Friday, February 05, 2016

ஆணாதிக்க வெறியர்களால் பலியாகிய உயிர்

இந்திய சமூகத்தின் ஆணாதிக்கத் தன்மைக்கு அடையாளமாய் அதன் வேர்களிலிருந்து
முளைத்தெழுகிறது பெண்ணடிமையும், சாதி ஆதிக்கமும், பதிவேற்றப்பட்ட
புகைப்படத்தை கண்டு போலி ஜனநாயகம் என்கிற அடையாளத்தை தன் உடல் முழுதும்
குத்திக் கொண்டிருக்கிற இந்திய சமூகம் முகம் சுழிக்கலாம் அல்லது தங்கள்
பார்வையை வேறுபக்கம் திருப்பலாம். ஆனால் ஒன்று ஆதிக்க போலி ஜனநாயகம் தான்
பதிவு புகைப்படத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும், எங்கும் அவர்களால்
தப்பியோட முடியாது.

உபி இல்­ சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு சாதி கலவரத்தில்
அங்குள்ள உயர்சாதி இந்துத்துவ ஆணாதிக்க வெறியர்களால் கங்காவதி என்ற
(தலித்) தாழ்த்தப்பட்ட சகோதரியை கற்பழித்தது மட்டுமல்லாது
கற்பழித்துவிட்டு அந்த சகோதரியின் பிறப்புறுப்பில் கரும்பினை சொறுகி
கொன்றிருக்கிறது.

ஆணாதிக்கம் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருப்பதற்கு காரணம் மதத்தையும்,
மதச்சாதியத்தையும் வணங்கி அந்த மதங்களாலும்,சாதியத்த­ாலும் கொழுத்து
இந்திய நாட்டைச் சுரண்டும் அதிகார வர்க்கத்துக்காக ஒட்டுமொத்த சமூகமும்
காலில் விழுந்து ஜெபித்துக்கொண்டிருக்­கிறது என்பதுதான் முதன்மைக்
காரணமாக அமைகின்றது. எந்த அதிகார வர்க்கமும் பெண்களை கொஞ்சமேனும்
அரவணைத்தது கூட இல்லை, எப்படி அது அரவணைக்கும், பெண்களுக்கான உரிமையை
கொடுக்கும்? ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் முதன்மை அடிமைப் பிரயோகம்
பெண்ணியத்தின் மீதும் பெண்ணையத்தை சுற்றியும் தானே நிகழ்த்தப்படுகிறது,
அப்படியிருக்க ஆணாதிக்க அதிகார வர்க்கத்திடம் அன்பையோ , அரவணைப்போ,
உரிமையோ, நேர்மையோ இவற்றில் ஒன்றையோ எதிர்பார்க்கவே முடியாது என்பது
உணர்ந்தது தானே,,, ஒரு பெண்ணின் மீதான அத்துணை திணிப்புகளுக்கும்
அப்பெண்ணை சுற்றியுள்ள ஆணாதிக்கம் நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும்.இந்திய
சமூகம் காலங்காலமாக மதத்தின் பெயரால் சாதியத்தின் பெயரால் பெண்ணின்
பிறப்புறுப்பை அழித்து வருகின்றது எனும் குற்றவுணர்ச்சி சிறிதேனும்
ஏற்பட்டிருந்தால் இந்த பதிவு புகைப்படம் இங்கே இருந்திருக்காது தானே!
மதமாதிக்கம் மற்றும் சாதியாதிக்கம் கொண்டு ஒரு பெண் இன்னொரு ஆணை
காதலித்தால் வரும் கடுங்கோபமும், தடையும், எதிர்ப்பும் அதே பெண் பாலியல்
வன்புணர்வு செய்யப்படுகின்றபோது மட்டும் பதுங்கிக்கொள்கிறது.
கோழத்தனத்தின் உச்சமென இதைச் சொல்லலாமா? ஏன் பெண் என்பவள் காதலிக்கக்
கூடாது, அதுவும் கீழ்சாதி ஆண் என்று வருகின்றபோது பெற்ற பிள்ளையே ஆனாலும்
கொலை செய்து விட வேண்டுமென்று துடிக்கிற ஒட்டுமொத்த ஆணாதிக்கமும்தான்
மேற்கண்ட புகைப்படத்தில் பிணமாகி கிடக்கின்ற பெண்ணின் பிறப்புறுப்பில்
கரும்பை சொறுகியவர்கள். ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து இச்சை
தீர்ந்தபின் கொலை செய்யும்போது மட்டும் இந்த ஆணாதிக்கச் சமூகம் சாதி
பார்ப்பதில்லை, அப்பெண் தலித் என அடையாளப்பட்டால் இன்னமும் வசதி,
சட்டமும் அமைதிகாக்கும், சமூகமும் ஒத்துழைப்பு கொடுக்கும் , யாரும்
கேட்பாரற்ற நிலை ஏற்படும் அதுவே தண்டனையிலிருந்து தம்மை விடுவிக்கவும்
செய்யும் . இத்தனை வசதிகள் இருக்கையில் தலித் பெண்ணின் பிறப்புறுப்பில்
கரும்பு சொறுகி தன் ஆதிக்கத்தை எளிதாக நிலைநாட்டலாம். அப்படித்தான்
கட்டமைத்திருக்கிறது இந்த கேடுகெட்ட இந்தியச் சமூகமும், இந்திய
மதவாதமும்,சாதியவாதமு­ம், இதற்கு இந்திய கலாச்சாரம் என்கிற பெயரும்
கொடுத்திருக்கிறார்கள­். உண்மைகள் உறுத்துகிறது எனில் ஆணாதிக்கம் உயிரே
துறந்தாலும் இறந்த பெண்ணின் உயிருக்குச் சமமான நீதிக்கு ஈடாகாது, ஏனெனில்
இங்கே நீதி என்பதும் நிரந்தர ஆணாதிக்கமாக உருபெற்றுவிட்டது என்பதை
எவராலும் மறுக்க முடியாது.
கவிதையொன்று என்னால் எழுதப்பட்டது "(ஆண்)டவனின் குறி!கள்" என தலைப்பிட்டு,,,
அதில் ;

உலகம் இயங்குதல்
வேண்டுமெனில்
யோனிகள்
திறந்தே வைத்திருக்க
வேண்டுமாம்

கட்டளை பிறப்பித்தும்
கட்டுகளை இழுத்தும்
இறுக்கியும்
ஏகபோகமாய்
புணர்ந்தனுபவிக்கும்
ஆணென்ற
அரசப் பெருமகனார்கள்
அப்படித்தான்
கற்பிதம்
உரைக்கிறார்கள்
உலகிற்கு

கற்பெனும்
வலையத்திற்குள்
அரளிவிதையரைத்து
பூசியபடியே,,,

என்றெழுதியிருப்பேன் ஆணாதிக்கம் அதன் இயல்பிலிருந்து சற்றும் மாறவில்லை
அல்லது மாற்றத்தை விரும்பவில்லை என்பதை இதுபோன்ற சம்பவங்கள்
மெய்பித்துக்கொண்டே இருக்கின்றன. இனி பெண்ணிய எழுச்சி இங்கே நடைமுறைக்கு
வராமல் எவ்வித புரட்சியும் இந்தியத்தியத்தில் சாத்தியமில்லை என்பதை
இனியாவது பெண்ணியம் உணர வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...