Thursday, February 04, 2016

கலாச்சார "மயிறுகள்"

காலனிய ஆதிக்கம் வேரூன்றி
தளைத்திருக்கும் சமுதாய
கட்டமைப்பிற்குள் காலாச்சாரம்
என்பது மானுடத்தை இழுத்து
கட்டிவைக்கப்பட்ட அடிமைக்
கயிறாகவே எங்கும் எல்லையை
சூழ்ந்திருக்கிறது. மயிறுகள் என்றதும்
ஊசி முனையில் அமர்ந்தது போல்
இருக்குமாயின். அந்த வெஞ்சினம்
சமூக அவலங்கள் நிகழ்கின்றபோதும்,
அதன்பொருட்டு விழும் பிணங்கள்
குவிகின்ற போதும் எழாமல்
இருக்குமாயின் மயிறுகள் மிகவும்
பிடித்திருக்கிறது கலாச்சாரத்தை
சாடுகையில்,,, அப்படியே
வெஞ்சினத்தால் மயிறுகள் சிலிர்த்து
வான்நோக்கி நின்றாலும் வெறும்
மயிறுதானே என்று ஒட்டு
வைத்துவிடலாம் அல்லது மீண்டும்
வளர்த்து விடலாம்.
கேவலப்படுத்துகிறார்கள்
கலாச்சாரத்தை என்றெண்ணம்
எழுமானால் மயிறிழையில்
வெற்றியை தவறவிட்டான்,
மயிறிழையில் உயிர் தப்பினான்
என்பதற்கெல்லாம் நா கூசி வெஞ்சினம்
எழவேண்டுமே ஏன் எழவில்லை
அப்போது மட்டும் அதற்கு மயிறுகள்
ஏற்ப்புடையதாக இருக்கிறதேயானால்
இந்த இந்திய கலாச்சாரத்திற்கும்
மயிறுகள் ஏற்புடையதாக இருப்பதில்
ஏதும் தவறில்லைதானே,,,
உத்தர பிரதேசத்தில், கிறித்துவ போதகர்
ஒருவரை மிகக் கடுமையான
முறையில் . பாதி மழித்த மீசை, பாதி
மழித்த தலைமுடி, புருவ
முடியும்கூட பாதி
மழிக்கப்பட்டநிலையில், செருப்பு
மாலைகள் அணிவிக்கப்பட்டு
கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக
இழுத்து வரப்படுகிறார் . இப்படி
ஊர்வலமாக பஜ்ரங் தள் எனும்
இந்துத்துவ பார்ப்பானிய அமைப்பை
சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள்
இதனை நிகழ்த்துகின்றனர்.
இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கம்
போதகர் மேல் சுமத்திய குற்றச்சாட்டு,
மூன்று இந்துக்களை ஏமாற்றி
கிறித்துவர்களாக மதம் மாற்றி
அவர்களை மாட்டிறைச்சி உண்ண
வைத்தார் என்பதாகும். குற்றச்சாட்டை
முன்வைத்த அதே இந்துத்துவ
கலாச்சார மயிறுகள் தாய்மதம்
திரும்புதல் என கொடிபிடித்து பல்வேறு
கிருஸ்த்துவ மற்றும் இசுலாமிய
சிறுபான்மை மக்கள் சமூகத்தினரை
எண்ணிக்கையில்லாமல் மிரட்டியும்,
அடிபணியவைத்தும், தாக்குதல்
நடத்தியும், குடும்பத்திற்கு 5 லட்சம்
ரூபாய் என கொடுத்தும்
வலுக்கட்டாயமாக இந்துமத திணிப்பு
செய்தார்களே அவர்களுக்கான
தண்டனைகள் தரப்படாத வரையில்
கலாச்சாரம் வெறும் மயிறாகவே
கண்ணுக்கு புலனாகிறது.
