் அது என்றால் தலைவணக்கம் பல தலைமுறைகள்
தெரிவித்தல் வேண்டும்.

இந்த விருது இவருக்கு அவசியமா? அப்படி என்ன செய்தார் மக்களுக்கு எனும்
பத்மவிபூஷன் விருது பெற்றிருக்கும் நடிகர் ரஜினி அவர்களிடத்தில் எதுவும்
வாதிட விரும்பவில்லை, விருப்பமுமில்லை விவாதம் அவசியமற்றது வேண்டாமென
தள்ளி ஒதுக்கி விடலாம் எளிதாக,,,

ஏன் இப்படி செய்தார்? எதற்காக இந்த கவுரவ வீம்பு? இந்த நாடகம்
நிகழ்த்தவும் தனித்திறமை வேண்டுமென "பத்மஸ்ரீ" விருதினை புறக்கணித்த
எழுத்தாளர் ஜெமோவுக்கு அவர் பாணியிலேயே கடிதம் எழுதும் Mr.செல்வத்திடம்
விமர்சனம் எழுதும் பணியை முற்றாக ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி விடுதல்
அவசியப்படுகிறது. அதற்கான தேவையும் ஆர் எஸ் எஸ் அவ்வப்போது தன்னிலை
விளக்கங்கள் தரலாம்.

இரண்டையும் ஒதுக்கிவிட்டு உண்மையாக தன் உழைப்பை சமூகத்திற்கு தந்த அந்த
மனிதர் மனதில் ஆணித்தரமாய் குடிபுகுகிறார். அதுவும் "அந்த விஷயம்" என்று
இன்றுவரை வெளிப்படையாக பேச மறுத்தும், வாங்கத் தயங்கும் நிலைமையும்
இருக்கும் பெண்களுக்கான அத்தியாவசியப் பொருளான " நாப்கின்"
உற்பத்தியாளருக்கு விருது என்றால் தகுதியான நபருக்கான விருது என்றே
எடுத்துக்கொள்ளலாம். இந்த சமூகத்தில் பல்வேறு முகச் சுளிப்பு
பார்வையுடனும், ஓர் ரகசியத் தன்மை அதுவென்று கட்டமைத்த காரணங்களால்
பெண்களே கூச்சப்பட்டு கடைகளில் செய்தித்தாள் மடித்த நிலையில் வாங்கும்
பொருளை மிக மலிவாகவும்,மிக பாதுகாப்புத் தன்மையுடனும் தானே உற்பத்தி
செய்து பெரு நிறுவனங்களான ஸ்டேஃபிரீ,விஷ்பர் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு­
சவால்விட்டு ஏழை எளிய பெண்களும் வாங்கி பயன்படுத்தும் மலிவுவிலை விற்பனை
சாதனையாளர்
திரு.அருணாசலம்_முருகானந்தம் அவர்களுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
மகிழ்சி அளிப்பது மட்டுமல்லாது சாதனை படைக்கத் துடிக்கும் பலகோடி
பேருக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை குறைந்த
செலவில் தயாரித்து வழங்கி வருகிறார். இந்தியாவில் 60 % ஏழைப் பெண்கள்
நாப்கின் வாங்க வசதியின்றி பழைய துணிகளை உபயோகிக்கும் அவலம் நிலவுகின்ற
சூழ்நிலையில் இச்சமூக அவலத்தினை போக்கும் முயற்சியின் பலனாக முருகானந்தம்
அவர்களின் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் குறைந்த செலவில்
சுகாதாரமான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தி வடிவமைத்தார்.
உறுவாக்கப்பட்ட இயந்தியத்தின் மூலம் நாப்கின் தயாரிக்க முடியுமென்று
நிரூபணப்படுத்தி இரண்டிற்கும் ஆன காப்புரிமை பெற்று தனியார் மற்றும் பெரு
நிறுவனங்களுக்கு இயந்திரத்தை விற்பனை செய்யாமல் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்
என்ற நிறுவனத்தை தொடங்கி மகளிர் அமைப்புகள் , பள்ளிகள் போன்றவற்றிற்கு
லாபமின்றி இயந்திரம் , மற்றும் மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி
அளிக்கிறார் . இன்றைய நிலவரப்படி 21 நாடுகளில் சுமார் 10000 இயந்திரங்கள்
மூலம் , சுமார் ஒரு கோடி பெண்கள் இவரின் சுகாதாரமான நாப்கின்களை குறைந்த
விலையில் ( 1 பீஸ் 1rs,2rs ) உபயோகிக்கிறார்கள்.
ஏற்கனவே உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம்
பத்திரிக்கை (2014 ) தேர்ந்தெடுத்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
திரு.அருணாசலம்_முருக­ானந்தம் எனும் தொழிற்புரட்சிக்காரனு­க்கு இந்திய
அரசு "பத்மஸ்ரீ" விருது வழங்கியுள்ளது என்பதை மேற்சொன்ன ஒரு விருது
புறக்கணிப்பும், ஒரு விருது ஏற்பும் ஏற்படுத்தியுள்ள விமர்சனங்கள் மூலம்
மூடிமறைக்கப்படுகிறது­. வெளிச்சத்தில் பல சாதனையாளர்களை கொண்டுவருதல்
நமக்கான தேவையாக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும், பத்மஸ்ரீ விருது
பெற்றமைக்காக பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொழிற்புரட்சியாளனுக்­கு
சமர்ப்பணம்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...