திருப்பூர் பள்ளியொன்றில் ஒன்றாம்
வகுப்பு மாணவனை ஆறாம் வகுப்பு
மாணவன் அதீத கோபம் கொண்டு
கழிவறையிலேயே கொலை
செய்துவிட்ட பழியுணர்சிக்கு
பதிலேதுமில்லாமல் கல்வி முறை
மற்றும் பிள்ளை வளர்ப்பில்
முறையற்று போன சமூகச் சூழலை
கொண்டிருக்கிற கலாச்சாரம் வெறும்
மயிறாகவே கண்ணுக்கு புலனாகிறது.
முதிர்ச்சி மற்றும் முறையற்ற காதல்,
விழிகளில் எப்போதுமே தெறிக்கும்
பழியுணர்ச்சியை தூண்டும் கதாநாயக
வேடம் கொண்டும், மதுவுக்கு
அடிமையாதலை நியாயப்படுத்திக்
கொண்டும் ஏதொ பெருந்தொண்டு
செய்வதாக கூறித் திரியும்
நற்சிந்தனைகளற்ற திரையுலக
தொண்டின் எதிர்வினை இதுவென
குற்றவாளிக் கூண்டில்
திரைத்துறையினை ஏற்றாத
கலாச்சாரம் வெறும் மயிறாகவே
காட்சியாகிறது.
இந்த இந்திய நாட்டிற்குத் தேவையான
அரசியலமைப்பினை தந்த
புரட்சியாளர் அம்பேத்கரை இச்சமூகம்
பெரும் காழ்ப்புணர்ச்சி கொண்டு அந்த
மாமேதையை ஓர் இனத்திற்கு
மட்டுமே சொந்தக்காரன் என்பதுபோல்
கட்டமைத்திருப்பதை தன்னால் ஆன
சிறு முயற்சிகளின் மூலம்
உடைத்தெரியத் தயாராகி கல்விதான்
ஆகச்சிறந்த ஆயுதமெனும்
அண்ணலின் வாக்கினை ஏற்று
உயர்படிப்பினையில் நிலவும்
இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கத்தை
தன் பலத்தால் மோதுகையில் அவனது
பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
எங்கே அம்பேத்கரியமும், தலித்தியமும்
வளர்ந்து அடிமைச் சமூகம் எழுச்சி
பெற்று விடுமோ என்கிற அச்சத்தில்
அண்ணலை பரப்புரை செய்த
இளஞ்சிறுத்தை ரோகித் வெமுலாவை
கொலை செய்து தூக்கிலேற்றி
அக்கொலையை தற்கொலையென தன்
சூழ்ச்சிகளின் மூலம் இந்துத்துவ
பார்ப்பானிய ஆதிக்கச்
சாதிவெறியாளர்கள் செய்த
குற்றத்திற்கு ஏதும் தண்டனைகள்
இல்லையெனில் கலாச்சாரம் வெறும்
மயிறாகவே முளைத்துக் கொள்கிறது.
இதில் நிகழ்த்தப்பட்ட மத்திய, மாநில
மற்றும் கல்விநிறுவனத்தின்
முகத்திரையை கிழிக்க வக்கற்ற
மேதாவிகளெனும் சமூக
ஆர்வலர்கள்??? நரிவேடமிட்டு ரோகித்
வெமுலாவின் சாதியினை
ஆராய்கிறது. அதற்கும் ஆதாரம்
உண்டு "அவன் தலித் என்று" பொது
விவாவதம் வைக்கையில்
மேற்கொள்கிறார்கள் அந்த போலி சமூக
ஆர்வலர்கள் "படிக்கிற வயதில் ஏன்
அரசியல்" என்று,,, அட! மேதாவிகளே
அண்ணலையும்,ஜோதிராவ்
பூலேவையும், அயோத்திதாச
பண்டிதரையும், தாத்தா ரெட்டைமலை
சீனிவாசனையும், கக்கனையும்
படிக்காமல் அவர்களை பற்றி
எதுவுமறியாமல் நீங்கள் சமூக
ஆர்வலர்கள் எனில் அவன் படிக்கிற
வயதில் அண்ணலை படித்து
அரசியலை கற்கிறான் என்றால்
அவனுக்கும் கீழாக அல்லது அவனது
காலணிக்குக் கூட ஈடாகமாட்டீர்கள்
நீங்கள், என்பதனை உணராத வரையில்
உங்களையும் சமூக ஆர்வலர்களாக
ஏற்றுக்கொண்டிருக்கும் கலாச்சாரம்
வெறும் மயிறுதான், என்பதை
ஆழமாக பதிவு செய்திட
அவசியப்படுகிறது. ரோகித் வெமுலா
வெறுமனே கொலை
செய்யப்படவில்லை, அவனது
வாக்குமூல கடிதமே அதற்குச்
சான்றாக அமைகிறது. தன் இறுதி
மூச்சில் அவன் தோற்றுவிடவில்லை,
மாறாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறான்
அல்லது அழிக்கப்பட்டிருக்கிறான்,
அவனை அழித்தது இந்த கலாச்சாரம்
மட்டுமே அதனாலே அது மயிறாக
தெரிகிறது. மயிறை வேண்டுமானால்
மழித்துவிட்டு பிறகு வாருங்கள்
உங்களின் கலாச்சார மயிறுகளை
தூக்கிக்கொண்டு,,, எப்படியும்
ஏதேனுமொரு இந்துத்துவ பார்ப்பானிய
கோவில்களுக்குதான் மழித்த மயிறை
காணிக்கையாக்குவீர்கள் அதனாலே
அப்போதும் கலாச்சாரம் வெறும் மயிறு
மட்டுந்தான், நியாயங்கள் இங்கே
கவனிக்கப்படாத போது ஏன்?
கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க
வேண்டும். அதற்கான தேவையும்
இங்கே எழவில்லை, காரணம் இந்திய
கலாச்சார மயிறுகள் தான் ரோகித்
வெமுலாவை கொலை செய்தது.
திருவாரூர் பிரியங்கா, சென்னை
எர்ணாவூர் மோனிஷா , காஞ்சிபுரம்
மாவட்டம் செய்யாறு சரண்யா, இந்த
மாணவிகளின் பெயர்களை இன்று
தமிழகமே உச்சரிக்கின்றது வெற்று
அனுதாப அலைகளோடு,,, மூன்று
இளம் மாணவச்செல்வங்களும்
வாழ்ந்து காட்டி இம்மண்ணில்
மருத்துவச் சேவை செய்யப்போவதாக
சபதம் ஏற்றிருக்கலாம் அல்லது
அச்சிந்தனையோடே கல்வியில்
புகுந்திருக்கலாம், ஆனால் அவர்கள்
மூவரும் இப்போது உயிரோடில்லை,
கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
அதனை தற்கொலை என்று மூடி
மறைக்கிறது நீங்கள் உயர்த்திப்
பிடிக்கும் கலாச்சாரம் எனும்
மயிறுகள். மூவருமே ஏழை எளிய
குடும்பத்தை சார்ந்த ஒடுக்கப்பட்ட
சமூகத்தை அடையாளமாய்
கொண்டிருக்கிறார்கள். அவர்களை
கொலை செய்தவர்கள் கலாச்சார
சீமான்கள், சீமாட்டிகள். தொடர்ந்து
அவர்கள் திணிக்கும் முறையற்ற கல்வி,
கல்வி வியாபாரம், கல்வி
தனியார்மயமாதல், கையூட்டு அரசு
அதிகாரிகள், களவாடப்படும் கல்வி
உரிமைகள், ஊழல் அரசு ,
போன்றவற்றின் மூலமாக ஒரு சித்த
மற்றும் யோகா மருத்துவக்
கல்லூரியின் கேடுகெட்ட முதன்மை
சீர்கேட்டினால் கொலைசெய்யப்பட்டிருக்­­
கிறார்கள். இக்கேடுகெட்ட முதன்மை
சீர்கேடுகளை அனைத்தும்
கட்டவிழ்த்து வீதியெங்கும் ,
நாடெங்கும் உலவ விட்டிருப்பது
நீங்கள் உயர்வாகவும்
மேன்மையாகவும் உயிராகவும்
கருதும் அதே "கலாச்சாரம்" எனில்
கொலைசெய்யப்பட்டு பிணமாக
கிணற்றில் இருந்து தூக்கப்பட்ட அந்த
மூன்று மாணவிகளின் தலை
மயிறுக்குக் கூட ஈடாகாது
"கலாச்சாரம்" என்பதால் வெறும்
மயிறுகளாகவே
மனதிலேற்றப்படுகிறது. பணம்
பிடுங்கியதுமில்லாமல்
மாணவச்செல்வங்களை
கொத்தடிமைகளாக நடத்திய விழுப்புரம்
SVS கல்லூரி நிர்வாகம், மாணவர்கள்
பல்வேறு போராட்டங்களை
முணைப்போடு செயல்படுகையில்
அதனை முடக்கிய அரசு நிர்வாகம்,
எந்தவொரு கவலையுமின்ற யார்
செத்தால் என்னவென்ற அலட்சிய
கண்ணோட்டத்தில் " தற்கொலை
பண்ணிக்கனும்னா உங்க வீட்ல
பண்ணிக்கோங்க" என்கிற ஆணவப்
பேச்சில் அதிகார வர்க்கத்தோடு தொடர்பு
வைத்துக்கொண்டு தானுமோர்
அதிகாரத்திமிரோடு மாவட்ட ஆட்சியர்
எனும் அதிகாரியாய் அரசியல்
வாதிகளுக்கு துணைபோய், அதன்
மூலம் பணம்பார்த்து கொழுத்த
மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் ???
மதுவை ஏற்று நடத்திக்கொண்டு
மக்களின் உயிருக்கு உயிரான
கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து
கல்வியை வியாபரமாக்கிவிட்டு அந்த
வியாபாரத்திலேயே இடைத்தரகர்களாக
செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த
மானங்கெட்ட அரசுகளின்
கலாச்சாரங்களை குற்றாவாளிக்
கூண்டிலேற்றி நீதியின்
நியாயத்தன்மைகளை "கலாச்சாரம்"
கட்டிக்காக்குமானால் கலாச்சாரம்
வெறும் மயிறுகள் இல்லையென
ஓரளவிற்கு தளர்த்தலாம், அதுவும்
குறிப்பாக ஒரளவிற்கு மட்டுமே,,,
ஏனெனில் இங்கே கலாச்சார மயிறுகள்
வெட்ட வெட்ட முளைத்துக்கொண்டே
இருப்பதனால், கொலையை
தற்கொலையாக மாற்றும் தந்திரத்தை
மிகக் கச்சிதமாக செயலாற்றுகிறது
இந்த கலாச்சார மயிறுகள்.
"அய்யாறு" இந்தப் பெயர் யாருக்குமே
அறியாமலிருக்கிறது . ஒருவேளை
"கலாச்சாரம்" நன்கறிந்திருக்கலாம்
காரணம் அது வெறும்
மயிறென்பதால்,,, அய்யாறு தலித்
என்பதனால் கழிவறையை சுத்தம்
செய்யச் சொல்லியும், வீட்டு
வேலைகளை செய்யச் சொல்லியும்
ஆதிக்க இந்துத்துவ பார்பான சாதி
இந்துக்களான பஞ்சாயத்துத் தலைவர்
சாந்தியும், அவரது கணவர்
செல்வராஜூம் தொடர்ச்சியாக
வதைசெய்து வன்கொடுமையின்
உச்சத்திற்கு தன்னிலை கலாச்சாரங்கள்
சென்றதால், தான் தற்கொலை செய்து
கொள்வதாக அய்யாறு கடிதம் எழுதி
வைத்துவிட்டு தூக்கில் தொங்குகிறார்.
தலித் என்பவர்கள் மனித மலம்
அள்ளுபவர்கள், சாக்கடை சுத்தம்
செய்பவர்கள் , இன்ன பிற
இழிதொழில்களெல்லாம் அவர்கள்
மட்டுமே செய்ய வேண்டியவை என
கற்பிதம் கொண்டிருக்கும் "கலாச்சாரம்"
வெறும் மயிறுகள் அன்றி
வேறென்னவாக இருக்க முடியும்.
மனிதனின் மலத்தை மனிதனே
அள்ளும் அவல நிலை கொண்டிருக்கிற
இந்நாட்டிலும், இதனால்
வாழ்வாதாரம் இழந்து தெருவொரத்து
வாசிகளாய், சாக்கடைகளை சுத்தம்
செய்வதற்கு வலுக்கட்டாயமாக
தொட்டிக்குள் இறக்கிவிட்டு மரணித்து
போகும் போது பிணங்களை வெறும்
வேடிக்கை பொருளாய் மாற்றியிருக்கும்
இந்த "கலாச்சாரம்" வெறும்
மயிறுகளாய் குத்தி நிற்கிறது
உழைப்பாளர் வர்க்கத்தின் உடலை
தின்று அதுமட்டும் வளர்ந்துகொண்டு,,,
எதற்கும் எவ்வித மாற்றத் தீர்வுக்கும்
முன்வராத கலாச்சாரம் வெறும்
மயிறுகள் மட்டுமே.
கல்வி தனியார் மயத்திடம்
ஒப்படைத்திருப்பதனாலும், கல்வி
முறையில் கணக்கற்ற குளறுபடிகள்
இருப்பதனாலும், பெற்றோர்கள் தங்கள்
ஆழச் சிந்தனைகள் மூலம் பிள்ளை
மாணவர்களிடம் மன தைரியத்தை
ஊட்ட மறந்ததாலும், மாணவச்
செல்வங்களின் மன அழுத்தத்தை
போக்கும் வகையில் கலாச்சார
கட்டமைப்புகள் முடுக்கி விடப்படாத
நிலையாலும் தஞ்சை தனியார்
கல்லூரி ஒன்றில் சுலோச்சனா எனும்
மாணவி தன் கல்லூரியல் படிக்கும்
அதே மூத்த மாணவிகளால்
மிகக்கடுமையான வார்த்தைகளின்
மூலமும், ரேகிங் எனப்படும் கலாச்சார
மயிறினால் தற்கொலை செய்து
கொண்டிருக்கிறார். என்றால்
புகுத்தப்பட்ட போலியான கலாச்சாரம்
வெறும் மயிறுகளாக திரிக்கப்பட்டு
மாணவியின் கழுத்தை இறுக்கி கொலை
செய்திருக்கிறது என்பது தானே
உண்மையாக இருக்கிறது. இவ்வாறான
கலாச்சாரங்களை இச்சமூகத்தில்
புகுத்தியதன் விளைவாக தினமொரு
கொலை நிகழ்த்திவிடுகிறது தற்கொலை
என்கிற பெயரில்,,, கலாச்சாரம்
புகுத்திய சமூகமோ எவ்வித
எதிர்வினையும் ஏற்படுத்தாமல்
தன்னுடைய கலாச்சாரமே பெரிது
என்றும் உயர்வானது என்றும்
சொல்லிக்கொண்டு பார்ப்பானியத்தை
தூக்கிச் சுமந்து கொண்டும், சாதியத்தை
ஆரத்தழுவிக்கொண்டும்,
தனியாரிடத்தில் தன்மானத்தை
விற்றும், கல்வியை கலவியாக
மாற்றிக்கொண்டும், முதலாளியத்தை
புகழ்ந்து பேசிக்கொண்டும்
திரிகிறதென்றால் எப்போதும், யாருக்கும்
பயப்படாமல் உரக்கச் சொல்ல
கடமைபட்டிருக்கிறது " கலாச்சாரம்
வெறும் மயிறுகள் மட்டுமே"
கலாச்சாரம் வெறும் மயிறுகள்
மட்டுமே"

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...